search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான டிக்கெட் கட்டணம்"

    • விமான டிக்கெட் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளன.
    • கட்டணங்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்துள்ளன.

    ஆலந்தூர்:

    தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 31-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாட இப்போதே பயணதிட்டத்தை வகுத்து வருகிறார்கள்.

    தீபாவளிக்கு விமான பயணம் மேற்கொள்வோர் தங்களுடைய விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். 90 நாட்களுக்கு முன்பே விமான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி உள்ளதால் தீபாவளி பண்டிகையையொட்டி விமான கட்டணங்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளன.

    இதில் அக்டோபர் 30-ந்தேதியில் இருந்து நவம்பர் 5-ந்தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான டிக்கெட் எண்ணிக்கையும் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளன.

    பெங்களூரில் இருந்து பாட்னா செல்ல ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் எகிறி உள்ளது. இதேபோல் பெங்களூரில் இருந்து வாரணாசிக்கு ரூ.23 ஆயிரம், மும்பை-லக்னோ ரூ.19 ஆயிரத்து 292, பூனே-லக்னோ ரூ.19ஆயிரத்து 226, டெல்லி-கவுகாத்தி ரூ.18 ஆயிரத்து 573 ஆக கட்டணங்கள் உள்ளன.

    இதேபோல் மும்பையில் இருந்து சென்னைக்கு ரூ.5083 ரூபாயும், டெல்லியில் இருந்து சென்னைக்கு ரூ.7,618 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது.

    கடைசி நேரங்களில் ரெயில் மற்றும் பேருந்து டிக்கெட் கிடைக்காதவர்கள் சொந்த ஊரு செல்வதற்கு விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுவர்.

    இதனால் தீபாவளி பண்டிகை நெருங்கும் நாட்களில் விமான டிக்கெட் கட்டணம் பலமடங்க அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் அதிகரித்ததால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை ரூபாய் 300 முதல் 1000 வரை உயர்த்தியது.
    • தற்போது விலை குறைப்பு காரணமாக எரிபொருள் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

    ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விலையில் சமீபத்திய குறைப்புக்கு பதிலளிக்கும் வகையில் இண்டிகோ நிறுவனம் கட்டணத்தில் இருந்து எரிபொருள் கட்டணத்தை நீக்கியுள்ளது.

    கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் அதிகரித்ததால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை ரூபாய் 300 முதல் 1000 வரை உயர்த்தியது. தற்போது விலை குறைப்பு காரணமாக எரிபொருள் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

    ஏடிஎஃப் விலைகளின் மாறும் தன்மையைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப கட்டணங்களைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. சர்வேச மற்றும் உள்நாட்டு சேவைகளில் இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணத்தில் 300 முதல் 1000 ரூபாய் வரை குறையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், பயணிகளின் இண்டிகோ விமான பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×