என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர்"

    • ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவம் நடவடிக்கை
    • ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நுழைய முயன்றபோது சண்டை

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சல் செக்டாரில் உள்ள காலா வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸ் உதவியுடன் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

    அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தத் தகவலை ஜம்மு- காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சல் செக்டரின் காலா வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீஸ் உதவியுடன் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

    அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    இந்நிலையில், சம்பவ இடத்தில் சோதனை நடத்தியபோது அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் போதை மருந்து பண்டல்கள், வரைபடங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடந்த 16-ம் தேதி 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் பல்டால் முகாமிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
    • 700-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை காசிகுண்ட் ராணுவ முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. யாத்திரை தொடங்கிய பக்தர்கள், தங்கள் வழிப்பாதைகளில் முன்னேற முடியாமல் சிக்கித் தவித்தனர். மூன்றாவது நாளாக இன்றும் யாத்திரை தொடங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று மதியம் வானிலை ஓரளவு சீரடைந்ததையடுத்து யாத்திரை மீண்டும் தொடங்கியது. பஞ்சதர்னி மற்றும் ஷேஷ்நாக் முகாம்களில் இருந்து யாத்திரை தொடங்கியது. குகைக் கோவிலைச் சுற்றி வானம் தெளிவானவுடன், அதிகாரிகள் வாயில்களை திறந்து, அமர்நாத் குகைக்கோயிலுக்குள் சென்று இயற்கையாக உருவாகியிருக்கும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர். ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் பல்டால் முகாமிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்குள்ள சூழ்நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, கனமழை காரணமாக சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை ராணுவத்தினர் அழைத்துச் சென்று அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    • ஜமால்தீன், குல்கர் அகமது, சபீர் அகமது, குலாபி ஆகிய 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.


    காஷ்மீரில் உள்ள கிஸ்த்வார் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சிறப்பு போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    ஜமால்தீன், குல்கர் அகமது, சபீர் அகமது, குலாபி ஆகிய 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவாகி இருந்தன. அவர்கள் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டனர்.

    • சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வீரர்களுக்கு தகவல் கிடைத்தது
    • ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக அவ்வப்போது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் உடுருவும் சம்பவம் நடைபெறுவது உண்டு. ஆனால், இந்திய வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஊடுருவலை முறியடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூஞ்ச் செக்டார் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டம் இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி, இந்திய ராணுவம் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது இரண்டு சிறிய ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும், ஒரு பெரிய ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு உதவியதாக மூன்று ஊழியர்களை ஜம்மு-காஷ்மீர் அரசு வேலையில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன
    • பந்திபோரா, கதர்பால், குல்கால் மாவட்டங்களில் தலா ஒரு திரையரங்குகள் திறக்கப்படும்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு சினிமா அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் ஏற்கனவே சினிமா திரையரங்குகள் கடந்த வருடம் திறக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் பாரமுல்லாவில் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பந்திபோரா, கதர்பால், குல்காம் மாவட்டங்களில் தலா ஒரு திரையரங்குகள் திறக்கப்படும் என ஜம்மு-மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

    மேலும், ''பாகிஸ்தான் மற்றும் ஒரு சிலரின் சுற்றுச்சூழல் அமைப்பு பல வருடங்களாக ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளை அழிக்க முயற்சித்தன.

    ஆனால் தற்போது ஜம்மு- காஷ்மீர் மக்கள் மற்றும் இளைஞர்கள் புதிய கனவுகளை கொண்டுள்ளனர். புதிய சூழ்நிலை உருவாக உதவி புரிந்து வருகிறார்கள் என்பதை என்னால் கூறமுடியும். அமைதியான இடத்தில்தான் கலை உருவாகும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்கு அமைதி இல்லையே, அங்கு கலை இல்லை.

    ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சூழ்நிலையால் கலைஞர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது, ஜம்மு காஷ்மீரின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டுவர நமது கலைஞர்கள் புதிய ஆற்றலுடன் பணியாற்றி வருகின்றனர'' எனத் தெரிவித்தார்.

    • கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தில் 3 பீகார் மாநில தொழிலாளர்கள் காயம்
    • இன்று காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

    ஜம்மு-காஷ்மீரில் சமீப காலமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இதுபோன்ற நடத்திய தாக்குதலில் 3 பீகார் மாநில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் அனந்த்நாக்கில் வெளிமாநிலத்தைச் சேர்நத தொழிலாளர்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இரண்ட பேர் காயம் அடைந்துள்ளனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கத்துவா மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவால் பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
    • ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 8 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது. இதனால் சாலை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், கத்துவா மாவட்டத்தின் மேல்மட்ட பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 8 பேர் இன்று உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தகவலறிந்து போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    • இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
    • கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,அவர்கள் சதி திட்டத்திற்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கைதான 2 பேரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    • விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
    • ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி (வயது 25). ராணுவ வீரரான இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார்.

    நேற்று மாலை அவர் அஜதலில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க, காரில் சவல்ஹம் பகுதிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் ஜாவித் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜாவித் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.

    ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் ஜாவித்தை தேடினர். அப்போது, பரன்ஹல் என்ற கிராமத்தின் அருகே ஜாவித் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கையில் ரத்தக்கறை இருந்தது. மேலும், ஜாவித்தின் செருப்புகளும் கார் அருகே கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து போலீசார், ராணுவம், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவ வீரர் ஜாவித்தை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் கார் கண்டு பிடிக்கப்பட்ட பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அவர் கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    • ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
    • யூனியன் பிரதேசத்தில் நடப்பதாகக் கூறப்படும் 'மனித கடத்தல்' பற்றியும் நவாப் சின்ஹாவிடம் கேட்டார்.

    ஜம்மு காஷ்மீரில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாட்டில் காணாமல் போன பெண்கள் குறித்த பட்டியல் வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த தரவு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, 2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்திருந்தது.

    இதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்குள்ள பிரஸ் காலனியில் ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் "ஏன்? யார்? எங்கே? 9765 காணவில்லை" என்ற கேள்விகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

    ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம், காணாமல் போன பெண்கள் குறித்து பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி ஊடக குழு தலைவர் நவாப் கேட்டுக் கொண்டார்.

    மேலும் அவர்," ஏன் இது நடந்தது, உங்கள் அமைப்பில் உள்ள குறைபாடு என்ன என்று நாங்கள் கேட்கிறோம்? இந்த 9,765 பேர் யார், அவர்கள் காணாமல் போனதற்குக் என்ன காரணம்? காணாமல் போன பெண்கள் எங்கே? காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் ஏதாவது செய்கிறீர்களா?" என்று கேட்டார்.

    யூனியன் பிரதேசத்தில் நடப்பதாகக் கூறப்படும் 'மனித கடத்தல்' பற்றியும் நவாப் சின்ஹாவிடம் கேட்டார்.

    ஜம்மு காஷ்மீர் பெண்களின் கவுரவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் துறை ஏதேனும் உள்ளதா? இது அரசியல் பிரச்சினை அல்ல, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு பற்றியது என்று கூறினார்.

    • காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
    • இந்த என்கவுண்டரில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணமடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×