என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி கோட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன.
    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தொடர்ந்து கட்சி வளர்ச்சி பற்றி அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    அரசியல் பணிகளுக்காக புதிய வியூகங்களை அமைப்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    முதலில் உள்கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடந்தது.

    இதில் கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


    அடுத்த கட்டமாக மாவட்ட தலைவர்கள், மகளிரணி நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் என புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 100 ஆக பிரித்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விஜய் தற்போது 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.

    இதைத் தொடர்ந்து புதிய அரசியல் பயணத்தை அதிரடியாக அறிவித்த விஜய் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்களை கவரும் வகையில் கட்சி கொள்கைகள் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

    • பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    • படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் செல்லும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம், மார்ச்.13-

    நடிகர் விஜய் தி கோட்(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும்.

    தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெட்கட்புரபு முதன்முறையாக இணைந் துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் ஷக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    தி கோட் படத்தின் படப் பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுககப்பட உள்ளது.

    கிளைமேக்ஸ் காட்சிகள் முதலில் இலங்கையில் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த காட்சிகள் திருவனந்த புரத்தில் எடுக்கப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வருகிற 18-ந்தேதி கேரளா வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் காரியவட்டத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதா னம், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அவரது வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

    சினிமா படப்பிடிப் பிற்காக நடிகர் விஜய் முதன் முறையாக திருவனந்த புரத்துக்கு வர உள்ளார். படப்பிடிப்புக்காக திருவ னந்தபுரம் வரும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களை யும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    'தி கோட்' படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு 5, 6 முறை எங்கள் வீட்டுக்கு வந்து விஜய் நடித்து வரும் படத்தில் விஜயகாந்த் தோற்றம் இடம்பெறுவது பற்றி என்னிடம் அனுமதி கேட்டார்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறி இருந்தார்.

    விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்து நான் யோசிக்க வேண்டும் அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்? செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும்.

    எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப் பெரிய பாசம் உண்டு. எனவே ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும் போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.

    விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொன்னேன். வெங்கட் பிரபுவிடம் உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று அந்த நேர் காணலில் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
    • தி கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் 2-வது பாடலான சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. 

    தி கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

    சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் விழாவை நடத்த படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் அமைப்பை தொடங்கி கலந்து கொள்ளும் முதல் இசை விழா என்பதால் விழாவில் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

    இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. 'தி கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு 'தி கோட்' படத்தின் இசைப்பணியை யுவன் சங்கர் ராஜா தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தெ மெஜிஷ்யியன் ஹாஸ் ஸ்டார்டட் ஹிஸ் வொர்க் என தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய தகவல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிர களப் பணியில் இறங்கி வருகிறார்.

    அந்த வகையில் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவை கட்சி சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விஜய் வழி காட்டுதலின் பேரில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரடியாக சந்தித்து கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

    மேலும் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு எதிராக தமிழக அரசின் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என அறிக்கை விட்டு விஜய் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் பேசும்போது, நீட்டுக்கு எதிராக பேசியதோடு தமிழகத்துக்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை எனவும் பேசி அதிரடி காட்டினார்.

    சமீபகாலமாக விஜய் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் கூட்டத்தை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நடத்தி கட்சி சார்பில் விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான பணிகள் பற்றியும், பதவிகள் வழங்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் புஸ்சி ஆனந்த் பங்கேற்றார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும் என்பதால் பலரிடம் நடிகர் விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினாரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திருச்சியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் சேலத்தில் நடத்தலாமா? என நினைத்து அங்கு சில இடங்களை புஸ்சி ஆனந்த் பார்வையிட்டார்.

    மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மற்றும் எவ்வளவு தொண்டர்கள் பங்கேற்கலாம் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்சி தலைவர் விஜயிடம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்.

    விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் மாதம் 5-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

    படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய தகவல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில் விரைவில் 'தி கோட்' படத்தின் பாடல் வெளியீடு விழா நடைபெற இருக்கிறது. விழாவில் விஜயின் அரசியல் கலந்த அனல் பறக்கும் பேச்சை கேட்க தொண்டர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

    மாநாடு நடத்துவது பற்றி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டதில் எல்லோருக்கும் மையப் பகுதியாக திருச்சி இருப்பதால் அங்கு மாநாடு நடத்தினால் சரியாக இருக்கும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    வரலாற்று சிறப்புமிக்க அரசியல் மாநாடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் தொண்டர்களின் கருத்துக்களையும் கேட்டு பரிசீலனை செய்து வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. அந்த வரிசையில், இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

    இதனிடையே எக்ஸ் தளத்தில், "இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெரிய திரைப்படம் விஎஃப்எக்ஸ் பணிகள் முழுமை பெறாததால், ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புள்ளது," என்ற தகவல் வெளியானது. இந்த பதிவிற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இரண்டு முறை பதில் அளித்தார்.

     


    அதில், "இந்த தகவலில் உண்மையில்லை, நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம், 24x7 பணியாற்றி வருகிறோம் கிக்ஆஸ் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம், நெகடிவிட்டி மற்றும் பொய் செய்தியை பரப்ப வேண்டாம்," என குறிப்பிட்டு இருந்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் அளித்த இரண்டாவது பதிலில், "மன்னிக்கவும், நீங்கள் கோட்-ஐ டேக் செய்யவில்லை. நாங்கள் நேரத்திற்கு வருகிறோம், செப்டம்பர் 5 உலகம் முழுக்க," என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு பதில் அளித்த எக்ஸ் தள பயனர் ஒருவர் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்டார்.

    அதற்கு பதில் அளித்த அர்ச்சனா கல்பாத்தி "ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல்," என பதில் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கோட் படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • கோட் படத்தின் மூன்றாவது பாடல் புது அப்டேட்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலுக்கான அப்டேட் நேற்று மாலை வெளியானது.

     


    இதைத் தொடர்ந்து வெளியான புது தகவலின் படி கோட் படத்தின் அடுத்த பாடலுக்கான ப்ரோமோ இன்று (ஆகஸ்ட் 2) மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாடல் நாளை வெளியாக இருக்கும் நிலையில், முதற்கட்டமாக ப்ரோமோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • தி கோட் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

    தி கோட் படத்தின் டிரைலர் ஆக்ஸ்ட் மாதத்தின மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தி கோட் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கோட் படத்தின் புதிய அப்டேட் உடன் படத்திற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் தி கோட் படத்தில் நடித்துள்ளார்.
    • விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது தி கோட் (தி கிடேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தி கோட் படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதனிடையே விஜய் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து தமிழ வெற்றிக் கழகம் என்று தனது கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஜய்யின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பாரா என்பது தெளிவற்ற விஷயமாகவே இருக்கிறது.

    இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 69 படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முந்தைய நேர்காணல்களில் பேசும் போது, விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அது அரசியல் சார்ந்த கதையாகவே இருக்கும் என்று இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்து இருந்தார்.

    அதன்படி தளபதி 69 படம் அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஹெச். வினோத், நடிகர் விஜய் இணையும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசியல் அறிவிப்பு வெளியான நிலையிலும், நடிகர் விஜய் தி கோட் படத்தைத் தொடர்ந்து தளபதி 69 மற்றும் தளபதி 70 என இரண்டு படங்களில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயம் என்றே கூறப்படுகிறது.

    தற்போதைய தகவல்களில் தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படும் நிலையில், தளபதி 70 படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று ரிலீசுக்கும் தயாராகவுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    படத்திற்கு தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் போட்டோ ஸ்டில்ஸ்சை படட்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய படம் தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், தி கோட் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    ரசிகர்கள் இந்த படத்திற்கான டிக்கெட் எடுப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தி கோட் படம் குறித்த புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்திய தேசிய அணி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சுப்ரமனியம் பத்ரிநாத்- தி கோட் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார்.

    இதனை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அதில், கோட் படத்தில் எனது பங்கை செய்துள்ளேன். முதல் முறையாக படத்தில் அங்கம் வகிக்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. ரிவ்யூ மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×