search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா சட்டசபை தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
    • கண்ணியத்துடன் எழுந்து நிற்போம். மக்களின் குரலை எதிரொலிப்போம்.

    திருப்பதி:

    ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.

    தோல்வி குறித்து ரோஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கெட்ட காரியங்களை செய்து தோற்றால்தான் வெட்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக எழுந்து நின்று குரல் கொடுப்போம்.

    கண்ணியத்துடன் எழுந்து நிற்போம்.

    மக்களின் குரலை எதிரொலிப்போம். வரும் நாட்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக மக்கள் பக்கம் நின்று போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது.
    • ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.

    ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 134 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய சந்திரநாயுடுக்கு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதே போல் நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்போது ஆந்திராவில் அதிக இடங்களை வென்ற பவன் கல்யாணுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் கட்சி தற்போது ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    • 135 இடங்களில் முன்னிலை பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
    • ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.

    ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

    இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. 

    • ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.
    • சந்திரபாபு நாயுடு வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 131 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும், மற்றவை 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரோபோ யார் எந்த கேள்வி கேட்டாலும் கைகளை அசைத்து சைகைகளை காட்டி பதிலளிக்கிறது.
    • மாயா ரோபோ பதில் அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசியல் ஆய்வாளர்கள் கூட இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தற்போது திணறி வருகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் மறைந்திருக்கும் உண்மை என்ன? வாக்காளர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

    இதனால் அந்த மாநில மக்கள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதனிடையே துபாய் சென்ற ஆந்திர நபர் ஒருவர் ரோபோவிடம் இது பற்றி கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    துபாயில் உள்ள ஆப் பியூச்சர் என்ற இடம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இங்குள்ள மியூசியம் ஒன்றில் மாயா ரோபோ உள்ளது.

    இந்த ரோபோ யார் எந்த கேள்வி கேட்டாலும் கைகளை அசைத்து சைகைகளை காட்டி பதிலளிக்கிறது. உலகில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல ஒரு கணம் கூட யோசிப்பதில்லை.

    இந்த ரோபோ அருகில் சென்ற ஆந்திர நபர் ஒருவர் ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போவது யார்? என கேள்வி எழுப்பினார்.

    இதனை கேட்டதும் ரோபோ ஒரு கணம் அப்படியே அசையாமல் நின்றது. இந்த கேள்விக்கு பதில் தெரிந்தாலும் சொல்ல முடியாது என ரோபோ கைகளை காட்டி பதில் அளித்தது. இதனைக் கேட்டதும் ஆந்திர நபர் திகைத்து போனார்.

    மாயா ரோபோ பதில் அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மனிதர்கள் மட்டுமின்றி மனிதர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் கூட தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து ஆந்திரா தேர்தல் குறித்து அசத்தலாக பதில் அளித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • முன்னாள் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு குண்டூர் தொகுதியில் வாக்களித்தார்.

    அமராவதி:

    ஆந்திர மாநில சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 175 சட்டபை தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

    முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரபல நடிகரான பவன் கல்யாணுடன் கூட்டணி அமைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனும் கூட்டணி அமைத்தார்.

    கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தெலுங்கு தேசம் 144 சட்டசபை தொகுதிகளிலும், பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா 21 சட்டசபை தொகுதிகளிலும், பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முன்னாள் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு குண்டூர் தொகுதியில் வாக்களித்தார்.

    இதேபோல், ஒடிசா மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

    • ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
    • வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு வருகிற 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

    ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இந்த தேர்தல் அறிக்கையின் முகப்பு பக்கத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி தலைவர்கள் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று இருந்ததாகவும், பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும், நேற்று விழாவில் கலந்து கொண்ட, ஆந்திர மாநில பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்து விட்டதும் கூட்டணியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    • தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
    • ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகளும், 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    அமராவதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

    ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, தெலுங்கு தேசம் கட்சி சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
    • மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    திருப்பதி:

    காங்கிரஸ் கட்சி தென் மாநிலங்களில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அந்த மாநிலத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இப்போது இருந்தே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை கட்சிகள் நடத்தி வருகின்றன.

    ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாண் கூட்டணியை அறிவித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி இந்த முறையும் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுமா? அல்லது தெலுங்கு தேசம் கட்சியுடன் இணையுமா என்பது புதிராக உள்ளது.

    ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ஜனவரி மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக பார்முலாவான பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தது. அதேபோல ஆந்திராவிலும் வாக்குறுதிகளை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    ஆனாலும் மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    இது ஒரு புறம் இருக்க ஆளுங்கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். இது முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆந்திர அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    ×