என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.ஏ.20. தொடர்"

    • வான் டெர் டுசென் - ரியான் ரிக்கல்டன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 குவித்தது.
    • சென்னை அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், சேப்பேர்ட், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 10-ம் தேதி தொடங்கியது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுன் - சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கேப் டவுன் அணியின் தொடக்க வீரர்களாக ரஸ்ஸி வான் டெர் டுசென் - ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர். அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசென் 46 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 குவித்தது. இந்த ஜோடியை இம்ரான் தாஹீர் பிரித்தார்.

    வான் டெர் டுசென் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும். அடுத்து வந்த டெவால்ட் ப்ரீவிஸ் 5 ரன்னிலும் லிவிங்ஸ்டன் 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கல்டன் கடைசி ஓவரில் 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் கேப் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 250 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், சேப்பேர்ட், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • எம்ஐ கேப் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ரன்கள் எடுத்தது.
    • கேப் டவுன் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுன் - சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கேப் டவுன் அணியின் தொடக்க வீரர்களாக ரஸ்ஸி வான் டெர் டுசென் - ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர். அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசென் 46 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 குவித்தது. இந்த ஜோடியை இம்ரான் தாஹீர் பிரித்தார்.

    இறுதியில் எம்ஐ கேப் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே ரன் எடுக்க திணறியது. இதனால் 3 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்த அணி சீரான இடைவெளியில் அடுத்ததுடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    கடைசி வரை போராடிய ஷேப்பர்ட் 34 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதனால் கேப் டவுன் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுன் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 184 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 152 ரன்கள் எடுத்து தோற்றது.

    கேப் டவுன்:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றனது.

    இதில் நேற்று முன்தினம் நடந்த தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்கிரம் 40 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எஸ்.ஏ.20 தொடரில் இருந்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. ஆட்ட நாயகன் விருது மார்கிரமுக்கு வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி 175 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 177 ரன்கள் எடுத்து வென்றது.

    கேப் டவுன்:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரூபின் ஹெர்மான் 53 பந்தில் 81 ரன்கள் குவித்தார். பிரேடோரியஸ் 59 ரன்கள் சேர்த்தார்.

    தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்சி 49 பந்தில் 78 ரன்கள் குவித்தார். ஜோர்டான் ஹெர்மான் 69 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் எஸ்.ஏ.20 தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது டோனி டி ஜோர்சிக்கு வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய எம்.ஐ.கேப் டவுன் அணி 181 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 105 ரன்னில் ஆல் அவுட்டானது.

    கேப் டவுன்:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் நடந்தது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது. எலிமின்னேட்டர் 2 சுற்றில் பார்ல் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அந்த அணியின் எஸடரூசியன் 39 ரன்னும், பிரேவிஸ் 38 ரன்னும், ரிக்கல்டன் 33 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவரில் 105 ரன்னில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் ஏபெல் 30 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    எம்.ஐ.கேப் டவுன் சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×