என் மலர்
நீங்கள் தேடியது "வாகனம் தீ"
- மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
- மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள் கல்லூரியில் இன்று மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து உரையாடுதல் மற்றும் பத்தாண்டு கால சாதனைகள் , திட்டங்கள் குறித்து எடுத்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வந்தார்.
பின்னர் அவர் கண்காட்சியை பார்வையிட்டார். அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.
அப்போது மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திடீரென விழிப்புணர்வு வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் கெமிக்கல் வாயுவை கொண்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.
மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 3 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிந்துள்ளனர். முன்விரோதம் காரணமாகா மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனரா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன் (வயது38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும், இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். இவரது மனைவி பிரியா (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முத்துராமனிடம் அதே பகுதியை சேர்ந்த துரை (40) என்பவர் பணம் வாங்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக வாங்கிய பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முத்துராமன் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் மற்றும் மனைவியின் மொபட்டையும் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர்.
இன்று காலை விடிந்ததும் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்திய முத்துராமனின் 2 இருசக்கர வாகனங்களும் மற்றும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகம் மனைவி பச்சையம்மாளின் இருசக்கர வாகனமும் தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்தது.
இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் 3 வாகனங்களும் தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துராமன் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தபோது, மர்ம நபர்கள் முதலில் முத்துராமன் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
இதனால் அவர் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சையம்மாளின் வாகனத்தின் மீதும் தீ பற்றி எரிந்ததால், 3 வாகனங்கள் எரிந்து முழுவதும் சேதமானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து முத்துராமன் போலீசாரிடம், புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோத காரணமாக? துரை என்பவர் முத்துராமனின் வாகனங்களுக்கு தீ வைத்தாரா? அல்லது முத்துராமனிடம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வேறு யாராவது மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.