என் மலர்
நீங்கள் தேடியது "செமஸ்டர் தேர்வு"
- நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு.
- தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதேபோல், தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்திலும் வரும் 4ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
- புதிய அட்டவணை https://aucoeexam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்து.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கி, 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
தற்போது, புதிய தேர்வு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற டிசம்பர் 11-ந்தேதி முதல் பிப்ரவரி 17-ந்தேதி வரை நடைபெறும். இதற்கான புதிய அட்டவணை https://aucoeexam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்து.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
- டிசமர்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் துவங்கும்.
செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
டிசமர்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
இந்த கால அட்டவணையை அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் பின்பறற் வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவரிடம் இருந்து பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் நடத்தி வரும் விசாரணையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவரிடம் இருந்து பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனால், நாளை அட்டவணைப்படி தேர்வு நடக்கும். விடுமுறை அல்ல என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.