search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு அபிஷேகம்"

    • மாசி மாதம் வரும் சிவராத்திரி விழா மகா சிவராத்திரி விழா.
    • பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் சிவராத்திரி விழா மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப் படுகிறது. சிவபெருமான் - பார்வதி தேவியின் திருமணத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருள் மற்றும் அறியாமை நீங்கி ஒளி பெறுவதை நினைவூட்டும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் சிவபெருமானை தியானித்து விரதம் இருப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானுக்கு நடைபெறும் நான்கு கால பூஜை மற்றும் அபிஷேகத்தை காண்பது பெரும் பேறாகக் கருதப்படுகிறது.

    சிவன் கோவில்களில் நாளை மாலை தொடங்கும் முதல் கால பூஜை படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. 2-ம் கால பூஜை காத்தல் தொழிலை செய்யும் திருமால், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. 3-ம் கால பூஜை சக்தி வடிவமான அம்பாள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது.

    4-ம் கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூதகணங்கள், மனிதர்கள், பிற உயிரினங்கள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. இந்த மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடித்து சிவபெருமானை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைத்து வாழ்வில் மகிழ்ச்சி அடையலாம்.

    அதன்படி இந்த ஆண்டு நாளை (8-ந்தேதி) மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நாளை மகா சிவராத்திரி விழாவையொட்டி நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடை பெறுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

     மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை யொட்டி நாளை மாலை முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய 4 கால பூஜை கள், சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.

    மகா சிவராத்திரி விழாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். மேலும் ஆன்மிக சொற்பொழி வுகள், இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     வடபழனி வேங்கீஸ்வரர் கோவில்

    சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்தி ரியையொட்டி நாளை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பிறகு இரவு 9மணி தொடங்கி அதிகாலை 4 மணி வரை நான்கு கால பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியில் அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

     கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்

    கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மாலையில் பிர தோஷ அபிஷேக பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. பிரதோ ஷம் மற்றும் சிவராத்திரி என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிக ரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிச னம் செய்திடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

     பாடி திருவல்லீஸ்வரர் கோவில்

    பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் நாளை காலை 6 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. மேலும் நாளை இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, 2 மணி, அதிகாலை 4.30 மணிக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இரவு முழு வதும் கோவில் வளாகத்தை சுற்றி பரதநாட்டியம், ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகி யவை நடைபெறுகின்றன.

     திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவில்

    திருவொற்றியூர் தியாக ராஜசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி முதல் கால பூஜை நாளை இரவு 9 மணிக்கும், 2-ம் கால பூஜை இரவு 11 மணிக்கும், 3-ம் கால பூஜை இரவு 2 மணிக்கும், 4-ம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடக்கிறது. இந்த நான்கு காலபூஜையும் ஆலயத்தின் வாயு பாகத்தில் இருக்கும் திருவொற்றிஸ்வர பெருமானுக்கு நடைபெறும். ஆதிபுரிஸ்வர பெருமானுக்கு இரவு 11 மணிக்கு சங்கபி ஷேகம் நடைபெறுகிறது.

    இதேபோல் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நாளை மாலை முதல் நான்கு கால பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறு கிறது. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி களும் நடக்கிறது.

    • ஒவ்வொரு மாதமும் மூல மந்திர ஹோமம் நடைபெறும்.
    • பக்தர்களுக்கு பல விதமான வளங்களை தரும் சக்தி கொண்டது.

    திருவள்ளூர் பெரியகுப்பம், ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகரில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் ஒரே பச்சைக் கல்லால் ஆனது. பெங்களூர் ஆர்சன் மடப்பகுதியில் இருந்து கொண்டு வந்து இங்கு நிறுவப்பட்டதாகும்.

    இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூல மந்திர ஹோமம் நடைபெற்று வருகிறது. அனுமன் ஜெயந்தி மற்றும் முக்கிய விழா காலங்களில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, வடைமாலை சாற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இந்த விஸ்வ ரூப பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் பஞ்சமுகங்களும் வழிபடும் பக்தர்களுக்கு பல விதமான வளங்களை தரும் சக்தி கொண்டது.

     பஞ்சமுகங்களும்.. நன்மைகளும்...

    கிழக்கு நோக்கியபடி இருக்கும் ஆஞ்சநேய சுவாமியின் முகம், பாவங்களை நீக்கி, தூய்மையான மனதைக் கொடுக்கும். தெற்கு நோக்கியபடி அமைந்த நரசிம்ம சுவாமியின் முகம், எதிரிகள் மீதான பயத்தை நீக்கி, வெற்றியை பெற்றுத் தரும். மேற்கு நோக்கியபடி இருக்கும் மகா வீர கருட சுவாமியின் முகம், பில்லி சூனியம் - ஏவல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை போக்கும்.

    உடலில் உள்ள எல்லா விஷத் தன்மையையும் நீக்கும். வடக்கு நோக்கிய லட்சுமி வராக சுவாமியின் முகம் கிரக தோஷங்களை போக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களை அளிக்கும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, மேல்நோக்கியபடி அமைந்த ஹயக்ரீவ சுவாமியின் முகமானது, சுபிட்சமான வாழ்வையும், கல்வி, தொழில், பயிற்சியில் தேர்ச்சி, கணவன் - மனைவி ஒற்றுமை, புத்திரபாக்கியம் போன்றவற்றை நல்கும்.

    இந்த 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட செவ்வாய் மற்றும் சனிக்கிழமை உகந்த நாட்கள் ஆகும். கோவில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.

    அமைவிடம்

    சென்னையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இந்த ஆஞ்சநேயர் திருத்தலம். ரெயில் மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ரெயில் நிலையத்திற்கு அருகாமையிலேயே இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.

    • புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
    • மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலானது முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்த கோவிலில் சிவபெருமான் மங்களநாதராகவும், அம்மன் மங்களநாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடராஜருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.

    மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையை காப்பதற்காக மரகத நடராஜர் மீது ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இருக்கும். ஆண்டில் ஒருநாள், அதுவும் ஈசனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தனக்காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம்.

    இதன்படி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக காலை 7.45 மணி அளவில் நடராஜர் சன்னதி நடைதிறக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.

    பின்னர் மரகத நடராஜருக்கு சந்தனம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.

    தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, நான்கு ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று (புதன்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜர் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இதைத்தொடர்ந்து நடராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்படும்.
    • சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம்.
    • சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகம், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    ×