என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் கூட்டணி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணி கட்சிகள் உடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மூத்த நிர்வாகிகள் 5 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டது.
    • ப.சிதம்பரம் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    காங்கிரஸ் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை அன்று 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் உடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மூத்த நிர்வாகிகள் 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சி அமைத்தது.

    இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை தயார் செய்வதற்காக ப.சிதம்பரம் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அக்குழுவில், சிங் தியோ, சித்தராமையா, பிரியங்கா காந்தி, சசிதரூர், ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    • மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது.
    • சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா, கேரள மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது. சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எல்.டி.எஃப், காங்கிரஸ் தலைமையலான யு.டி.எஃப். பல வருடங்களாக இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கப்பட்டது.

    காங்கிரஸ் கூட்டணி பாப்புலர் பிரன்ட்ஆஃப் இந்தியா வெளிப்படையாக ஆதரவு எனத் தெரிவித்துள்ளது. அதன்மீதான தடை குறித்து இடது சாரி கூட்டணி அமைதி காத்து வருகிறது. அது வேளையில் பிரதமர் மோடி இதுபோன்ற அமைப்புகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக பணியாற்றி கொண்டிருக்கிறார்" என்றார்.

    ×