search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை காளான்"

    • போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • சிறப்புக்குழு அமைத்து கடும் நடவடிக்கை.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை காளான் மற்றும் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை காளான் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மலை கிராமங்களில் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப் பட்டதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் மேல்மலை கிராம பகுதியில் ஒரு வாலிபர் போதை காளானை பறித்து அதில் தேன் ஊற்றி ருசிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் சிலர் போதை காளானை எவ்வாறு பயன்படுத்துவது, எந்த பகுதியில் அதிகமாக கிடைக்கும் எனவும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

    போதை காளான், கஞ்சா விற்பனையில் கும்பல் தீவிரமாக இயங்கி வருகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

    எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் சிறப்புக்குழு அமைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போதை காளான் விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கைதான 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 2022 ஆம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையி லான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது போதை காளான் மற்றும் கஞ்சா வைத்திருந்த கொடைக்கா னலை சேர்ந்த சந்தோஷ் (வயது32), ராஜபாண்டி (26), பெங்களூருவை சேர்ந்த அகஸ்டின் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போதைப் பொருள் விற்பனை தொடர்பாக வழக்குகள் இருந்தது. இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செங்கமல செல்வன் கைதான 3 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

    கொடைக்கானலில் இதுபோன்று தொடர்ந்து போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கொடைக்கானல் போலீசார் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில் நகர் மற்றும் மேல்மலை கிராமப் பகுதிகளில் தொடர்ந்து பலர் போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×