என் மலர்
நீங்கள் தேடியது "சந்திரயான் 4"
- சந்திரயான்-1 விண்கலம் நிலவின் தென்பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்தது.
- சந்திரயான்-3 திட்டத்தின் மேற்கொள்ளப்படும் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் நீட்சியாக சந்திரயான்-4 இருக்கும்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், அடுத்து நிலவை நோக்கிய சந்திரயான்-4 திட்டத்தை ஜப்பான் உடன் இணைந்து இந்தியா செயல்படுத்த உள்ளது. நிலவு துருவ ஆய்வு பணி ('லூபெக்ஸ்') என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் 'ரோபோட்' எந்திரங்களை நிலவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 'லூபெக்ஸ்' திட்டமே சந்திரயான்-4 எனும் பெயரில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்தியாவும், ஜப்பானும் இணைந்து எந்திர ரோபோடிக் தொழில்நுட்ப ரோவர் மற்றும் லேண்டரை நிலவிற்கு அனுப்பும் திட்டம் தான் 'லூபெக்ஸ்'. இந்த திட்டத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ), ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான (ஜாக்ஸா) இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சந்திரயான்-1 விண்கலம் நிலவின் தென்பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்தது. இந்த நிலையில், சந்திரயான்-2 திட்டத்திற்கு பிறகு சந்திரயான்-3 திட்டம் 'லூபெக்ஸ்' ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் தரையிறங்காத காரணத்தால், சந்திரயான்-2 திட்டத்தின் நீட்சியாக சந்திரயான்-3 இருந்தது.
தற்போது சந்திராயன்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டது. இதையடுத்து இஸ்ரோவின் அடுத்த கட்ட நிலவின் ஆய்வு 'லூபெக்ஸ்' ஆக இருக்கும் என கூறப்படுகிறது. சந்திரயான் திட்டத்தின் நீட்சியாக 'லூபெக்ஸ்' இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கான முன்னோட்டமாக இந்திய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நேரில் சந்தித்து 'லூபெக்ஸ்' திட்டம் குறித்தும், சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா விண்கலம் எடுக்கும் தரவுகளை பகிர்வது தொடர்பாக விவாதித்துள்ளனர். முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 'லூபெக்ஸ்' திட்டத்தில் உள்ள லேண்டர் இந்தியா சார்பிலும், ரோவர் ஜப்பான் சார்பிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.
சந்திரயான்-3 திட்டத்தில் அறிவியல் ஆய்வுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்தான அனைத்து தகவல்களும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்திற்கும் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தின் மேற்கொள்ளப்படும் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் நீட்சியாக சந்திரயான்-4 இருக்கும். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக 'லூபெக்ஸ்' திட்டம் இருக்கும். இந்த திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவருக்கு ஆயுட்காலம் 6 மாதங்களாகும். இதில் பொருத்தப்பட உள்ள லேண்டர் மற்றும் ரோவரின் எடை 350 கிலோவாகும். நிலவின் மேற்பரப்பில் துளையிடக் கூடிய எந்திர கைகள் 'லூபெக்ஸ்' திட்டத்தில் ரோவரில் இருக்கும். இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் படிமங்களையும், நீர் மூலக்கூறுகளையும் சேகரிக்க முடியும்.
சந்திரயான்-3 விண்கலம் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் சந்திரயான் 4-ல் பணியாற்ற மிகவும் ஆர்வத்தோடு இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 2025-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- சந்திரயான்-3 திட்டத்தில் இடம்பெற்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் சுற்றளவில்தான் வலம் வந்து ஆய்வு செய்தது.
- சந்திரயான் 4-ல் அனுப்பவுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கி.மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் 'விக்ரம்' லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
அடுத்த கட்டமாக ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. சந்திரயான்-4 திட்டம் லூபெக்ஸ் எனும் பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ரோபோட் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்வதுடன், அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, "சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளன. இவற்றின் ஆயுட் காலம் 6 மாதங்களாகும். இது முந்தைய திட்டங்களைவிட சவாலானதாகும். ஏனெனில், விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காக 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட உள்ளன. மேலும், அதிலுள்ள ரோவரின் எடை மட்டும் 350 கிலோவாகும். ரோவரில் நிலவின் மேற்பரப்பில் துளையிட வசதியாக நவீன இயந்திரங்கள் இடம்பெறும். இதன்மூலம் நிலவில் உள்ள மணற் துகள்கள், நீர் மூலக்கூறுகள் போன்ற மாதிரிகளை எளிதாகச் சேகரிக்க முடியும்.
அதேபோல், சந்திரயான்-3 திட்டத்தில் இடம்பெற்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் சுற்றளவில்தான் வலம் வந்து ஆய்வு செய்தது. ஆனால், சந்திரயான் 4-ல் அனுப்பவுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கி.மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளையும் முடித்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்துக்கான முதற்கட்ட சோதனையை நடத்தி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நிலவின் இருள் நிறைந்த தென்துருவப் பகுதிகளை முழுமையாக ஆராய்வதே சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கமாகும்" என்றனர்.
- சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.
- வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் நிலவிலேயே இருக்கும் நிலையில், சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் விண்கலம் நிலவில் தரையிறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.
இந்த விண்கலம் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பி வந்து பூமியில் அது குறித்து ஆராய்ச்சி நடைபெற உள்ளது.
2040க்குள் இந்த விண்கலத்தை பூமியில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.20,193 கோடி செலவில் திட்டம் ககன்யான் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
- ஒரு ராக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ராக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.
- சந்திரயான்-3 திட்டத்தில் 26 கிலோ எடையிலான லேண்டர் பயன்படுத்தப்பட்டது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் நிலவில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளை ஆராய்ச்சிக்கு எடுத்து வர முடிவு செய்தனர். இதற்காக 'சந்திரயான்-3' திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, 'சந்திரயான்-4' விண்கலத்தை தயாரித்து உள்ளனர். இந்த திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மென்மையாக தரையிறங்கவும், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ச்சிக்காக பூமிக்கு திருப்பி கொண்டுவருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இதனை வருகிற 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 'சந்திரயான்-4' விண்கலம் 9 ஆயிரத்து 200 கிலோ எடை கொண்டதாகும். சந்திரயான்-3 திட்டம் போல் இல்லாமல், இந்த திட்டத்திற்கு ஆராய்ச்சி கருவிகளை 5 தொகுதிகளாக பிரித்து 2 ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஒரு ராக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ராக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன. ஏவும் பணிக்கு எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் ஒரு மாத இடைவெளியில் ஏவப்படுகிறது. ஒரே திட்டத்திற்கு 2 ராக்கெட்டுகள் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும்போது, 'விண்வெளி நிலையத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விண்ணில் 2 செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைப்பது மற்றும் பிரிப்பது போன்ற தொழில்நுட்ப அறிவு மிக முக்கியமாக தேவைப்படுகிறது.
'சந்திரயான்-4' திட்டத்தில் 2 ராக்கெட்டுகள் தனித்தனியாக ஏவிய பின்னர், பூமி சுற்றுப்பாதையில் அவற்றை இணைக்கும் பணி நடக்கும். அதற்கு பிறகு, உந்துவிசை தொகுதி அடுத்து விண்கலத்தை நிலவு சுற்றுப்பாதையில் செலுத்தும். அங்கு பிரிந்த பிறகு, மீதம் உள்ள 2 தொகுதிகள் பிரிந்து நிலவு மேற்பரப்பில் தரையிறங்கி மாதிரிகளை சேகரிக்கும்.
தொகுதிகளில் ஒன்று நிலவு சுற்றுப்பாதையில் மீதமுள்ள தொகுதிகளுடன் இணைக்கப்படும். பின்னர் மறு நுழைவு தொகுதிக்கு நகர்த்தப்படும். இது மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும். இந்த பணிக்கு அதிக திறன் கொண்ட உந்துவிசை அமைப்பு, சிறப்பு ஆராய்ச்சி கருவிகள் மற்றும் மாதிரி சேகரிப்புக்கான ரோபோ கருவிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியமாகிறது. இவை அனைத்திற்குமான பணிகள் நடந்து வருகின்றன.
சந்திரயான்-5 என்று அழைக்கப்படும் நிலவு துருவ ஆய்வு திட்டம் (லூபெக்ஸ்) இஸ்ரோ-ஜப்பானுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த கூட்டுப்பணி நிலவில் தரையிறங்க உதவும் லேண்டர் எந்திரத்தை உருவாக்க உள்ளது. விண்வெளியில் உள்ள விண்வெளி நிலையத்திற்கு இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து கருவிகளைக் கொண்டு செல்லும். விண்கலத்தின் தாங்கும் சக்தி 6 ஆயிரத்து 200 கிலோவாக இருக்கும். அதே நேரத்தில் லூபெக்ஸ் ரோவர் 350-400 கிலோ எடையுள்ளதாக இருக்கும். இதுவே சந்திரயான்-3 திட்டத்தில் 26 கிலோ எடையிலான லேண்டர் பயன்படுத்தப்பட்டது.
இதற்கான திட்ட கட்டமைப்பில் பூமி மற்றும் நிலவு சுற்றுப்பாதைகளில் பல இணைப்பு மற்றும் பிரிப்பு சோதனைகளும் செய்ய இருக்கிறோம். அதற்கான உள் அமைப்பு, வடிவமைப்புகளை முடித்துவிட்டோம். தற்போது பல்வேறு துணை அமைப்புகளின் வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.