என் மலர்
நீங்கள் தேடியது "மாநகர பேருந்து"
- மழை நின்றதால் தற்போது வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.
- இதனால் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மிச்சாங் புயல் காரணமாக நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மாநர பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இன்று காலையும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மழை நின்றதால் தற்போது வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேரம் செல்லசெல்ல வழக்கமான எண்ணிக்கையில் படிப்படியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
- சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் நேற்று ஓடும் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
* சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் வழங்கினர்.
- புதிய முறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று (பிப்ரவரி 28) துவங்கி வைத்தனர்.
மேலும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இதற்காக நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.
யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.
இன்று முதல் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார்.
- அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்தது.
யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.
இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது.
- பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரெயில் உள்ளிட்ட மூன்று வசதிகள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள்.
மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்றிலும் மக்கள் பயணிக்க முடியும்.
அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் செயலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் இத்திட்டம் ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொதுப்போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
- கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
- நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "அரசு பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்குப் பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.
- N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் CMRL மெட்ரோ ரெயில் நிலையங்கள் (Metro Stations) அமைத்திட பணிகள் நடைபெற்று வருவதால். அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல CMRL நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்.18D, 18P, M1, 45ACT நாளை முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.
தடம் எண்.14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து நாளை முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரெயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. மேலும், தடம் எண்.S14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு, வாணுவம்பேட்டை வழியாக NGO காலனி பேருந்து நிலையத்திற்கு 14M வழித்தடத்திலேயே 25 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.
தடம் எண்.M1 CT கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.
தற்போது தடம் எண்.76, 76B, V51, V51X ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.
மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட M18C, 18N மற்றும் N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ
வழியாக இயக்கப்பட உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
- மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 'சிங்கார சென்னை' கார்டை பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம்.
- எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து சிங்கார சென்னை அட்டையை அறிமுகம் செய்துள்ளோம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் சிங்கார சென்னை பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (06.01.2025) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், சிங்கார சென்னை கார்டின் சிறப்புகள் குறித்து - மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சிங்கார சென்னை அட்டையை மெட்ரோ ரெயிலிலும் பயண்படுத்திக் கொள்ளலாம், சென்னை மாநகர் பேருந்துகளிலும் பயன்படுத்தலாம்.
எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து இந்த அட்டையை அறிமுகம் செய்துள்ளோம். முதற்கட்டமாக 50 அட்டைகளை வினியோகித்துள்ளோம்.
அட்டையை செல்போன் நம்பர் இணைந்து ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக ரூ.100 டாப் அப் செய்துக் கொள்ளலாம். இதன்மூலம், பேருந்து, ரெயில் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த பயண அட்டை திட்டத்தால், பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் சில்லலை பிரச்சனை இருக்காது. இதனால், பணி சுமை குறையும் என நம்புகிறோம்.
மாநகர் போக்குவரத்து கழகத்தின் 20 பேருந்து நிலையங்களில் அட்டை வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கூடுதலான இடங்களில் அட்டை வழங்கப்படும்.
ஏற்கனவே சிஎம்ஆர்எல் அட்டை வைத்திருப்பவர்கள் அதே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம். புதிய அட்டை வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
இந்த அட்டை சென்னையில் மட்டுமல்ல, வெளி மாநிலத்தில் இயங்கும் மெட்ரோ ரெயிலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு நபருக்கு ஒரு அட்டை மட்டுமே அனுமதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.