என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணப் பரிவர்த்தனை"

    • மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், ஏற்கனவே நிதி இல்லாமல் தவிக்கின்றனர்.
    • இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்.

    வங்கிகள் மாத வரம்பிற்கு மேல் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

    இந்த முடிவை விமர்சித்து மு.க,.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.

    அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

    இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.

    ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

    இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது.
    • டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அந்த வகையில் யு.பி.ஐ. முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

    2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டி உள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    2017-ல் ரொக்கப் பரிவர்த்தனைகள் 90 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்து. இதற்கு 2016-ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதே முக்கிய காரணம்.

    அதே சமயம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் யு.பி.ஐ. வாயிலான பணப் பரிவர்த்தனை 900 சதவீதம் அதிகரித்தது.

    ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது. யு.பி.ஐ.யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை இலகுவானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

    டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.), இண்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனத்தை (என்.ஐ.பி.எல்.) உருவாக்கி ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற சேவையில் இணைந்து உள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணைய உள்ளன.

    • இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.
    • வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுகிறது.

    ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஓடிபி [OTP] எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கி சேவைகள், டெலிகாம் சேவைகள் என பல துறைகளில் ஓடிபி இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஓடிபி மெசேஜ் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று டெலிகாம் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.

     

    ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அந்த அந்த விதிப்படி எல்லா ஓடிபி மெசேஜ்களையும் டிராய் கண்காணிக்கும். அப்படி டிராக் செய்யப்பட்ட ஓடிபிகள் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் பயனர்களுக்கு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும்.

    இதனால் தங்களுக்கு அனுப்பும் ஓடிபிகளை பயனர்களால் பார்க்க முடியாது. வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுத்தப்படும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஓடிபிகளை நேரடியாக அல்லாமல் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் ஓடிபி எண்களை அனுப்புகிறது.

    எனவே அவ்வாறு செயல்படும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடியதாக இல்லாவிட்டால், அந்த மெசேஜ்கள் தடைபடும். தற்போதுள்ள பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இந்த சிக்கல் உள்ளது.

    குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் சார்ந்திருக்கும் டெலி மார்கெட்டிங்கில் இந்த சிக்கல் உள்ளதால் அந்த அவற்றின் ஓடிபி சேவைகள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இந்நிறுவனங்கள் டிராய் இடம் கோரிக்கை வைத்துள்ளது.

    ×