என் மலர்
நீங்கள் தேடியது "மாவோயிஸ்ட்கள்"
- சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது
- நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது
இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
மத்திய இந்தியாவில் உள்ள அதிகளவு வனப்பிரதேசங்களை கொண்ட மாநிலமான சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன.
நாளை அங்கு 20 இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலும், மீதமுள்ள 70 இடங்களுக்கு வரும் 17-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கெனவே அங்கு அமலில் உள்ளது.
அம்மாநில பஸ்டார் (Bastar) பகுதியில் 12 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் பெருமளவு உள்ள பகுதி என்பதால் சுமார் 60 ஆயிரம் சீருடை பணியாளர்களை காவலுக்கு தேர்தல் ஆணையம் பணியில் அமர்த்தி உள்ளது. இவர்களில் 40 ஆயிரம் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) மற்றும் 20 ஆயிரம் மாநில காவல்துறையினர் அடங்குவர். இப்பணியில் பெண் கமாண்டோ படையினரும், நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு வீரர்களும் அடங்குவர்.
மொத்தம் 5304 வாக்குச்சாவடிகள் நாளைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக 149 வாக்குச்சாவடிகள் காவல் நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தேர்தலில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள்.
சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.
- கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வாங்கி உள்ளார்.
- வேலூரில் 3 ஆண்டுகள் பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.
வேலூர்:
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, மாவோயிஸ்டு பண்ணைபுரம் கார்த்திக் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில், 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஓசூரில் நடந்த அதிரடி வேட்டையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திக்கின் கூட்டாளி சந்தோஷ்குமார் என்பவர் பிடிபட்டார். இவரிடம் விசாரித்ததில் வேலூரைச் சேர்ந்த மாவோயிஸ்டு ராகவேந்திரா (வயது 36) என்பவர் தலைவராக செயல்பட்டது தெரியவந்தது.
கேரளாவில் கைதான ராகவேந்திராவை காவலில் எடுத்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ராகவேந்திராவின் சொந்த ஊர் வேலுார் சத்துவாச்சாரி. இவரின் தந்தை வணிக வரித்துறையில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ராகவேந்திரா, பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்தார். தன் பெயரை வினோத்குமார், ரவிமுகேஷ் என மாற்றி, கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வாங்கி உள்ளார்.
கேரள மாநிலம், எடக்கரை வனப்பகுதியில், 20 மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு, ராகவேந்திரா தான் தலைமை தாங்கினார்.
இவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையின், தமிழகம், கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளை, சிறப்பு மண்டலமாக அறிவித்து செயல்பட்டனர்.
கடந்த, 2015-ல், மாவோயிஸ்டு ரூபேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின், மாவோயிஸ்டுகளை வழிநடத்தும் பொறுப்பை, ராகவேந்திரா ஏற்றார்.
அதே ஆண்டு, கேரள மாநிலம், நிலம்பூர் வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் ஆயுதப்பயிற்சி பெற்றனர். இதில், குப்பு தேவராஜ் என்பவர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாலக்காடு மாவட்டம், மஞ்சக்கண்டியில், மாவோயிஸ்டு மணிவாசகம், ரேமா, பெரிய கார்த்திக், அரவிந்த் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
கடந்த, 2019-ல், வயநாடு பகுதியில் மாவோயிஸ்டு, 'கேடர் லீடர்' ஜலீல், 2020-ல் மற்றொரு கேடர் லீடர் வேல்முருகன், 'என்கவுண்டர்' செய்யப்பட்டனர்.
இதனால், ராகவேந்திரா தலைமையிலான மாவோயிஸ்டுகள், நிலை குலைந்தனர்.
அமைப்பை பலப்படுத்த, ராகவேந்திரா தலைமையில்பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோர், தமிழகத்தில் வேலுாரிலும், கேரளாவில் கண்ணாரிலும் ரகசிய கூட்டங்கள் நடத்தினர். வேலூரில் 3 ஆண்டுகள் பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.
கடந்த 2021-ல் நிலம்பூரில் மீண்டும் ஆயுதப் பயிற்சி பெற முயன்றனர். அப்போது ராகவேந்திரா சிக்கினார். மேலும் சமீபத்தில் ஆற்காட்டை சேர்ந்த மாவோயிஸ்டு ஒருவர் பெங்களூரில் சரணடைந்தார்.
இதுகுறித்து தொடர்ந்து ராகவேந்திராவிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.