search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைவான் அதிபர்"

    • தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிபர் லாய் எச்சரித்தார்.
    • தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தைபே:

    தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சிங் டே சமீபத்தில் பதவியேற்றார். தைபே நகரத்தில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    தைவான் நாட்டை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. சமீபகாலமாக சீனாவிடம் இருந்து தைவானுக்கு ராணுவ அழுத்தம் அதிகரித்து வருகிறது.

    இந்த சூழலில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அவரை ஒரு பிரிவினைவாதி என சீனா விமர்சித்துள்ளது.

    இதற்கிடையே, பதவியேற்பு விழாவின்போது பேசிய வில்லியம் லாய், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ளவேண்டும். தைவானின் ஜனநாயகத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனாவின் அச்சுறுத்தலைக் கண்டு தைவான் பின்வாங்காது. தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தலாய் லாமா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தைவானில் ஜனநாயகம் எவ்வளவு உறுதியாக வேரூன்றியுள்ளது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தைவான் மக்கள் ஒரு செழிப்பான, வலுவான ஜனநாயகத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், பெரும் செழுமையையும் அடைந்துள்ளனர், அதே நேரத்தில் அவர்களின் வளமான கலாசார பாரம்பரியங்களையும் பாதுகாத்துள்ளனர். தைவான் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் உள்ள சவால்களை சந்திப்பதில் நீங்கள் ஒவ்வொரு வெற்றியையும் பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • இரு நாட்டு மக்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 2023ல் தெரிவித்திருந்தார்
    • மக்களின் உணர்வை பொறுத்தே சீன உறவு நிர்ணயிக்கப்படும் என ட்சாய் இங்-வென் தெரிவித்தார்

    சுமார் 23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தீவு நாடான தைவான், சுயாட்சி பெற்ற தனி நாடாக தன்னை அறிவித்து கொண்டாலும், அதை பல வருடங்களாக ஏற்று கொள்ளாமல் சீனா அந்நாட்டின் மீது உரிமை கொண்டாடி வருகிறது.

    2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். ஜி ஜின்பிங், தனது உரையில், "தைவான், சீனாவுடன் இணைக்கப்படும்" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    கடந்த வருடம் ஜி ஜின்பிங் ஆற்றிய புத்தாண்டு உரையில், "தைவான் தீபகற்பத்தின் இரு பக்கமும் உள்ள மக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்" என அறிவித்திருந்தார்.

    ஆனால், இவ்வருடம் திட்டவட்டமாக இணைப்பை குறித்து அவர் பேசியிருப்பது புதிய சச்சரவிற்கு வழிவகுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    கடந்த 8 வருடங்களாக தைவான் நாட்டை ஆண்டு வரும் ஜனநாயக வளர்ச்சி கட்சியை (Democratic Progressive Party) சேர்ந்த அதிபர் ட்சாய் இங்-வென் (Tsai Ing-wen) தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில், "மக்களின் உணர்வை பொறுத்தே சீனாவுடனான உறவு நிர்ணயிக்கப்படும்" என அறிவித்தார். தைவானின் மற்றொரு முக்கிய கட்சியான குவோமிண்டாங் கட்சி (KMT) சீனாவுடன் நட்பு ரீதியான உறவை மேற்கொள்ள வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ராணுவ நடவடிக்கை மூலம் தைவானை தன் நாட்டுடன் இணைக்க சீனா முயலுமா என்பதும் அவ்வாறு நடந்தால் அமெரிக்கா தலையிடுமா என்பதும் வரும் மாதங்களில் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×