என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயம்பேடு பேருந்து நிலையம்"

    • கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும்.
    • தேவைப்பட்டால் ரெயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

    கிளாம்பாக்கம்:

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுககு பேருந்துகள் இயக்கப்படும்.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    * கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என 280 சர்வீஸ் இயக்கப்படும்.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும்.


    * கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என மாநகர போக்குவரத்து இயக்கப்படும்.

    * ஏற்கனவே 2386 சர்வீஸ் பேருந்துகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது கூடுதலாக 1691 சர்வீஸ் இயக்கப்படுகிறது. மொத்தம் 4077 சர்வீஸ் இயக்ககப்படும்

    * விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, கோவை, நெல்லை என 6 அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வந்து அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்படும்.

    * பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கலுக்கு பிறகு அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும்.

    * மொத்தம் 1140 புறப்பாடுகளும் பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * ஆம்னி பேருந்துகள் இன்றிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை தொடங்கி விட்டார்கள். பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும்.

    * தேவைப்பட்டால் ரெயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

    * எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு அனைத்து பேருந்துகளுமே கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று காலை முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    தென் மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவில் இருந்து சென்னை வரும் எஸ்இடிசி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.


    விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய 6 போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தற்போது கோயம்பேட்டில் இருந்தே இயங்குகிறது. பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இப்பேருந்துகள் புறப்படும்.

    மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யாத பணிகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.

    பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    • இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
    • விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்.

    சென்னை:

    கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் முழுமையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று காலை முதல் வந்துள்ளது.

    இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

    இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

    விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்.

    பெங்களூரு நெடுஞ்சாலை, ஈசிஆர் வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தென் மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்தவர்களுக்கு கிளாம்பாக்கம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
    • அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்த பயணிகளிடம் சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் அதேபோன்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கும் பயணம் செய்வதற்காக பெறப்பட்ட கட்டணத்தில் தற்போது கிளாம்பாக்கம் வரை மட்டுமே அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுவதால் கட்டண வித்தியாசத்தொகை கண்டக்டர்கள் மூலம் பயணம் தொடங்கும்போது ரொக்கமாக திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே அவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்ப்பதற்காகவும், அதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் இவ்வாறு நடைமுறைபடுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
    • கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

    கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.430 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
    • அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்டது.

    இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து அரசு விரைவு பஸ்களும் 31-ந்தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.

    ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். அதுவரையில் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    கிளாம்பாக்கத்திற்கு அரசு விரைவு பஸ்கள் மட்டும் முழு அளவில் மாற்றப்பட்டு இயக்கப்படுவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிற போக்குவரத்துக்கழக பஸ்கள் இன்னும் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்து சென்னை வரும் பயணிகள் மட்டும் சிரமப்படுகின்றனர்.

    அவர்கள் பல பஸ்கள் மாறி தங்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் தான் கோயம்பேடு வரை வர முடிகிறது.

    அரசு பஸ்களில் பயணிப்பவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி மாநகர பஸ் மற்றும் மின்சார ரெயில்களுக்கு மாறி வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில் அங்கிருந்து இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    850 ஆம்னி பஸ்கள் தென்மாவட்ட பகுதிகளுக்கு தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை பராமரிப்பதற்கு தேவையான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

    இது குறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு பார்க்கிங் பகுதி ஒதுக்கப்படவில்லை. இது தவிர பஞ்சர், வீல் அலைண்ட்மென்ட் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அங்கு வசதி இல்லை. அவற்றை செய்து கொடுத்தால்தான் ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியும்.


    ஆம்னி பஸ்களை இயக்க தேவையான அடிப்படை வசதிகள் இருந்தால்தான் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க முடியும். இல்லையென்றால் கோயம்பேட்டிற்கு பஸ்களை கொண்டு வர வேண்டும்.

    எனவே எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால்தான் மாற்ற முடியும். அது வரையில் கோயம்பேட்டில் இருந்துதான் பஸ்கள் செல்லும். இதுபற்றி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆம்னி பஸ்களை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு உடனே மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில் ஆம்னி பஸ்களை மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தென்மாவட்டங்கள், சேலம், கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலையில் இயக்கக்கூடிய எல்லா பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அனைத்தையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால்தான் போக்குவரத்து நெரிசல் குறையும். அரசு பஸ்களை மட்டும் மாற்றினால் போதாது.

    மேலும் இதனால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள். அனைத்து பஸ்களையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால் மட்டும்தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
    • பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்களை இணைத்து உள்ளனர்.


    மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.

    விரைவில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட இருப்பதால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

    இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்சார ரெயில்களில் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்.

    இது பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பயணிகள் கவனிக்காததால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் பஸ் ஏறுவதில் கடும் குழப்பம் ஏற்பட்டது.
    • கடைசி நேரத்தில் கிளாம்பாக்கம் செல்ல முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் பல பயணிகள் இன்று முன்பதிவு செய்த பஸ்களை தவறவிட்டனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அவர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பஸ்களும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 8,478 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் சானடோரியம், கே.கே.நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருநள்ளாறு, புதுச்சேரி, திருத்துறைப்பூண்டி வேதாரண்யம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் (எஸ்.இ.டி.சி) கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் எந்தெந்த இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்கிற விவரங்கள் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.


    அதேபோல் திருச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், கடலூர், செஞ்சி, வந்தவாசி, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக் கழக (டி.என்.எஸ்.டி.சி) பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்றும், முன்பதிவு செய்யாத பயணிகள் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு சென்று பஸ் ஏறலாம் என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பயணிகள் கவனிக்காததால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் பஸ் ஏறுவதில் இன்று கடும் குழப்பம் ஏற்பட்டது. அவர்கள் எங்கு சென்று பஸ் ஏறுவது என்பது தெரியாமல் திணறுகிறார்கள்.

    முன்பதிவு செய்த பயணிகளில் சுமார் 30 சதவீதம் பேர் இன்று கிளாம்பாக்கத்துக்கு செல்லாமல் கோயம்பேட்டில் பஸ் ஏறுவதற்காக வந்தனர். ஆனால் அவர்கள் முன்பதிவு செய்த பஸ்கள் அங்கு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உதவி மையங்களில் ஊழியர்கள் இல்லாததால் பஸ் ஏற வந்த பயணிகள் யாரிடம் சென்று விசாரிப்பது என்பது தெரியாமல் திணறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்த மற்ற கோட்டங்களின் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் விசாரித்த போது அவர்கள் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

    கடைசி நேரத்தில் கிளாம்பாக்கம் செல்ல முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் பல பயணிகள் இன்று முன்பதிவு செய்த பஸ்களை தவறவிட்டனர். மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பலருக்கு கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் செயல்படுவது பற்றிய விவரம் தெரியவில்லை. அவர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்றடைய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


    இது ஒருபுறம் இருக்க அரசு விரைவு பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக முன்பதிவு செய்த பயணிகளை போனில் தொடர்பு கொண்டு பஸ் புறப்படும் இடம் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் வருவதற்கு சிறிது நேரம் தாமதமானாலும் காத்திருந்து அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

    அதன்படி முன்பதிவு செய்த பயணிகளிடம் பஸ் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். கிளாம்பாக்கத்துக்கு வந்து பஸ் ஏறுமாறு தெரிவித்தனர். அப்போது பல பயணிகள் தாங்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருப்பதாக பதில் அளித்துள்ளனர். இதனால் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்களை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு புறப்பட்டு வருமாறு கூறியுள்ளனர். அந்தவகையில் ஏராளமான பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு தாமதமாக வந்தனர். அப்படி தாமதமாக வந்த பயணிகளை ஏற்றி செல்வதற்காக அதிகபட்சமாக சுமார் அரை மணி நேரம் வரை பஸ்கள் காத்திருந்தன. அதற்கு மேல் வராத முன்பதிவு செய்த பயணிகளை விட்டுவிட்டு அரசு விரைவு பஸ்கள் புறப்பட்டு சென்றன. பஸ்களை தவறவிட்ட பயணிகளுக்கு முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் திருப்பி கொடுக்கப் பட்டது. ஆனால் அவர்கள் அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்ல பஸ் கிடைக்காமல் தவித்தனர்.

    • பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

    சென்னை:

    சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் இறுதியில் செயல்பாட்டிற்கு வந்தது.

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகின்றன.

    அனைத்து ஆம்னி பஸ்களும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பொங்கல் கழித்து 24-ந்தேதி இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆம்னி பஸ்களை 24-ந்தேதி முதல் இயக்குவதற்கு ஏதுவான சூழல் இல்லாததால் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். முடிச்சூர் பைபாஸ் சாலை அருகே இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 700-800 பஸ்களை நிறுத்துவதற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தயார் செய்து தர வேண்டும்.

    ஆம்னி பஸ்களை நிறுத்தி இயக்குவதற்கு இடம் தயார் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். அதனால் அரசு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
    • ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பஸ் முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொங்கலுக்கு பிறகு அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    ஆம்னி பஸ்களையும் 24-ந்தேதி மாலை 7 மணியில் இருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. இதுவரையில் ஆம்னி பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25, 26 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


    மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு அறிவித்தப்படி ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று இரவும் போக்குவரத்து ஆணையர் தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும், அரசின் உத்தரவை பின்பற்றாமல் இயக்கினால் போக்குவரத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கண்டிப்பாக ஆம்னி பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அங்கு 850 பஸ்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்து காத்து இருக்கின்ற நிலையில் பயணம் செய்ய கிளாம்பாக்கம் செல்ல வேண்டுமா? கோயம்பேடு போக வேண்டுமா? என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து அரசு விரைவு பஸ்களை இயக்குவதற்கு வசதி உள்ளது. ஆனால் ஆம்னி பஸ்களை நிறுத்த இடமில்லை. தினமும் சென்னையில் இருந்து 850 ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் விழாக் காலங்களில் 1200 பஸ்கள் வரை இயக்கப்படும். ஒட்டு மொத்தமாக எல்லா பஸ்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை. வசதி செய்து கொடுத்தால் நாங்கள் செல்லத் தயார்.

    முடிச்சூர் வரதராஜபுரத்தில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். நாளை (புதன்கிழமை) கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்.
    • ஆம்னி பேருந்துகள் இன்றுமுதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புறநகரில் இருந்து இயக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து முனைமம் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் (ஆம்னி பேருந்துகள்) மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில்தான் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும். மாநகர பகுதிகளுக்குள் வரக்கூடாது என ஆம்னி பேருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரும் அறிவுறுத்தி இருந்தார்.

    அதேவேளையில் பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளதால் பயணம் தடைப்படாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குத்தான் வருகிறது.

    நாளை தைப்பூசம், அதனைத் தொடர்ந்து குடியரசு நாள் என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிப்பட வாய்ப்புள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது பின்னர்தான் தெரியவரும்.

    • பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்.
    • நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் பேருந்துகள் புறப்பட வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது.

    ஆம்னி பேருந்துகளை எங்கிருந்து இயக்குவது என்பதில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    தைப்பூசம், குடியரசு தினவிழாவை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகளில் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அரசு பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பக்கத்தில் நிறுத்தப்படுகிறது.

    ஆனால் பொங்கல் வரை ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டது. பொங்கலுக்கு பின்னரும் அங்கிருந்துதான் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில்தான் நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு கறாராக தெரிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

    இதனால் நேற்று மாலையில் இருந்து கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத வகையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பயணிகளும் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தை தாண்டி சென்னை மாநகருக்குள் நுழைய முயற்சித்தன. ஆனால் போலீசார் ஆம்னி பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திருப்பி விட்டனர்.

    இதனால் ஆம்னி பேருந்து டிரைவர்கள் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தினர். கோயம்பேட்டில் நிறுத்துவார்கன் என நினைத்த பயணிகள் இதனால் கடும் அவதி அடைந்தனர்.

    கோயம்போடு, தாம்பரம் மற்றும் கிண்டி போன்ற இடங்களுக்கு அரசு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகள் குழந்தைகள் மற்றும் லக்கேஜ் உடன் ஆட்டோ அல்லது கார்களில் செல்ல முயன்றனர். ஆனால், கிளாம்பாக்கத்தில் இருந்து அதிகத்தொகை கேட்டதால் நெருக்கடிக்குள்ளாகினர்.

    குழந்தைகளுடன் மாநரகப் பேருந்துகளில் செல்ல விருப்பம் இல்லாமலும், அதிகத் தொகை கொடுத்து வாடகை ஆட்டோ, கார்களில் செல்ல முடியாமலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் பரிதவித்த நிலையில் பெரும்பாலான பயணிகள் நிற்க வேண்டியிருந்தது.

    இதற்கிடையே கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி மற்றும் ரெட் ஹில்ஸ் செல்லும் ஆம்னி பேருந்துகள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு கோயம்பேடு வழியாக செல்கிறார்.

    விடுமுறை நாட்களாக தற்போது ஆம்னி பேருந்துகளில் ஆயிரக்காணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் புறப்படும், அங்குதான் வந்து சேரும் என நம்பியிருந்ததால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    ×