என் மலர்
நீங்கள் தேடியது "சீன நிறுவனம்"
- இந்தியா 2020ல் இந்த செயலியை தடை செய்து விட்டது
- வெறுப்பு உணர்ச்சியை தூண்ட பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்
சீனாவின் "பைட்டேன்ஸ்" (ByteDance) எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது "டிக்டாக்" (TikTok) எனும் மென்பொருள் செயலி. 3 நொடிகளில் இருந்து 10 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய வீடியோக்ளை பயனர்கள் பதிவேற்றம் செய்யவும், கண்டு ரசிக்கவும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், இச்செயலியின் செயல்பாடுகள் வெறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக உள்ளதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். கடந்த 4 வருடங்களில் இதன் காரணமாக 1647 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதை குறித்து ஆலோசிக்க நேபாள காவல்துறையின் சைபர் குற்ற பிரிவு, உள்துறை மற்றும் சீன செயலி நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று நேபாளம், சமூக கட்டமைப்பை குலைக்கும் ஆபத்து உள்ளதால் டிக்டாக் செயலியை தடை செய்வதாக அறிவித்தது.
தொழில்நுட்ப வழிமுறைகள் நிறைவடைந்ததும் தடை முழுவதுமாக செயலாக்கப்படும் என்றும் எந்த தேதியிலிருந்து தடை அமலுக்கு வரும் எனும் செய்தி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரேகா ஷர்மா அறிவித்தார்.
இந்நிலையில், டிக்டாக் செயலியை தடை செய்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் இதற்கு பதிலாக ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை விதித்து அதனை செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் நேபாள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ககன் தாபா கூறியுள்ளார்.
இந்தியா, டிக்டாக் செயலியை 2020-ஆம் ஆண்டே தடை செய்து விட்டது. அப்போது அச்செயலிக்கு 10 கோடிக்கும் மேல் பயனர்கள் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மேலை நாட்டு நிறுவனங்கள் நேபாளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாக கட்டாயம் அலுவலகங்கள் அமைத்தாக வேண்டும் என நேபாள அரசு உத்தரவிட்டிருந்தது.
- ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது.
- ஊழியர்கள் தங்களால் எண்ணக்கூடிய அனைத்து பணத்தையும் 15 நிமிடங்களுக்குள் வைத்திருந்தனர்.
சீன நிறுவனமான ஹெனான் மைன் கிரேன் தனது தொழிலாளர்களுக்கு 270 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்க போனஸை வழங்கியுள்ளது.
சீனாவில் 15 நிமிடங்களில் எண்ணக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நிறுவனம் ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை மேசையில் வைத்தது.
இந்த ஆண்டு இறுதியில் வழக்கமான போனசுக்குப் பதிலாக, சீன நிறுவனம் ஒரு தனித்துவமான நிகழ்வை ஏற்பாடு செய்தது. அங்கு பெரிய மேஜையில் மிகப்பெரிய அளவில் ரூ.70 கோடி வைக்கப்பட்டது.
நிறுவனம் 60-70 மீட்டர் நீளமுள்ள மேஜையில் பணத்தை அடுக்கி வைத்து, ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது.
பிறகு, ஊழியர்கள் 15 நிமிடங்களுக்குள் எவ்வளவு பணம் எடுக்க முடியுமா அவ்வளவு பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஊழியர்கள் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு போனஸ் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தது.
போட்டி வேகமாக இருந்தது, ஒவ்வொரு ஊழியரும் விரைவாக பணத்தைப் பிடுங்கி எண்ணத் தொடங்கினர்.
ஒரு ஊழியர் 15 நிமிடங்களில் 100,000 யுவான் (சுமார் S$18,700) வரை எண்ண எடுத்தார். அவர்கள் எடுத்த பணத்தை அவர்களுக்கே வழங்கப்பட்டது. இதன் வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது.