என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத் பூஜை"

    • தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் நவம்பர் 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் அடுத்தநாள் காலை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சென்றடையும்.
    • மறுமார்க்கமாக புவனேஷ்வரில் இருந்து நாளை மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் புறப்படும் சிறப்பு ரெயில் அடுத்தநாள் மதியம் தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து நாளை (15-ந்தேதி) மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06079) அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் சந்திராகாச்சியை சென்றடையும்.

    மறுமார்க்கமாக சந்திராகாச்சியில் இருந்து நவம்பர்16, 23-ந்தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06080) 18, 25-ந்தேதி காலை 9.35 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

    இதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் நவம்பர் 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06081) அடுத்தநாள் காலை 9.55 மணிக்கு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சென்றடையும்.

    மறுமார்க்கமாக புவனேஷ்வரில் இருந்து நாளை மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் 12.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06082) அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நீர் நிலைகளில் சூரியன் உதிக்கும் திசையில் தீப ஆராதனை.
    • சூரியனைப் போற்றி வணங்கும் பண்டிகை சத் பூஜை.

    சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் பண்டிகையாக சத் பூஜை கொண்டாடப்படுகிறது. சத் பூஜை' எனப்படும் பூஜை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சலிகள்' மத்தியில் இந்த திருவிழா மிகவும் பிரபலமானது. அவர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனை நோக்கி பூஜை செய்வார்கள்.

    தமிழர்கள் உழவர் திருநாளை பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கும் நிகழ்வு போல வடமாநிலத்தவர்கள் சூரியன் அஸ்த்தமனம் மற்றும் சூரிய உதயத்தை வணங்கும் சத் பூஜை நிகழ்வு நடைப்பெற்றது.

    சென்னையில் சவுகார்பேட்டை, வண்ணார்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவெற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதியை வசிக்கும் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் சென்னை எண்ணூர் கடற்கரை மற்றும் நீர் நிலைகளில் வழிபட்டனர்.

    வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பூ பழம் இனிப்புகள் மற்றும் கையில் கட்டக்கூடிய நோன்பு கயிறு உள்ளிட்டவைகளை கூடையில் வைத்து கொண்டு வந்து பெண்கள் 36 மணி நேரம் விரதம் இருந்து பாரம்பரிய உடை அணிந்து நெற்றியில் திலகமிட்டு தண்ணீரில் இறங்கி தீப ஆராதனைகளை செய்து, தங்களது குடும்பம் நன்மை வேண்டியும், வியாபாரம் செழிக்கவும் சூரிய ஆஸ்த்தமனத்தையும், மறுநாள் சூரிய உதயத்தின் போது சூரியனை வணங்கியும் ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    இந்த நிகழ்வில், சென்னையில் வசிக்கும் ஏராளமான வட மாநிலத்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நீர் நிலைகளில் சூரியனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 6:20 மணிக்கு கடற்கரை ஓரம் மற்றும் நீர் நிலைகளில் சூரியன் உதிக்கும் திசையில் தீப ஆராதனை செய்து வழிபட்டார்கள்.

    • சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகை.
    • சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சத் பூஜை கொண்டாட்டத்திற்காக டெல்லியில் நவம்பர் 7-ந்தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் அதிஷி அறிவித்துள்ளார்.

    டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்.

    சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகை, பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. இது சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    உண்ணாநோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட நான்கு நாள் சடங்குகள் மற்றும் மரபுகளின் கடுமையான வழக்கத்தை உள்ளடக்கியது.

    இதுதொடர்பாக முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தள பதிவில், இந்த முடிவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    சத் பண்டிகைக்காக நவம்பர் 7-ந்தேதி விடுமுறை அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . பூர்வாஞ்சலின் சகோதரிகள் விழாவை சிறப்பாக கொண்டாட முடியும். விடுமுறையை உறுதிப்படுத்தும் தனது கையொப்பமிடப்பட்ட உத்தரவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    • இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை.

    புதுடெல்லி:

    சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

    இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.

    இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.


    இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

    3-வது நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே நீர் நிலைகளில் திரளும் பக்தர்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு பக்தி பாடல்களை பாடி பிரார்த்தனை செய்வார்கள். இதையொட்டி டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

    • சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்.

    சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

    இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.

    இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

    இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.

    ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்.

    சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

    இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.

    இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

    இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.

    ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் பொதுமக்கள் நீராட டெல்லி அரசு தடை விதித்தது.

    இந்த தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவை நிராகரித்த நீதிமன்றம், யமுனை நதி மிகவும் மாசடைந்து இருப்பதால் அங்கு நீராடும் மக்களுக்கு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது ஆதலால் பாதுகாப்பான இடங்களில் சத் பூஜை கொண்டாடுங்கள் என்று கருத்து தெரிவித்தது.

    ×