search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நீதிமன்றம். நிவாரண தொகை"

    • மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.23 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டது.
    • வாகன விபத்து வழக்குகள், சிவில், குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் ராமநாதபுரம், முதுகுளத்துார், பரமக்குடி, ராமேசுவரம், திருவாடானை, கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் நடந்தது. இதில் 8 அமர்வுகளில் வங்கி காசோலை வழக்குகள், கடன் வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில், குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    ராமநாதபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி கதிரவன், கூடுதல் மகிளா நீதிபதி இ.வெர்ஜின்வெஸ்டா, நீதித்துறை நடுவர் எண் 2 பிரபாகரன், வழக்கறிஞர் சங்க இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 535 வழக்குகள் எடுத்துக்கொண்டு அதில் 57 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு தீர்வுத்தொகையாக 2 கோடியே 23 லட்சத்து 568 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

    ×