என் மலர்
நீங்கள் தேடியது "ஜி20 மாநாடு"
- ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்தியது.
- இதில் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகள் பலவும் கலந்துகொண்டன.
ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது.

இந்த மாநாட்டுக்காக டெல்லி மாநகரம் சொர்க்கலோகம்போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டது. ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செப்டம்பரில் நடத்தியது. ஜி20 கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- பிரேசில் நாட்டில் 18-19 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்திய பிரதமர் மோடி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, தென்அமெரிக்க நாடான பிரேசில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றாக கயானா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு முதலில் சென்றார். அங்கு அந்நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அந்நாட்டு அதிபருடன் இருநாட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் நைஜீரியாவில் இருந்து பிரேசிலுக்கு சென்றடைந்துள்ளார். பிரேசில் நாட்டில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு பிரேசில் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார். 55 நாடுகளை கொண்ட ஆப்பிரிக்கா யூனியன் நிரந்தர உறுப்பினராக்கப்பட்டு முதன்முறையாக கலந்து கொள்ள இருக்கிறது.
ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தரையிறங்கியுள்ளேன். பல்வேறு உலகத் தலைவர்களோடு உச்சி மாநாட்டின் ஆலோசனைகள் மற்றும் பயனுள்ள பேச்சுக்களை எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
- ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு செய்தார். இதோடு எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
நைஜீரியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வந்த பிரதமர் மோடி, இங்கு நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், "நாங்கள் எங்கள் நாடுகளுக்கு இடையிலான முழு அளவிலான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தோம். எரிசக்தி, உயிரி எரிபொருள்கள், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
19வது ஜி20 மாநாட்டை பிரேசில் நடத்துகிறது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.