search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய சீன எல்லை"

    • மாநிலங்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா பேசினார்
    • அதிக்ராபூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட வேண்டும்

    எல்லைப் பிரச்சனைகள் என்பது எல்லா நாடுகளுக்கும் உண்டு. இந்தியாவும் பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா என அனைத்து எல்லைகளிலும் பிரச்சனையை சந்தித்து வருகிறது.

    அதிலும் முக்கியமாக இந்தியாவை விட பொருளாதார பலம் கொண்ட நாடக விளங்கும் சீனா சமீப காலமாக திபெத், லடாக் எல்லாப் பிரதேசங்களில் ராணுவ நடமாட்டத்தை அதிகரிப்பது, சீன வரைபடத்தில் இந்திய பகுதிகளில் பெயர்களை மாற்றுவது என தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது. இருநாட்டு வெளியுறவுத் துறையும் சம்பிரத்யமாக அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், சீனா அதை செயலில் காட்டவில்லை.

    இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் நடந்த மாநிலங்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா, லைன் ஆப் கண்ட்ரோலில் உள்ள பகுதியை இந்திய சீன எல்லை என்று குறிப்பிடாமல் திபெத் எல்லை சட்டப்பூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    லே லடாக், அருணாச்சல் பிரதேஷ், சிக்கிம் என திபெத் வரை 1400 கிலோமீர் வரை எல்லைப் பகுதி நீண்டுள்ளது. இது சீன எல்லை கிடையாது திபெத் எல்லை என்றே குறிப்பிட்டுள்ளார். இதக்கிடையில் நேற்று எல்லையில் உள்ள  பாங்காங் நதியின் சீனா கட்டிய பாலத்தில் வாகனங்கள் செல்லும் சாட்டிலைட் காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

    • சிக்கிம் முதல்வர் தலாய் லாமாவிற்கு விருந்தளித்து உபசரித்தார்
    • புத்த மதத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேர் அவர் உரையை கேட்க வந்துள்ளனர்

    இந்திய எல்லையோரம் உள்ள பிராந்தியமான திபெத் (Tibet), சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    திபெத்தியர்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் தலைமை மத குருக்கள் "லாமா" (lama) என அழைக்கப்படுவார்கள். தலைமை மத குரு தலாய் லாமா (Dalai Lama) என அழைக்கப்படுவார்.

    தற்போது 14-வது தலாய் லாமா பொறுப்பில் உள்ள டென்சின் க்யாட்ஸோ, சிக்கிம் மாநில தலைநகர் கேங்க்டாக் (Gangtok) நகரில் 3-நாள் சுற்றுப்பயணம் செய்தார். அடுத்து, அம்மாநிலத்தில் உள்ள பல்ஜோர் அரங்கில் (Paljour Stadium) ஆன்மிக உரையாற்றினார்.

    முன்னதாக சிக்கிம் முதல்வர் பி.எஸ். தமங் (PS Tamang) தலாய் லாமாவிற்கு விருந்தளித்து உபசரித்தார்.

    தொடர்ந்து தலாய் லாமா, வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரிக்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள சலுகாரா (Salugara) பகுதியில் உள்ள ஒரு புத்த மடாலயத்தில் போதிசித்தா எனப்படும் புத்தரின் லட்சியங்கள், சிந்தனைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து புத்த மதத்தினரிடம் உரையாற்றுகிறார்.

    அசாம், பீகார், சிக்கிம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலிருந்தும், அண்டை நாடான நேபாளத்திலிருந்தும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உரையை கேட்க அங்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தலாய் லாமா, "எங்கள் சொந்த நாட்டிலேயே திபெத்தியர்களான நாங்கள் அகதிகளாக்கப்பட்டோம். அங்கு எங்களுக்கு அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு (இந்தியாவில்) நாங்கள் சுதந்திரமாக உள்ளோம்" என தெரிவித்தார்.

    கடல் மட்டத்திலிருந்து 4,900 மீட்டர் உயரத்தில் இருப்பதால், உலகிலேயே உயரமான பிரதேசமாக திபெத் உள்ளது. உலகின் உயரமான (8848 மீட்டர்) மலையான "மவுன்ட் எவரெஸ்ட்" (Mount Everest) திபெத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×