என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர்"

    • காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
    • இந்த என்கவுண்டரில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணமடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது.

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்மாவட்டத்தின் ஹலன் பகுதியில் நேற்று இரவு ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இதில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்.

    இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பயங்கரவாதிகளுடனான மோதலில் நாட்டைக் காத்த நமது துணிச்சலான வீரர்களின் அழியா தியாகத்திற்கு எனது அஞ்சலிகள். நமது வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மைக் காக்கிறார்கள். முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது" என்றார்.

    • ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏ.கே. ரகதுப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் 32 தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.

    ஸ்ரீநகர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை வழியாக 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திக்வார் பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து இந்திய ராணுவம் உஷார் ஆனது. குப்வாரா தங்தார் செக்டாரில் உள்ள டக்கேன்-அம்ரோஹி பகுதியில் ராணுவத்தினர் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான.

    அவனிடம் இருந்து பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏ.கே. ரகதுப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் 32 தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.

    இதேபோல் தங்தார் பகுதியில் இந்திய ராணுவம் குப்வாரா போலீசாருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். அந்த பயங்கரவாதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில மணி நேரத்தில் நடந்த 2-வது ஊடுருவல் முயற்சி இதுவாகும். தொடர்ந்து இந்திய ராணுவம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    • MiG-21 விமானப்படை நிலைநிறுத்தப்பட்டிருந்தது
    • தற்போது அதற்குப் பதிலாக MiG-29 போர் விமானப்படை

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில், இந்தியா MiG-29 போர் விமானப்படையை நிலைநிறுத்தியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    இதற்குமுன் MiG-21 விமானப்படை நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட MiG-29 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    ''காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதி ஸ்ரீநகர். தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயர்வான பகுதியில் உள்ளது. எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் அதிக எடை மற்றும் உந்துதல் விகிதம், எதிரிகளின் ஊடுருவலுக்கு குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்றவைக்கு மூலோபாய ரீதியாக சிறந்தது. MiG-29 விமானப்படை இவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் என படைப்பிரிவு தலைவர் விபுல் சர்மா தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு பாலகோட்டில் பாகிஸ்தானின் F-16 விமானத்தை தாக்கியழித்த MiG-21s விமானத்தைவிட MiG-29 பல நன்மைகள் ஊள்ளது. வானில் நிண்ட தூரம் சென்று தாக்குதல், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்குதல் வல்லமை கொண்டது.

    சண்டையின்போது எதிர் விமானங்களின் செயல்பாட்டை செயலழிக்க வைக்கும் தன்மை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2020 கல்வான் தாக்குதலுக்குப் பிறகு லடாக் பகுதியில் MiG-29s விமானப்படை நிலைநிறுத்தப்பட்டது.

    • ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
    • பயங்கரவாதிகள் பிடிபட்டதால் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் பகுதியில் பயங்கரவாதிகளின் செயல்பாடு அதிகரிப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.

    இதையடுத்து இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து மச்சால் செக்டார் பகுதி மற்றும் உரி மற்றும் பாரமுல்லா பகுதிகளில் தனித்தனி குழுவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உரியின் சுருண்டா பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான நபர் அப்பகுதியில் சுற்றித் திரிந்தார். போலீசார், ராணுவத்தினரை பார்த்தவுடன் சந்தேகமடைந்த அவர் ஓடத் தொடங்கினார்.

    வீரர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து 2 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள் அஹ்மத் டின் மற்றும் முகமது சதீக் கட்டானா ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடம் இருந்து 2 கையெறி குண்டுகள், ஒரு சீனத் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

    இதேபோல பாரமுல்லா பகுதியில் தார்சூ சோபோரைச் சேர்ந்த அக்தர் பட், சுருண்டா ஊரியைச் சேர்ந்த முகமது அஸ்லம் கட்டானா, ஜப்லா ஊரியைச் சேர்ந்த முனீர் அகமது, கிராங்சிவனைச் சேர்ந்த முதாசிர் யூசுப் கோக்னோ மற்றும் ஹர்துஷிவாவைச் சேர்ந்த பிலால் அகமது தர் ஆகிய 5 பேர் பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்து 4 கையெறி குண்டுகள், 2 கைத்துப்பாக்கிகள், 2 மெகசின்கள், 10 தோட்டாக்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 8 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா சட்டம்) மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எஸ்.எஸ்.பி. அமோத் நாக்புரே கூறுகையில், பிடிபட்ட பயங்கரவாதிகள் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்றார். தகுந்த நேரத்தில் பயங்கரவாதிகள் பிடிபட்டதால் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே ஜம்மு-காஷ்மீரின் ரீசி மாவட்டம் தகிகோட் பகுதியில் குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த பயங்கரவாதியின் உடலை பாதுகாப்பு படையினர் நேற்று மீட்டனர். இதுபற்றி ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை தலைவர் முகேஷ் சிங் கூறுகையில், குந்த கவாஸ் பகுதியில் கடந்த 5-ந்தேதி பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றிருவர் காயங்களுடன் தப்பினார். அவரை தேடி வந்தோம். தற்போது மீட்கப்பட்டது அவரது உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த உடல் கிடந்த பகுதியில் இருந்து 2 கயெறி குண்டுகள், 2 ஏ.கே. ரக துப்பாக்கி தோட்டா தொகுப்பு, 32 கைத்துப்பாக்கி தோட்டாகள் கைப்பற்றப்பட்டன என்றார்.

    • ஜம்மு-காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும்.
    • ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான்.

    புதுடெல்லி:

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

    காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகியுள்ளார். மத்திய அரசு சார்பில் சொல்சிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடி வருகிறார்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த தயார் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையம்தான் இனி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

    வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த பணி முடிவடைய ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஜம்மு-காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து அளவிலும், அதை தொடர்ந்து நகராட்சி அளவிலும் பின்னர் சட்டசபை தேர்தலும் நடைபெறும்.

    லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் லே பகுதியில் முடிந்து விட்டது. கார்கில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும்.

    ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என காலவரையறை சொல்ல முடியாது. முழு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான்.

    370-வது பிரிவை நீக்கிய பிறகு 2018 உடன் ஒப்பிடும்போது தீவிரவாதம் தொடர்பான செயல்கள் 45.2 சதவீதம் குறைந்துள்ளது. ஊடுருவல் 90.2 சதவீதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தா கூறினார்.

    மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கபில்சிபல் பயங்கரவாதிகள் தொடர்பான மத்திய அரசின் தவலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பயங்கரவாத சம்பவங்கள் குறித்த மத்திய அரசின் தகவல்கள் 370-வது பிரிவின் அரசியலமைப்பின் தீர்ப்பில் சிக்கலை ஏற்படுத்தாது என்று கபில் சிபலிடம் உறுதி அளித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பரிதி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணிபுரிந்துள்ளார்.
    • இஷ்பாக் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மற்றும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) ஆகியவை இணைந்து பயங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பி ஓடி பல ஆண்டுகளாக தேடப்பட்டு வருபவர்களை கைது செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தோடா மாவட்டத்தில் ஆதில் பரூக் பரிதி, ஜாவேத் என்ற முகமது இக்பால், நிஷார் அகமது என்ற முஜாகித் உசேன், தாரிக் உசேன், இஷ்தியாக் அகமது, அஜாஸ்அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.

    இவர்களில் பரிதி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணிபுரிந்துள்ளார். இஷ்பாக் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஜம்முவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    • அறிவிக்கப்பட்ட, தப்பியோடிய குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சொத்துக்கள் முடக்கம்

    ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ளனர். பெரும்பாலான பயங்கரவாதிகள் அங்கு பயிற்சி பெற்று, இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பயங்கரவாதிகளுக்கு சிலர் அடைக்கலம் கொடுக்கின்றனர்.

    இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் பட்டியலை ஜம்மு-காஷ்மீர் போலீசார் சேகரித்து வந்தனர். கடந்த 1990-ல் இருந்து இந்த பட்டியலை எடுத்து வைத்துள்ளனர். தற்போது, அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளி, தப்பியோடிய குற்றவாளி என அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறுகையில் ''இந்தியாவுக்கு துரோகம் செய்பவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்னர். அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்கிருந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிட முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.

    டோடா மாவட்டத்தில் இதற்கான பணி தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்ள 16 பேர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு பிரிவு போலீசார், சுமார் 4200 பேரின் பட்டியலை சேகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 1990-ல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வருபவர்கள். இவர்களுடைய சொத்துக்கள் வருவாய்த்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை விற்கவோ, மாற்றவோ முடியாது.

    மேலும், வேண்டுமென்றே பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்தவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அப்பாவி மக்கள் மிரட்டப்படுவதில் இருந்து காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ''ஜம்மு-காஷ்மீரின் சோபார் பகுதியில் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ள இடமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள், அசம்பாவித செயல்களுக்கு துணை போகமாட்டார்கள் என நம்புகிறேன். போலீஸ் மற்றும் பாதுகாப்புப்படையால் மீதமுள்ள வேலைகளை சிறப்பாக முடியும். புகலிடம் கொடுக்காதீர்கள். பல சகாப்தமாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதம் காரணமாக பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்'' என துணைநிலை ஆளுநர் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    1990-ல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எல்லைத்தாண்டி, ஆயுத பயிற்சி பெற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்றனர். பெரும்பாலானோர் பயங்கரவாத செயல்களுடன் காஷ்மீர் வந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    2010-ல் ஜம்மு-காஷ்மீர் அரசு, சரணடைந்தால் மறுவாழ்வுக்கு உதவி செய்யப்படும் என அறிவித்தது. 300 பேர் குடும்பத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியா வந்தனர். ஆனால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கினர்.

    • பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழப்பு.
    • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவை வழிநடத்துபவர் மற்றும் உயர் அதிகாரி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்.

    கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தொன்சக் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஹிமான்யுன் முசாமில் ஆகியோர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்களின் உயிரை இழந்தனர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து துப்பாக்கி சூடு நடத்தியது.

     

    இந்திய ராணுவத்தின் 19 ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவுக்கு மன்பிரீத் சிங் வழிநடத்தும் அதிகாரியாக இருந்து வந்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில். இந்த பிரிவு ஜம்மு காஷ்மீரில் இயங்கி வருகிறது.

    உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரியின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு விட்டன. பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

    இதில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று அதிகாரிகள் பலத்த காயமுற்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற இரண்டாவது என்கவுண்டர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • காஷ்மீர் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காஷ்மீர் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மோரியா மக்பூல் மற்றும் அப்ரார் (எ)ஜாலீம் பாரூக் ஆகிய 2 பயங்கரவாதிகள் சுட்டக்கொல்லப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் அப்ரார் காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன் ஆவான்.

    கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரில் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக இருந்த சஞ்சய் சர்மா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மாநில புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் தொடர்புடைய அப்ராரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் இன்று அவன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். 2 பயங்கரவாதிகளிடம் இருந்து நவீன ரக ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    • வாகனங்களின் சோதனை, குடியிருப்பு பகுதிகளில் ரோந்து உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • காவல் துறை இயக்குனர் ஜெனரல் தில்பாக் சிங் ஆகியோர் தனித்தனியாக கூட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா  நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இந்நிலையில் காஷ்மீர் பல்கலைக்கழகத்தை சுற்றிலும், போலீஸார் மற்றும் துணை ராணுவப்படைகள் உட்பட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் இடத்தை சுற்றி வாகனங்களின் சோதனை, குடியிருப்பு பகுதிகளில் ரோந்து உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவரின் காஷ்மீர் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் காவல் துறை இயக்குனர் ஜெனரல் தில்பாக் சிங் ஆகியோர் தனித்தனியாக கூட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்த மத்திய அரசு, அரசாணை வெளியிடவில்லை
    • கட்டாயம் இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறாது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. தொகுதி வரையறை முடிவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அதற்கான வேலைகள் நடந்த பாடில்லை.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உமர் அப்துல்லா கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. கார்கில் மாவட்டத்தை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான லடாக்- கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 22 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 26 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 12, காங்கிரஸ் 10, பா.ஜனதா, சுயேட்சை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த வெற்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பிரதிபலிக்கும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நாங்கள் தற்போது ஐந்து ஆண்டுகளாக கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறோம். 2019-ம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது. ஏன் தேர்தலை தள்ளிப்போட வேண்டும்.

    சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் கட்டாயம் இல்லை என்றால், அதையும் நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை.

    மக்களின் உணர்வை அவர்கள் நன்றாக புரிந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை நடுத்துவது அவர்களது கட்டாயம். அது கட்டாயம் இல்லை என்றால், பாராளுமன்ற தேர்தலை நடத்தமாட்டார்கள். அவர்கள் மக்களை எதிர்கொள்ள வெட்கப்படுகிறார்கள். பாராளுமன்ற தேர்லுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த தேர்தலும் இருக்காது.

    LAHDC-Kargil தேர்தல் முடிவு அவர்களுடைய அச்சத்தை நிரூபித்து விட்டது. தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் 22 இடங்களை பிடித்தது. வெற்றி பெற்ற இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் கூட எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இவ்வாறு உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

    ×