search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலவை பெட்டி"

    • பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படுகிறது.
    • ஆண்டு வருமானம் 1.00 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    திருவாரூர்:-

    பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை சார்ந்த மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சலவை தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை சார்ந்த மக்கள் சுய தொழில் செய்து பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் இத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது,

    ஆண்டு வருமானம் 1.00 லட்சத்திற்கு மிகாமலும் 20 வயதிற்கு மேம்பட்ட ஆண் பெண் என இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர், மேலும் இத்திட்டத்திற்கு கீழ்கண்டுள்ளவாறு ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்.

    மனுதாரர் விண்ணப்பம், சாதிச்சான்று நகல், வருமானசான்று நகல், குடும்ப அட்டை நகல், 7 வருடங்களாக விலையில்லா சலவை பெட்டி அரசிடமிருந்து பெறவில்லை மற்றும் இவர் சலவை தொழில் செய்து வருகிறார் என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்று அசல், புகைப்படம்-2, ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று நகல் இணைக்கப்படல் வேண்டும்.

    எனவே, மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்,

    மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2,ஆம் தளத்தில் அறை எண் 84 உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இத்தகவலை திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    ×