என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாதனங்கள்"

    • அவ்வாறு நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
    • 4-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதனங்களும் பழுதானது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அவ்வாறு நேற்று இரவு பண்ருட்டி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இதில் பெரிய நரிமேடு கிராமத்தில் வக்கீல் சண்முகத்திற்கு விளை நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் தென்னை மரம், அருகில் இருந்த மின் மோட்டார், மின்சாதனங்கள் போன்றவைகள் சேத மானது. மேலும், அங்கிருந்த 4-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதனங்களும் பழுதானது.

    ×