search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்கள் நாசம்"

    • விவசாயிகள் வேதனை
    • நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் தாழ்வான பகுதிகள், குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    மலைகளில் நீரூற்று ஏற்பட்டு, நீரோடிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி அருகே உள்ள தேன்பள்ளி ஊராட்சி, வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கரில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.

    இந்த விவசாய நிலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்து, அழுகிய நிலையில் காணப்படுகிறது.

    இதனால் நெற்பயிர்கள் றுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்துள்ளனர்.

    ×