என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீனவர்கள் குடும்பம்"
- இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கப்பட்டது.
- காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் கலந்து கொண்டு அனைவருக்கும் ஜூஸ் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது 10 விசைப்படகுகள் மற்றும் 64 மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து மீன வர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டமைப்பு சார்பில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் இறுதியில் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு அனைவருக்கும் ஜூஸ் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
இதனைதொடர்ந்து, அவ ரது சொந்த நிதியில் இருந்து இலங்கை சிறையில் உள்ள 64 மீனவர்களின் குடும்பத்தினரின் செலவுக்காக தலா 5 ஆயிரம் 54 பேருக்கும் வீதம் 3.20 லட்சம் ரொக்க பணம் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்