என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்னாட்சி"

    • நிலநடுக்கத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்; பல வீடுகள் இடிந்து விழுந்தன
    • ட்சாய், ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் பதிவிட்டுள்ளார்

    நேற்று மதியம், சீனாவின் வடமேற்கு எல்லையில் கிங்காய்-திபெத் பீடபூமி (Qinghai-Tibet plateau) பிராந்தியத்தில் கான்சு-கிங்காய் (Gansu-Qinghai) எல்லைக்கருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை 118க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன.

    பலர் உயிரை காத்து கொள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

    சீன அரசு, மீட்பு பணிகளை விரைவாக துவங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், பாதிக்கப்பட்டோருக்கு புகலிடம் மற்றும் உடனடி நிவாரணம் கிடைக்க ஒருங்கிணைந்த முயற்சிக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில், வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான் நாட்டின் முதல் பெண் அதிபர், ட்சாய் இங்-வென் (Tsai Ing-Wen), சீனாவில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அத்துடன் சீனாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தைவான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ட்சாய் ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் இரங்கலை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது பதிவில், "நிலநடுக்கத்தில் தங்களின் உயிருக்கு உயிரானவர்களை இழந்து வாடும் சீனர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவிக்கிறேன். உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணியில் சீனாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது" என தெரிவித்தார்.

    சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது.

    சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வரும் நிலையில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரித்து வந்தது.

    ஆனால், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, தைவான் அதிபர் உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.

    2008ல் சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் (Sichuan province) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அப்போதும் தைவான், சீனாவிற்கு நேசக்கரம் நீட்டி தன் நாட்டிலிருந்து நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    • கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.
    • இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மண்னச்சநல்லூரி தேர்தல் பிரசாரத்தின்போது நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:-

    பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு. அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களைப் போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

    கப்பல் துறை தனியார், போக்குவரத்து துறை தனியார், கல்வி துறை தனியார் மருத்துவத்துறை தனியார் விமானத்துறை சாலை பொருள் தனியார், ரெயில்வே துறைகளை தனியாருக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன?

    கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவது கொடுமை. இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது.

    விலைவாசி உயர்வால் நமது வாழ்க்கை தரம் மாறிப்போச்சு. இந்த நிலை தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாறுதலை ஏற்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×