என் மலர்
நீங்கள் தேடியது "மாநகர் போக்குவரத்து கழகம்"
- ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகப்படுத்தினார்.
- ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை:
சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூ.2000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழக பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையிலான ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் (TAYPT) மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மந்தைவெளி பேருந்து நிலையத்தில், அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர், தலைமை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2023 டிசம்பர் மாதம் வரை பயணம் செய்யத்தக்க வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
- 40 மையங்களில் பயண அட்டை மற்றும் டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
சென்னை:
மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2023 டிசம்பர் மாதம் வரை பயணம் செய்யத்தக்க வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த அரையாண்டிற்கு ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பே.நி, மத்திய பணிமனை, சென்ட்ரல் பேருந்து நிலையம், பிராட்வே உள்ளிட்ட 40 மையங்களில் வரும் 21.12.2023 முதல் 31.01.2024 வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், 01.02.2024 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.
சென்னைவாழ் மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை கொண்டு வர வேண்டும். சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று, தற்பொழுது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது அடையாள அட்டையுடன் தங்களின் தற்போதைய வண்ண பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 'சிங்கார சென்னை' கார்டை பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம்.
- எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து சிங்கார சென்னை அட்டையை அறிமுகம் செய்துள்ளோம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் சிங்கார சென்னை பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (06.01.2025) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், சிங்கார சென்னை கார்டின் சிறப்புகள் குறித்து - மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சிங்கார சென்னை அட்டையை மெட்ரோ ரெயிலிலும் பயண்படுத்திக் கொள்ளலாம், சென்னை மாநகர் பேருந்துகளிலும் பயன்படுத்தலாம்.
எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து இந்த அட்டையை அறிமுகம் செய்துள்ளோம். முதற்கட்டமாக 50 அட்டைகளை வினியோகித்துள்ளோம்.
அட்டையை செல்போன் நம்பர் இணைந்து ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக ரூ.100 டாப் அப் செய்துக் கொள்ளலாம். இதன்மூலம், பேருந்து, ரெயில் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த பயண அட்டை திட்டத்தால், பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் சில்லலை பிரச்சனை இருக்காது. இதனால், பணி சுமை குறையும் என நம்புகிறோம்.
மாநகர் போக்குவரத்து கழகத்தின் 20 பேருந்து நிலையங்களில் அட்டை வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கூடுதலான இடங்களில் அட்டை வழங்கப்படும்.
ஏற்கனவே சிஎம்ஆர்எல் அட்டை வைத்திருப்பவர்கள் அதே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம். புதிய அட்டை வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
இந்த அட்டை சென்னையில் மட்டுமல்ல, வெளி மாநிலத்தில் இயங்கும் மெட்ரோ ரெயிலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு நபருக்கு ஒரு அட்டை மட்டுமே அனுமதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கும் துரோகம் என அன்புமணி கூறியிருந்த நிலையில் விளக்கம்.
- ஜப்பான் நிறுவன உதவியுடன் டிப்போ மேலாண்மை அமைப்பு மூலம் குறிப்பீடு ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகிறது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் மாநகரப் பஸ்களின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளை பதிவு செய்வதற்கான வண்டி குறிப்பேடு இதுவரை தமிழில் வழங்கப்பட்டு வந்ததாகவும், ஆனால், அதை இப்போது ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதற்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
அப்போது, மாநகர் போக்குவரத்து கழகத்தில் பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டதாக கூறப்படும் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கும் துரோகம் என அன்புமணி கூறியிருந்த நிலையில் மாநகர போக்குவரத்துக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ஜப்பான் நிறுவன உதவியுடன் டிப்போ மேலாண்மை அமைப்பு மூலம் குறிப்பீடு ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகிறது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மென்பொருள் உருவாக்கப்பட்டபோது குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் தான் இருந்தது என்றும் தற்போது தமிழில் மாற்றப்பட்டுள்ளது என்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
- சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும்.
- பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் சார்பில் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், நாளை காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்த்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
09.03.2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 09.03.2025 அன்று தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக மா.போ.கழகம் இயக்க உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.