search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவசர கட்டுப்பாட்டு மையம்"

    • புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    • செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி இந்த 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு 044-27427412, 27427414 எண்ணும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணிற்கும் 9444272345 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 044-27664177, 27666746, 9444317862 எண்ணும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணிற்கும் 9444317862 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×