search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரமான கல்வி"

    • தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட முக்கிய துறைகளின் விருதுகள்.
    • சுற்றுலா துறைக்கு கிடைத்த 3 விருதுகள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் தமிழக வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, சுத்தமான குடிநீர், தொழில் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், சாலை வசதிகள் என அனைத்து வசதிகளையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறார்.

    இது தவிர, மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், மகளிர் இலவச பஸ் பயணம், காலை உணவுத் திட்டம் என மாநில அரசால் நடை முறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.

    இதன் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசு சமீபத்தில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங் களை ஆய்வு செய்து ஒவ்வொரு மாநிலங்களும் திட்டங்கள் எந்த அளவுக்கு முன்னேற்றத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மாநிலங்களின் மதிப்பெண் அடிப்படையில் தமிழகம் 13 துறைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னணியாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

    அதில் நிதி ஆயோக் அறிக்கைபடி 11 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்தின் மதிப்பெண் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

    வறுமை ஒழிப்பில் தமிழகத்தின் செயல்பாடு தேசிய அளவில் 100-க்கு 72 என்பதை தாண்டி 92 சதவீதமாக அதிகரித் துள்ளது.

    இதேபோல் தரமான கல்வி வழங்குவதில் தேசிய சராசரி 61 புள்ளிகளை தாண்டி 76 புள்ளிகள் பெற்று முன்னிலையில் தமிழகம் உள்ளது. சுத்தமான குடிநீர், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, தொழில் புத்தாக்கம், உள் கட்டமைப்பு, கால நிலை நடவடிக்கைகள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்தின் மதிப் பெண்கள் தேசிய சரா சரியை விட அதிகமாக உள்ளதாக அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வறுமையை ஒழிக்கும் இலக்கில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் முறையே 81.5 சதவீதம் மற்றும் 47 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 57.6 சதவீதம் மற்றும் 28.4 சதவீதத்தை விட அதிகமாகும்.

    இதேபோல் கிராமப்புறங் களில் வாழும் மக்களில் 81.87 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பாதுகாப் பான மற்றும் போதுமான அளவு குடிநீர் கிடைத்து வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

    செல்போன் பயன்பாட்டை எடுத்துக் கொண்டால் 92.8 சதவீதம் பேர் அதாவது குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு செல்போன் வைத்திருப்பதும் ஆதார் மூலம் இணைக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளிவிவர சதவீதம் 97.94 என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழ்நாடு பல துறைகளில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதுடன் சிறந்த முறையில் திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளதால் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகவும், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் சமூக மற்றும் கல்வி சார்ந்த துறையில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட முக்கிய துறைகளின் விருதுகள்.

    * தொழில் முன்னேற்றம் சம்மந்தமாக தமிழகத்தில் புத்தொழில் நிறு வனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்ததற்காக 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் 'லீடர்' விருது.

    * வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்பட்ட சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட விருது.

    * ஸ்டார்ட் அப் இந்தியா வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் சிறந்த புத்தொழில் சூழமை வினை கட்டமைக்கும் மாநிலங்களில் முதல் தரவரிசைப் பிரிவில் தமிழகம் இடம் பிடித்ததற்காக சான்றிதழ்.

    * உயிர்நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ் நாட்டுக்கு முதல் மாநிலத்துக்கான விருது மற்றும் தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தின் கீழ் ராமேஸ்வரம் நகராட்சி போத்தனூர் பேரூராட்சிக்கு கிடைத்த விருதுகள்.

    * பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்திற்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சிறந்த செயல்திறனுக்கான விருது.

    * நம் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோவை மாவட்டம் பிச்சானூர் ஊராட்சிக்கு மத்திய அரசு வழங்கிய விருது.

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 2023-ம் ஆண்டுக்கு சிறந்த மனிதருக்கான விருது

    தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு புதுப்பித்தல் ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக கிடைத்த முத லீட்டு ஊக்குவிப்பு விருது

    தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றதற்கான விருது

    தேசிய அளவில் சிறப் பாக செயல் புரிந்த தமிழ கத்தை சேர்ந்த 12 ஊராட்சி களுக்கு மத்திய அரசு விருது

    பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோவை, தஞ்சை, கரூர் கலெக்டர்களுக்கு விருதுகள்

    சுற்றுலா துறைக்கு கிடைத்த 3 விருதுகள்

    சுகாதாரத்திற்கான மதிப்பீட் டில் தேசிய அளவில் 3-ம் இடம் பெற்றதற்கும், சுஜாலம் 1.0 எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத் தில் 5-ம் இடம் பெற்றதற் கும் கிடைத்த விருதுகள்

    மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால் தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகத்துக்கு கிடைத்த விருதுகள்'.

    • தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்திற்கு வெளிமாநில மாணவர்கள் வருகிறார்கள்.
    • மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ் ணன்கோவில் வி.பி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா வுக்கு கல்லூரி சேர்மன் வி.பி.எம்.சங்கர் தலைமை தாங்கினார். தாளாளர் பழனிசெல்வி சங்கர் முன் னிலை வகித்தார்.

    மாணவிகளுக்கு பட்டம்

    கல்லூரி துணைத்தலை வர் தங்க பிரபு, சிந்துஜா தங்கபிரபு ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றனர். விழாவில் அன்னை ெதரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந் தர் டாக்டர் கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1,500 மாணவிக ளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப் போது அவர் பேசியதாவது:-

    பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவிக ளுக்கு பட்டம் வழங்குவத மிகவும் பெருமையாக உள் ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

    தரமான கல்வி

    இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழகத்தில் கல் வியின் தரம் சிறப்பாக உள் ளது. எனவே பல்வேறு மாநி லங்களில் இருந்தும், பல் வேறு நாடுகளில் இருந் தும் இந்த தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்தை நோக்கி மாணவ, மாணவி கள் வருகிறார்கள்.

    எனவே தரமான கல் வியை ஆசிரியர்கள் மாண–வர்களுக்கு போதிக்க வேண் டும். கல்வி கற்பதன் மூலம் மட்டுமே ஒரு உண்மையான, தெளிவான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆகவே மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பட்டமளிப்பு விழாவில், கல்லூரி இயக்குனர் நாச்சியார் கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து
    கொண்டனர்.

    ×