என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெர்மன் நாஜிக்கள்"

    • வயதானதால் பைடனால் வேகமாக செயல்பட முடியவில்லை என பத்திரிகைகள் விமர்சித்தன
    • டிரம்ப் வென்றால் ஜனநாயகம் தோற்று விடும் என்றார் பைடன்

    இவ்வருடம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களம் இறங்கி உள்ளனர்.

    தற்போது 81 வயதாவதால் ஜோ பைடனால் பிரசாரங்களை வேகமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை என்றும் டிரம்பை காட்டிலும் செயலாற்றுவதில் பைடன் பின் தங்கி இருப்பதாகவும் சில பத்திரிகைகள் விமர்சித்து வந்தன.

    இதை தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் பைடன் இறங்கி உள்ளார்.

    சுமார் 250 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன், பென்சில்வேனியா மாநிலத்தில் வேலி ஃபோர்ஜ் (Valley Forge) எனும் பகுதியில் அமெரிக்க படைகளை ஒருங்கிணைத்த இடத்திலேயே தனது முதல் உரையை ஜோ பைடன் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். அவர் நமது ஜனநாயகத்தை தியாகம் செய்ய துணிந்து விட்டார்.

    அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழு பொறுப்பு.

    தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவு படுத்துவது போல் உள்ளது.

    ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வட கொரிய அதிபருடனும், ரஷிய அதிபருடனும் டிரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.

    டிரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால் அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டி காப்பேன் என உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி விட்ட நிலையில், வரும் வாரங்களில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார்.
    • 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

    ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.

    103வது வயதான அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் நேற்று  [வியாழக்கிழமை] அவரது உயிர் பிரிந்தது.

    1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது. பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் கெலேட்டி என இவர் மாற்றிக்கொண்டார். ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது. 

     

    இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.

    அழித்தொழிப்பில் இருந்து தப்பிய கெலெட்டி போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துகொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

    இஸ்ரேலில் குடியேறிய அவர் ராபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

    கெலெட்டி ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9ம் தேதி தனது 104வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
    • அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார்.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற இந்திய இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

    மே 22, 2023 அன்று வாடகை டிரக்கை மூலம் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா [20 வயது] முயற்சி செய்தார்.

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அரசை கவிழ்த்து ஹிட்லரின் நாஜி சர்வாதிகாரத்தை நிறுவுவதே அவரின் நோக்கமாக இருந்துள்ளது. 

    நீதிமன்ற ஆவணங்களின்படி, சட்டப்பூர்வ அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை பெற்ற சாய், தெலுங்கானாவின் சந்தாநகரைச் சேர்ந்தவர். சம்பவத்தன்று மிசோரி நகரின் செயின்ட் லூயிஸில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு வணிக விமானத்தில் பயணித்து,  மாலை 5:20 மணிக்கு டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சாய், மாலை 6:30 மணிக்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்தார்.

    இரவு 9:35 மணிக்கு, ஹெச் ஸ்ட்ரீட் சந்திப்பில் உள்ள வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவை சுற்றிய தடுப்புகளில் சாய் அந்த டிரக்கை மோதியுள்ளார்.

    டிரக் இரண்டு முறை உலோகத் தடுப்புகள் மீது மோதியதால், புகைபிடித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, சாய், வாகனத்தை விட்டு வெளியேறி, தனது பையில் இருந்து நாஜி ஸ்வஸ்திகா கொடியை வெளியில் எடுத்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் காட்டியுள்ளார். அங்கு விரைந்த போலீஸ் அவரை கைது செய்தது.

    சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

    நாஜி சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ, தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார் என்றும் மே 22 சம்பவத்திற்கு பல வாரங்களுக்கு முன்னதாகவே சாய் இந்தத் தாக்குதலை திட்டமிட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    சாய், விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். எனவே சாய்க்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி Dabney L. Friedrich 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தற்போது தீர்ப்பளித்துள்ளார்.  

    ×