search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக தேர்தல் ஆணையம்"

    • ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும்.
    • முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது.

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாருக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

    வாக்களார் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்களை தேர்தல் துறையால் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

    இதற்கு, விளக்கம் அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், "சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது. முகவரி மாற்றம், மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பெயர்கள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 2 வார காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது.

    ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும். வீடுகளில் வாக்காளர்கள் இல்லாமல் இருப்பது, ஒவ்வொரு முறையும் வாக்குச்சாவடி அலுவலர்களால் உறுதி செய்யப்படுகிறது.

    முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 543ல், தமிழகத்தின் 39 பாராளுமன்ற இடங்களும் அடங்கும்
    • இந்திய தேர்தல் ஆணைய கூட்டம் 2 நாட்கள் நடைபெற உள்ளது

    2024 ஜூன் மாதம், 17-வது பாராளுமன்றத்தின் காலம் நிறைவடைகிறது.

    மொத்தம் உள்ள 543 இடங்களுக்கான தேர்தல் இவ்வருடம் மே இறுதிக்குள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் 39 பாராளுமன்ற தொகுதிகளும், புதுச்சேரியின் 1 தொகுதியும் அடங்கும்.

    இது குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த போகிறது. இதற்காக தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் இறுதி பட்டியல் குறித்தும் விவாதித்து முடிவு எடுக்க நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம், 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கு ஆணையம் தயாராக உள்ளதாக சில தினங்களுக்கு முன் சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×