search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசா இஸ்ரேல் போர்"

    • ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
    • இஸ்மாயில் ஹனியே கொலைக்கு இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் உயர் அதிகார தலைவர் உத்தரவு.

    ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததன் மூலம் இஸ்ரேல் மூலோபாய தவறு செய்துவிட்டது. ஏனென்றால் இஸ்ரேல் அதற்கான மோசமான விலையை கொடுக்க இருக்கிறது என ஈரான் பொறுப்பு வெளியுறவுத்துறை மந்திரி அலி பகாரி தெரிவித்துள்ளார்.

    சவுதி கடற்கரை நகரான ஜெட்டாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டதற்கு அடுத்த நாள் அலி பாகரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும் பதற்றம், போர் மற்றும் மற்ற நாடுகளுடன் மோதலை விரிவாக்கம் செய்ய இஸ்ரேல் விரும்புகிறது. எனினும் ஈரானுடன் போர் புரியும் நிலையில் இஸ்ரேல் இல்லை. அவர்களுக்கு அதற்கான திறனும் இல்லை. வலிமையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 57 உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு இஸ்ரேல்தான் முழு பொறுப்பு என பிரகடனம் செய்தனர்.

    இதற்கிடையே ஹிஸ்புல்லா ராணுவ கமாண்டர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1198 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் 111 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதில் 39 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் 39,699 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் எத்தனை பேர், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் கிழக்கு மத்திய பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர், 2½ மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
    • காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர், 2½ மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் மும்முனை தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

    இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நேற்று இரவு காசா முனை பகுதி முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும், இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பின் மிகப் பெரிய சுரங்கப் பாதையை கண்டு பிடித்து உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த சுரங்கப்பாதை 4 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். ஹமாஸ் அமைப்பினரி டம் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் இருக்கும் நிலையில் மூன்று, வயதான ஆண் பிணைக் கைதிகளின் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது.

    அதில், "அவர்கள் தங் களை விரைவில் மீட்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து பேசினர். பிணைக் கைதிகளின் வீடியோவை வெளியிட்ட தற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்து உள்ளது. மருத் துவ சிகிச்சை தேவைப்படும் அப்பாவி, வயதானவர்களின் குடும்பங்களுடன் ஹமாஸ் நடத்தும் கொடூரமான குற்ற செயல்களை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×