search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்போசிஸ்"

    • தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி மையங்கள் சிறந்த வழிமுறையாக இருக்காது.
    • மாணவர்களை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது தவறான உதாரணம் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    மாணவர்களை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது தவறான உதாரணம்.

    பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் ஆசிரியரை கவனித்திருக்க மாட்டார்கள்.

    பெற்றோர் ஆகிய நாமும் குழந்தைகளின் கல்விக்கு உதவமுடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, இதற்கு ஒரே தீர்வாக பயிற்சி மையங்கள் உள்ளன.

    தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி வகுப்புகள் சிறந்த வழிமுறையாக இருக்காது.

    வழக்கமான பள்ளி வகுப்புகளை கவனிக்கத் தவறியவர்களில் பெரும்பாலானோர் அங்கு செல்கின்றனர்.

    உலக தரத்திலான கற்றல் முறை நமது மாணவர்களுக்கு கிடைப்பது முக்கியம்.

    எப்படி கற்றுக்கொள்வது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்வதே கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காக்னிசன்ட்டின் குற்றச்சாட்டுக்களை இன்போசிஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
    • வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

    ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் மென்பொருள் தொடர்பான வர்த்தக ரகசியங்களை திருடியதாக இன்போசிஸ் நிறுவனத்தின் மீது டெக்ஸாஸ் பெடரல் நீதிமன்றத்தில் காக்னிசன்ட்டின் துணை நிறுவனமான டிரிசெட்டோ வழக்கு தொடர்ந்துள்ளது.

    ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிர்வாக பணிகளுக்கு காக்னிசன்ட்டின் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதன் துணை நிறுவனமான டிரிசெட்டோ தயாரித்துள்ளது.

    காக்னிசன்ட்டின் இந்த மென்பொருளை அனுமதியின்றி பயன்படுத்தி போட்டியாக மற்றொரு தயாரிப்பை இன்போசிஸ் தயாரித்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால் காக்னிசன்ட்டின் குற்றச்சாட்டுக்களை இன்போசிஸ் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், காக்னிசன்ட் தொடர்ந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாங்கள் அனைத்து நிலுவையையும் ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும், மேற்கூறிய பரிவர்த்தனைகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்றும் தெரிவித்துள்ளது.
    • வரி செலுத்துவோரை ஏய்ப்பதற்கு ஜிஎஸ்டி அமைப்பு அவர்க்ளின் வியாபாரத்தில் தலையிட்டு கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் செய்து வருகிறது'

    பெங்களூரில் இயங்கி வரும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திடம், ரூ.32,000 கோடி  ஜிஎஸ்டி வரி கேட்டு pre-show cause நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

    கர்நாடகாவில் உள்ள Directorate General of GST Intelligence (DGGI) அனுப்பப்பட்ட இந்த நோடீசில், இன்போசிஸ் லிமிடட் நிறுவனத்தின் வெளிநாடு கிளைகளில் 2017 ஜூலை முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் நடந்த பரிமாற்றத்தில் ரூ.₹32,403 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்றும் அந்த தொகையை தற்போது செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்குப் பதிலளித்துள்ள அந்நிறுவனம், தாங்கள் அனைத்து நிலுவையையும் ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும், மேற்கூறிய பரிவர்த்தனைகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்றும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இன்போசிஸ் முன்னாள் போர்டு உறுப்பினரும் தலைமை நிதி அலுவலருமான மோகன்தாஸ் பாய் தனது எக்ஸ் பாகத்தில், 'இது இருப்பதிலேயே மோசமான வரி விதிப்பு பயங்கரவாதம் 'tax terrorism' என்று விமர்சித்துள்ளார். வரி செலுத்துவோரை ஏய்ப்பதற்கு ஜிஎஸ்டி அமைப்பு அவர்களின் வியாபாரத்தில் தலையிட்டு கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் செய்து வருகிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

     

    எனவே இந்திய ஐடி தொழில்நுட்பத்துக் கூட்டமைப்பான Nasscom இதில் தலையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் இதுபோன்ற அச்செயல்கள் இந்தியாவில் முதல்வீடு செய்வதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கண்டித்துள்ளார்,

    இந்த விவகாரத்துக்கு நாஸ்காம் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் கர்நாடக ஜிஎஸ்டி அதிகாரிகள் சர்ச்சைக்குரிய அந்த pre-show cause நோட்டீஸை திரும்பப்பெற்றுள்ளனர். இது குறித்த மேலதிக விளக்கத்தை விரைவில் ஜிஎஸ்டி நிர்வாகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது
    • வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல ஐடி நிறுவனமான இன்ஸ்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வயது குறைந்த ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் [ ஒரு நாளைக்கு சுமார் 14 மணி நேரம் வேலை] என்று கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். உடனே இதற்கு பல்வேறு நிறுவனங்களின் முதலாளிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிளம்பியது.

     

    ஆனால் ஊழியர்களின் உடல்நலன், மனநலன் ஆகியவற்றைக் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்களை அடிமைகளைப் போல் நடத்துவதற்கு இது ஒப்பாகும் என்று எதிர்ப்புக்குரல்கள் எழத் தொடங்கின. இந்த விவகாரம் இபப்டியாக புகைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் கார் வாடகை சர்வீஸ் துறையில் கோலோச்சி வரும் பிரபல ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஸ் அகர்வால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஓலா நிறுவன ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

     

     

    ஆனால் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்வது என்பது மரணத்துக்கு கூட வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிரபல நரம்பியல் நிபுணர் சுதிர் குமார் கூறுவதாவது, ஏற்கனவே வாரத்துக்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது , இதய நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 17 சதவீதம் அதிகம் உள்ளது.

    வாரத்துக்கு 55 மணி நேர வேலை வருடத்துக்கு சராசரியாக 8 லட்சம் பேரின் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைத்துள்ளது. மேலும், அதீத மன அழுத்தம், உடல் பருமன், பிரீ சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய் ஆகிய இணை நோய்கள் மூலம் மரணம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

    முதலாளிகள் தங்களின் சொத்துமதிப்பை அதிகரித்துக்கொள்ள ஊழியர்களை ஆபத்தில் தள்ளுவது ஏற்புடையது அல்ல. அதிக வேலை நேரத்தால் ஊழியர் நோய்வாய்ப்படும் அவர்களை நீக்கிவிட்டு அவர்களின் இடத்தை குறைந்த சம்பளத்தில் வேறொருவரை நியமித்து அதன்மூலமும் முதலாளிகள் லாபம் சமபாதிக்க முயல்கின்றனர் என்று அவர் கண்டித்துள்ளார். 

    • 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    • 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    2024ம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 இந்திய பிராண்டுகளை பிராண்ட் பைனான்ஸ் இந்தியா பட்டியலிட்டுள்ளது.

    அதில் 2023 ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த டாடா நிறுவனமே இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டை விட 9% வளர்ச்சியுடன் 28.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முதலிடத்தை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.

    கடந்தாண்டை விட 9% வளர்ச்சி மற்றும் 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    கடந்தாண்டை விட 38% அபார வளர்ச்சியுடன் எச்.டி.எப்.சி குழுமம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    6-ம் இடத்தில் எஸ்.பி.ஐ.யும், 7-ம் இடத்தில் ஏர்டெல்லும் 8-ம் இடத்தில் எச்.சி.எல். டெக்னாலஜியும் 9-ம் இடத்தில் லார்சன் & டர்போ நிறுவனமும் 10-ம் இடத்தில் மகேந்திரா நிறுவனமும் உள்ளது.

    • இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • ஈவுத்தொகை வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு.

    இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேரக் குழந்தை எக்கிராஹா ரோஹன் தனது ஐந்தாவது மாதத்திலேயே ரூ. 4.2 கோடியை ஈட்டியுள்ளது.

    கடந்த மாதம் நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை தனது பேரக் குழந்தைக்கு பரிசாக கொடுத்தார். இந்த பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ. 240 கோடி ஆகும். சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    அப்போது முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில், 2024 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ. 20 மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக ரூ. 8 வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

    இந்த முடிவின் காரணமாக இன்போசிஸ் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், எக்கிரஹா ரோஹனின் பங்குகளின் அடிப்படையில் அவருக்கு ரூ. 4.2 கோடி வரை ஈவுத்தொகை கிடைக்கும். 

    • 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்
    • இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது

    இன்போசிஸ் (infosys) ஐ.டி.நிறுவனம் 1981- ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் ' நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி.

    இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர். இவரது மகன் ரோஹன் மூர்த்தி - அபர்ணா தம்பதிகளுக்கு கடந்த நவம்வர் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஏககிரா ரோஹன் என பெயர் சூட்டப்பட்டது.

    இந்த குழந்த மூலம் நாராயண மூர்த்தி தாத்தா ஆனார். இந்நிலையில் தனது 4 மாத பேரன் ஏககிரா ரோஹனுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

    இந்த ஷேர்களின் மொத்த மதிப்பு ரூ.240 கோடி. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குகளுக்கு ஏககிரா ரோஹன் உரிமையாளர் ஆகியுள்ளார். மேலும், இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    • பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்.

    புதுடெல்லி:

    இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து இருப்பதாக குறிப்பிட்டு தனது எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மேலும் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார். அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்.

    மேல்சபை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் ஆவார்.

    • தற்போது ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது, இன்போசிஸ்
    • வாழ்க்கையில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்றார் என்ஆர்என்

    இந்தியாவின் முன்னணி மென்பொருள் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்று, இன்போசிஸ் (Infosys).

    1981ல், தனது 6 நண்பர்களுடன் இந்நிறுவனத்தை தொடங்கியவர் என்ஆர் நாராயண மூர்த்தி (78).

    தற்போது ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்து உலகெங்கும் பிரபலமடைந்துள்ள இன்போசிசின் நிறுவனரும், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான நாராயண மூர்த்தியின் குடும்பத்தினர், எளிமையான வாழ்க்கை முறையை வலியுறுத்தி வருபவர்கள்.

    நாராயண மூர்த்தி தனது வீட்டு கழிவறையை தானே தினமும் சுத்தம் செய்கிறார்.

    பொதுவாக, பெரும் பணக்கார குடும்பங்களில் இது கவுரவம் குறைந்த செயலாக பார்க்கப்பட்டு இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இது பற்றி கேட்கப்பட்டதற்கு அவர் கூறியதாவது:

    நமது சமூகத்தில் தங்கள் வீட்டு கழிவறையை தானே சுத்தம் செய்பவர்களை கீழ்த்தரமாக பார்ப்பவர்களும் உண்டு.

    இந்த எண்ணம் இதற்கு முன் பல பணக்கார குடும்பங்கள் உருவாக்கியிருந்த ஆதிக்க மனப்பான்மையின் விளைவு. இது போன்ற எண்ணங்களால்தான் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என பிரிவுகள் தோன்றுகின்றன.

    என் குழந்தைகள் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்கள். எதையும் கேட்டு தெரிந்து கொள்வதில் விருப்பமுடையவர்கள். எனவே என் குழந்தைகளுக்கு நான் இதன் மூலம், "நம்மை விட தாழ்ந்தவர்கள் எவரும் இல்லை" என்பதை அடிக்கடி உணர்த்த முடிகிறது.

    பிறரை மதிப்பதற்கான பல சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று என எனது குழந்தைகளுக்கு அன்புடனும் அரவணைப்புடனும் நான் கூறுவேன்.

    சமுதாயத்தில் நாம் அடக்கமாக இருக்க வேண்டும். சில நேரம் நமக்கு சமுதாயத்தில் கிடைக்கும் சற்று அதிக பயன்களை நீடித்த சலுகையாக நினைக்க கூடாது.

    வாழ்க்கையில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.

    இவ்வாறு நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

    தனது எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டதற்கு பேரக்குழந்தைகளுடன் நேரம் கழிக்கவும், புத்தகங்கள் படிக்கவும், பாடல்கள் கேட்கவும் நேரத்தை செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.


    • இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, சுதா மூர்த்தி
    • அக்‌ஷதா மூர்த்தி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி

    மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, இன்போசிஸ் (Infosys).

    தகவல் தொழில்நுட்ப துறையில் $76 பில்லியன் மதிப்புள்ள நிறுவனமாக விளங்கும் பெங்களூருவை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனத்தை, 1981ல் என்ஆர் நாராயண மூர்த்தி, தனது நண்பர்களுடன் துவங்கினார்.

    என்ஆர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி (73).

    சுதா மூர்த்தி, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாராயண மூர்த்தி தம்பதியினருக்கு ரோஹன் எனும் மகனும், அக்ஷ்தா எனும் மகளும் உள்ளனர்.

    அக்ஷதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தங்கள் மகளுக்கும் மருமகனுக்கும், தவறான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது என சுதா மூர்த்தி அறிவுரை வழங்கினார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    நம்மை குறித்து நாம் செய்யும் பணிதான் பேச வேண்டுமே தவிர நாம் அல்ல. உண்மையும் அர்ப்பணிப்பும்தான் முக்கியம். நமது செயல் தர்மப்படி சரியானதாக இருக்கும் வரையில் பிறரின் மதிப்பீடுகளை குறித்து கவலைப்படாமல் அவற்றில்தான் ஈடுபட வேண்டும். நீங்கள் நேர்மையாக இருந்து, உங்கள் நாட்டிற்கு பணியாற்றி வந்தால் மக்கள் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். அதை புறக்கணித்து விடுங்கள். உங்கள் செயலுக்கு எவரும் சாட்சியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; கடவுளே சாட்சி. உங்கள் வேலையை செய்து கொண்டே இருங்கள்; அவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். அவர்களின் தகாத வார்த்தைகள் உங்களை சில சமயம் அதிகம் பாதிக்கலாம். அவர்கள் விமர்சித்து பேசினாலும், நீங்கள் உங்கள் கடமையை செய்ய பழகி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சுதா மூர்த்தி கூறினார்.

    "குடும்ப உறுப்பினர்கள் எனும் முறையில் பரஸ்பர அன்பும், அரவணைப்பும் எங்களுக்குள் உண்டு. ஆனால், அந்த எல்லையை தாண்டி நாங்கள் இரு நாட்டு விஷயங்களை குறித்து பேசுவதில்லை" என நாராயண மூர்த்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 6 நண்பர்களுடன் இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார், என்.ஆர்.என்.
    • விப்ரோவிற்கு பெரும் போட்டி நிறுவனமாக உருவெடுத்தது, இன்போசிஸ்

    இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம், இன்போசிஸ் (Infosys).

    1981ல் இன்போசிஸ் நிறுவனத்தை தனது 6 நண்பர்களுடன் தொடங்கியவர், "இந்திய மென்பொருள் துறையின் தந்தை" என அழைக்கப்படும் என். ஆர். நாராயண மூர்த்தி (77).

    சுமார் 3.5 லட்சம் பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மென்பொருள் துறைக்கான கல்வி பயிலும் பல இளைஞர்களுக்கு கனவு நிறுவனமாக திகழ்வது, இன்போசிஸ்.

    இன்போசிஸ் துவங்கும் முன்பே 80களில் துவங்கப்பட்ட மற்றொரு மென்பொருள் துறை நிறுவனம், விப்ரோ (Wipro). இதன் தலைவர் அசிம் பிரேம்ஜி (Azim Premji).

    தனது ஆரம்ப கால வாழ்வில் செய்த பல முயற்சிகள் குறித்து அவ்வப்போது கருத்துகளை கூறி வரும் நாராயண மூர்த்தி, தான் வேலைக்கு செல்ல முயன்றது குறித்து தற்போது தெரிவித்துள்ளார்.

    நாராயண மூர்த்தி தெரிவித்ததாவது:

    அக்காலத்தில் நான் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்ற விரும்பினேன். அதற்கென விண்ணப்பமும் செய்தேன். ஆனால், என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

    அதற்கு பிறகுதான், நான் என் நண்பர்களுடன் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினேன். அதுதான் இன்போசிஸ்.

    இது குறித்து பல வருடங்கள் கழித்து பிரேம்ஜியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது, என்னை தேர்ந்தெடுக்காமல் விட்டது ஒரு தவறான முடிவு என பிரேம்ஜி தெரிவித்தார்.

    ஒரு வேளை பிரேம்ஜி என்னை தேர்வு செய்திருந்தால், எனது வாழ்க்கையும், பிரேம்ஜியின் வாழ்க்கையும் பெரிதாக மாறியிருக்கும்.

    இவ்வாறு நாராயண மூர்த்தி கூறினார்.

    விப்ரோ மென்பொருள் நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக இன்போசிஸ் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.


    நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியும் ஒரு பொறியாளர். இன்போசிஸ் தலைமை பொறுப்பில் அமர அவர் விரும்பியும், நாராயண மூர்த்தி மறுத்து விட்டார்.

    இது குறித்து சில தினங்களுக்கு முன் பேசிய நாராயண மூர்த்தி, "எங்கள் 7 பேரையும் விட மிகுந்த திறமைசாலியான சுதாவை தலைமை பொறுப்பிற்கு வர அனுமதிக்காதது, நான் செய்த மிக பெரும் தவறு" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தான் செய்த தவறையும், பிரேம்ஜி செய்த தவறையும் நாராயண மூர்த்தி கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பயனர்களால் விவாதிக்கப்படுகிறது.

     

    • அரசு மற்றும் பொது துறைகளில் வாரத்திற்கு 5 நாட்கள்தான் வேலை தினங்கள்
    • தற்போது ஐடி துறையில் நாளைக்கு 10-11 மணி நேரம் பணியாற்றுகின்றனர்

    இந்திய தகவல் தொடர்பு துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ் (Infosys). இதன் நிறுவனர்களில் ஒருவர், தற்போது 77 வயதாகும் பிரபல இந்திய கோடீசுவரரான என்ஆர் நாராயண மூர்த்தி (NR Narayana Murthy).

    கடந்த 2023 அக்டோபர் மாதம், என்ஆர்என், "சில வருடங்களாவது இந்திய இளைஞர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்" என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதே நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தன.

    அரசு துறை, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளது. அவர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணியாற்ற வேண்டிய கணக்கில், வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே உழைக்கின்றனர்.

    தனியார் துறையில் அனைத்து நிறுவனங்களிலும் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. அத்துறையில் பணிபுரிபவர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் பணியாற்றுகின்றனர்.

    மென்பொருள் துறையில் பல வருடங்களுக்கு முன் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்றினால் போதும் எனும் நிலை இருந்தது.

    கொரோனாவிற்கு பின் உலகளவில் பொருளாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் தங்கள் வேலையை காப்பாற்றி கொள்ள ஐடி துறை ஊழியர்கள் 10 அல்லது 11 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

    இப்பின்னணியில் என்ஆர்என் இது குறித்து மீண்டும் பேசியுள்ளார்.

    என்ஆர்என் தெரிவித்திருப்பதாவது:

    தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களும் விவசாயிகளும் கடுமையாக உழைக்கின்றனர். உடல்ரீதியான உழைப்பிற்குத்தான் பெரும்பாலான இந்தியர்கள் செல்கின்றனர்.

    பொருளாதாரத்தை மேலே கொண்டு வர பட்டம் பெற்று அலுவலகங்களில் அமர்ந்து பணியாற்றும் நாம், உடல்ரீதியாக கடினமாக உழைக்கும் மக்களுக்கு கடன் பட்டிருக்கிறோம் என உணர வேண்டும்.

    சமூக வலைதளங்களில் பெரிதும் நான் விமர்சிக்கப்பட்டேன்.

    என்னிடம் இது குறித்து பேச வந்திருந்தால் நான் என்ன தவறாக கூறி விட்டேன் என கேட்டிருப்பேன். அவர்கள் எனது துறை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பதல்ல; எந்த துறையானாலும் சரி. ஆனால், அவ்வாறு யாரும் வரவில்லை.

    இருந்தாலும் சில நல்ல உள்ளங்களும், அயல்நாட்டில் வாழும் இந்தியர்களும் என் கருத்தை வரவேற்றார்கள்.

    நான் வாரத்திற்கு ஆறரை நாட்கள் உழைத்தவன். காலை 06:00 மணிக்கு கிளம்பி 06:20 மணிக்கு அலுவலகத்தில் இருப்பேன். மாலை 08:30 மணிக்கு மேல்தான் பணியை முடித்து புறப்படுவேன்.

    நான் செய்து பார்க்காத எதையும் அறிவுரையாக பிறருக்கு கூறும் வழக்கம் எனக்கு கிடையாது.

    இவ்வாறு என்ஆர்என் கூறினார்.

    "என் கணவர் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்கும் வழக்கமுள்ளவர்" என அவர் மனைவி, சுதா மூர்த்தி தெரிவித்தார்.

    ஓய்வின்றி உழைப்பதால் ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலை (work-life balance) சீர்குலைந்து விடும் என உளவியல் நிபுணர்களும், மனித வள வல்லுனர்களும் எச்சரிக்கின்றனர்.

    ×