search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்லோவேனியா"

    • ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

     


    போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. போர்ச்சுகல் அணி வெற்றிக்கு ரொனால்டோ முதல் கோல் அடித்து அசத்தினார். மறுபுறம் போர்ச்சுகல் அணி கோல் கீப்பர் டியோகோ கோஸ்டா மூன்று பெனால்டி ஷூட்-அவுட்களை தடுத்து தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை தொடர்களில் ஏழாவது முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை எந்த அணியும் இத்தனை முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.
    • ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் நேற்று குரூப் 'சி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.


    ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு ஸ்லோவேனியா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் 2-வது பாதியில் ஸ்லோவேனியா வீரர் எரிக் ஜான்சா 77-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, ஆட்டத்தை சமனுக்கு கொண்டுவந்தார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது.

    • அமெலியா 1945ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஸ்லோவேனியாவில் வளர்ந்தவர்
    • தனது தாயாரை ஒரு இரும்பு பெண்மணி என குறிப்பிட்டுள்ளார், மெலனியா

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump).

    மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs). ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்டதால், அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.

    1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர்.

    2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.

    அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி (Miami) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாவ்ஸ் உயிரிழந்தார்.

    இத்துயர செய்தியை மெலனியா தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் மெலனியா, "அமெலியா ஒரு இரும்பு பெண்மணி. கணவர், குழந்தைகள், மருமகன் ஆகியோரிடம் மிகுந்த பாசம் உடையவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அவர் நினைவை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.


    ×