search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாவர்சந்த் கெலாட்"

    • முடா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி.
    • ஆளுநர் அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு தாக்க செய்ய இருக்கிறார் சித்தராமையா.

    முடா முறைகேடு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளிதுள்ளார். முடா முறைகேட்டில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஆளுநர் வழக்குப்பதிவை செய்ய வழங்கிய அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்ககோரியும் கோரிக்கை வைக்கப்பட இருக்கிறது.

    மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) சித்தராமையா மனைவிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியது. இந்த வீட்டுமனைகள் முறையற்ற முறையில் ஒதுக்கப்பட்டதாக கூறி, அதற்கு இழப்பீடாக மிகவும் அதிக மதிப்பிலான இடத்தில் 50:50 என்ற விகிதம் அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டதது. இந்த விவகார்தில் 4 ஆயிரம் கோடி முதல் 5 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் உங்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது? இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என சித்தராமையாகவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுந்திருந்தார். இது தொடர்பாக அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.

    அப்போது ஆளுநர் தனது கடிதத்தை திரும்பப்பெற வேண்டும் என அதில் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்துதான் ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளார்.

    • எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை.
    • கர்நாடக அரசை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.

    பெங்களூரு:

    முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா கூறுகையில், மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க இது ஒரு பெரிய சதி. கர்நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தவறு செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை என்றார்.

    இந்நிலையில், கர்நாடக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 19-ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    • ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை.
    • அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை.

    முடா முறைகேட்டில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் அனுமதி வழங்கியுள்ளார்.

    இதற்கு கர்நாடக மாநில மந்திரிகள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு ஏதும் செய்யவில்லை. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் காங்கிஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக நியமித்துள்ள பாஜக அரசு அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை. அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை. என்னால் தற்போது நோட்டீஸ் சரியா அல்லது தவறா? எனக் கூற முடியாது.

    ஆனால் ஒருவிசயம் என்னவென்றால், மேற்குவங்கம், கர்நாடகா, தமிழ்நாடு அல்லது வேறு எங்கெல்லாம் பாஜக அல்லாத அரசு ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்துள்ளதோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகப்பட்டியான இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். வழக்கின் முழு விவரம், வழக்கறிஞர் ஆலோசனைக்குப் பிறகு இது தொடர்பாக பதில் அளிப்பேன்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இதன் மூலம் தெளிவாகிறது.
    • சட்டப்பூர்வமாக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    ஆளுநர் ஒப்புதல் வழங்கியது தொடர்பாக பரமேஷ்வரா கூறியதாவது-

    மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இதன் மூலம் தெளிவாகிறது. சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு நுணுக்கமான வகையில் தெளிவான விளக்கம் அளித்திருந்தோம். அதில் இந்த முறைகேட்டில் சித்தராமையா எப்படி கட்டமைக்கப்பட்டிருந்தார் என்பது குறித்து தெரிவித்திருந்தோம். அப்படியிருந்தும் ஆளுநர் விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது, மேலிட (மத்திய அரசு) அழுத்தம் என்பதை இயற்கையாகவே உணர்கிறோம்.

    தொடக்கத்தில் இருந்தே ஆளுநர் மாளிகை தவறாக பயன்படுத்தபட்டு வருவதாக சொல்லிக் கொண்டு வருகிறோம். தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது.

    சித்தராமையாவுக்கு எதிராக எந்தவிதமான விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். சட்டப்பூர்வமாக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    • கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    • அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில ஆளுநராக பதவி வகித்து வருபவர் தாவர்சந்த் கெலாட்.

    இந்நிலையில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார் என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அவரது உடல்நிலை சீராக உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள், சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×