என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வை குறைபாடு"

    • பார்வையற்றவர்களால் ஒளியை உணர முடியும்.
    • பிரகாசமான ஒளி பார்வையற்றவர்களை சுலபமாகப் பாதிக்கும்.

    கண் பார்வையற்றவர்களால் காட்சிகளைத்தான் காண முடியாது. ஆனால், ஒளியை உணர முடியும். பார்வையுடையவர்களை விட பார்வையற்றவர்களின் விழித்திரை எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியது. அதனால் பிரகாசமான ஒளி பார்வையற்றவர்களை சுலபமாகப்பாதிக்கும். கண் கூச்சம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.

     விழித்திரையின் மீது விழுகின்ற பிரகாசமான ஒளிக்கு தடுப்புச் சுவராக கருப்புக் கண்ணாடி செயல்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான பார்வையற்றவர்கள் கருப்புக் கண்ணாடியை அணிகிறார்கள். தாங்கள் பார்வையற்றவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஓர் அடையாளமாகவும் கருப்புக் கண்ணாடி இருக்கிறது.

    • நம்மில் எத்தனை பேருக்கு கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து தெரியும்?
    • எழுத்துக்களை நல்ல பெரிய எழுத்துருக்களில் படிக்கவும்.

    இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் கையிலும் செல்போன்கள் வந்து விட்டன, இதன் கூடவே கண்கள் சோர்வு வந்துவிட்டது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்குதலுக்கு பிறகு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மோகத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். மொபைல் ஃபோன், லேப் டாப், ஐ பேட் என வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கேட்ஜட்களும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

    அதில் முதன்மை வகிப்பது மொபைல் போன்கள் தான். என்னதான் உலகை ஒரு சிறு பெட்டிக்குள் அவை இணைத்தாலும், அதற்கான பின்விளைவு களையும் நாம் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. அதுவும் முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தும் பகுதி என்றால் அவை கண்கள்தான்.

    உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் நடப்பதை உடனடியாக பார்க்க முடியாத விஷயங்களை கூட நம்மை பார்க்க வைக்கும் இந்த எலக்ட்ரானிக் டிவைஸ்களால் நாளடைவில் நம்மை நிரந்தரமாக பார்வையே இல்லாமல் கூட செய்ய முடியும்.

    மன அழுத்தம், ரத்த அழுத்தம் பற்றியெல்லாம் கேள்விபட்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து தெரியும்? நம்மை பொறுத்தவரை கண்கள் தெரிந்தால் போதும், ஆனால் அதை முறையாக பராமரிக்கிறோமா என்றால் இல்லை.

    எல்லாவற்றையும் பார்க்க தெரிந்து கொள்ள நாம் முதலில் பயன்படுத்துவது கண்களைத் தான். நார்மலாக ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 20 முறை வரை கண் இமைகள் மூடி திறக்கும். அதுவே ஒரு புத்தகம் படிக்கும்போதோ அல்லது டிவி, மொபைல் பார்க்கும்போதோ ஒரு நிமிடத்திற்கு ஒன்றிலிருந்து இரண்டு முறைதான் அவை திறந்து மூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

     உங்களது கண்களை ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை உங்கள் டிவைஸிலிருந்து கண்ணை திசைதிருப்பி 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பாருங்கள். இப்படி தொடர்ந்து செய்வது கண்களை பாதுகாக்கும் குறிப்பாக கண்கள் உலர்ந்து போகாமல் தடுக்கும்.

    ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இரே இடத்தில் உட்கார கூடாது. கண்களுக்கு அதிக பணி கொடுக்க கூடாது. அதற்கு போதுமான இந்த இடைவெளி தேவை. நீங்கள் பயன்படுத்தும் அறையில் நல்ல வெளிச்சம் நிறைந்த மின்விளக்குகளை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கண்கள் சிரமமின்றி பார்க்க அல்லது படிக்க வேண்டியவற்றை பார்த்து கொள்ளும்.

    உங்கள் டிவைஸின் ஸ்கிரீனை ஒரு கை அளவு தூரத்தில் எப்போதும் வைத்துக் கொள்ளவும். அதே போல் உங்கள் கண்பார்வைக்கு 10 டிகிரி கீழே உங்கள் ஸ்கிரீன் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அதே போல் ஸ்கிரீன் வழியாக படிக்கும் போது எழுத்துக்களை நல்ல பெரிய எழுத்துருக்களில் படிக்கவும்.

    குறுகிய வடிவ எழுத்துக்கள் கண்களுக்கு படிக்க சிரமத்தை ஏற்படுத்தும். எனவே ஸ்கிரீனை பெரிது படுத்தி பயன்படுத்தவும். மேலும் நீங்கள் அமர்ந்திருக்கும் வடிவம் சவுகரியமானதாக இருந்தால் மட்டும் கழுத்து, இடுப்பு, கண்களுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். அமரும் போதே சரியான இடத்தில் அமருங்கள்.

    • நீதித்துறை பணிக்கான ஆள்தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் எவ்விதமான பாரபட்சத்தையும் சந்திக்கக்கூடாது.
    • தகுதி இருக்கும்பட்சத்தில் காலிப்பணியிடங்களில் அவர்களை நியமிக்கலாம்.

    புதுடெல்லி:

    1994-ம் ஆண்டின் மத்தியபிரதேச அரசு பணியாளர் தேர்வு விதிமுறைகளின் 6ஏ மற்றும் 7 விதிகள், பார்வைக்குறைபாடு கொண்டவர்களும், குறைந்த அளவு பார்வை கொண்டவர்களும் நீதித்துறை பணியில் சேருவதற்கு தடை விதிக்கின்றன.

    எனவே, அந்த விதிகளை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சில மாநிலங்களில், பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டும் தானாக முன்வந்து ஒரு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இதுபோல், விசாரிக்கப்பட்ட 6 மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இவ்வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு எதிரான மத்தியபிரதேச அரசு பணியாளர்கள் தேர்வு விதிமுறைகளின் சில விதிகளை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

    தீர்ப்பில் நீதிபதி ஆர்.மகாதேவன் கூறியிருப்பதாவது:-

    நீதித்துறை பணிக்கான ஆள்தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் எவ்விதமான பாரபட்சத்தையும் சந்திக்கக்கூடாது. எனவே, அவர்களையும் சேர்ப்பதை உறுதிசெய்யும்வகையில், மாநில அரசுகள் உடன்பாடான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கட்-ஆப் மூலமாகவோ, அல்லது வேறு தடைக்கல் மூலமாகவோ மாற்றுத்திறனாளிகளை விலக்கும்வகையில் மறைமுகமாக பாரபட்சம் காட்டினால், சமத்துவத்தை உறுதி செய்ய கோர்ட்டு தலையிட வேண்டும்.

    மாற்றுத்திறன் காரணமாக எந்த விண்ணப்பதாரருக்கும் பணிவாய்ப்பை பரிசீலிப்பதை மறுக்கக்கூடாது. பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு நீதித்துறை பணியில் சேரும் வாய்ப்பை மறுக்கக்கூடாது.

    இந்த உத்தரவு காரணமாக, நீதித்துறை ஆள்தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள், அப்பணிக்கு பரிசீலிக்கப்பட உரிமை பெற்றவர்கள் ஆகிறார்கள். தகுதி இருக்கும்பட்சத்தில் காலிப்பணியிடங்களில் அவர்களை நியமிக்கலாம்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×