என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சலூன் தொழிலாளி"
- விஜயன் கேரள மாநிலம் கொல்லத்தில் சலூன் கடை நடத்தி வந்தார்.
- திருவிழாவில் பங்கேற்க விஜயன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசையை சேர்ந்தவர் விஜயன்(வயது 28). இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கணக்கப்பிள்ளை வலசையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக விஜயன் நேற்று மாலையில் கொல்லத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவர் தென்மலை அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று விஜயன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்