search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துக்கள்"

    • உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
    • இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

    தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

    புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

    தேங்காயின் அதிகபட்ச நன்மைகளை பெறுவதற்கு, நீங்கள் தேங்காய்யை பச்சையாக சாப்பிடுவதே நல்லது.

    எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.

    தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியைக் கொடுக்கிறது. அதோடு இதில் நோய் எதிர்க்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை இரண்டு மடங்காகக் அதிகரிக்கச் செய்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் பருவகால நோய் தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.


    தலைமுடி உதிர்வை தடுக்க இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

    தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும். மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது

    தேங்காயை சரியான அளவு எடுத்துக் கொண்டால் எந்த வித விளைவும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது வாயுப் பிரச்சினை, கலோரி அதிகமாகுதல், சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் அலர்ஜி போன்றவைகளும் ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு சரியான அளவில் தேங்காயை பயன்படுத்தி எல்லா விதமான நலன்களையும் பெறுங்கள்.

    • பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல்.
    • சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    தென்னிந்த பண்டிகைகளில் பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம். நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சுவையைப் போலவே சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    சர்க்கரைப் பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் உணவுப்பொருட்களில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

    குளூட்டன் இல்லாத பச்சரிசி, ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுப்பொருளாகும். இதில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் சிறு மூளையின் இயக்கத்தை தூண்டக்கூடியவை. அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.

    பச்சரிசியில் கால்சியம், மெக்னீசியம். பாஸ்பரஸ், பொட்டாசியம். இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் ஏ. பி ஆகிய சத்துக்கள் உள்ளன. பாசிப்பருப்பில், புரதச்சத்து அதிக அளவில் உள்ளது, இது உடலை குளிர்ச்சிப்படுத்தும், இதில் இருக்கும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் மெக்னீசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற சத்துக்களும் பாசிப்பருப்பில் உள்ளது. இவை அனைத்தும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

    இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் வெல்லத்தில் வைட்மின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. அவை சருமம் உள்பட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டமளிக்கும். வெல்லம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை போக்கும்.

    சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. வைட்டமின் ஏ. ஈ போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன. இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கும். முந்திரி, திராட்சை போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை.

    பண்டிகை தினத்தில் விரதத்தை முடித்தவர்கள் சர்க்கரை பொங்கலை சாப்பிடும்போது அவர்களுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும். சர்க்கரைப் பொங்கலில் வாசத்திற்காக சேர்க்கப்படும் ஏலக்காயில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    அதனால் தான் ஒவ்வொரு விசேஷத் திலும் சர்க்கரைப் பொங்கல் பிரதான உணவாக இருக்கிறது. கோவில்களில் நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    ×