என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகே 47"

    • போலீசார் சுட்டதில் துப்பாக்கி குண்டு காயத்துடன் அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
    • 3 மாவோயிஸ்ட்டுகளையும் பிடிப்பதற்காக வனப்பகுதிகளில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கம்பமலை பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் மாவோயிஸ்ட்டுகள் தடுப்புபிரிவான தண்டர் போல்ட் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா தலப்புழா பேரிளா சம்பாரத்து கிராமத்தை சேர்ந்த வாடகை கார் டிரைவரான அனீஸ் என்பவரின் வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு 4 மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகளுடன் நுழைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கேரள தண்டர்போல்ட் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் அங்கு சென்றனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும், போலீசாரும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டபடி மோதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இந்நிலையில் சந்துரு (வயது36), உன்னி மாயா(31) ஆகிய 2 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் கைது செய்தனர். லதா, சுந்தரி ஆகிய 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்ட்டுகள் தப்பிவிட்டனர். போலீசார் சுட்டதில் துப்பாக்கி குண்டு காயத்துடன் அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கின்றனர்.

    அவர்களை பிடிக்க தண்டர்போல்ட் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சந்துரு மற்றும் உன்னிமாயா ஆகிய இருவரிடம் இருந்தும் ஏ.கே.47, இன்சாஸ் லைட் மெஷின்கன் உள்ளிட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

    அவர்களுக்கு இது போன்ற நவீன துப்பாக்கிகள் எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு வடமாநிலங்களில் இருந்து இந்த நவீன ரக துப்பாக்கிகள் கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அதுபற்றி போலீஸ் காவலில் உள்ள சந்துரு, உன்னிமாயா ஆகிய மாவோயிஸ்ட்டுகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சிறப்பு புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்த உள்ளனர்.

    அதே நேரத்தில் காட்டுக்குள் தப்பிச்சென்ற 3 மாவோயிஸ்ட்டுகளையும் பிடிப்பதற்காக வனப்பகுதிகளில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதிகளில் ஆளில்லாத விமானத்தை பறக்கச்செய்து போலீசார் கண்காணித்தனர். ஆனால் தப்பிச்சென்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    • வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.
    • செலக்ஷன் கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பினார்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ்காரர் ஒருவர் தனது சக ஊழியரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வடக்கு காஷ்மீரின் சோபோரில் இருந்து ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் உள்ள துணைப் பயிற்சி மைய (எஸ்டிசி) தல்வாராவுக்கு இரண்டு காவலர்கள், மற்றொரு சக ஊழியருடன் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    காலை 6:30 மணியளவில் உதம்பூரின் ரெஹெம்பல் பகுதியில் உள்ள காளி மாதா கோவிலுக்கு அருகே போலீஸ் வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.

     

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அதிகாரிகள், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வாக்குவாதத்தில் டிரைவரை தலைமை கான்ஸ்டபிள் தனது ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார் என்று தெரிவித்தனர்.

    வாகனத்தில் பயணித்த மற்றொரு நபரான தேர்வு செலக்ஷன் கிரேடு கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பியதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

     

    ×