என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய கிரிக்கெட் வீரர்கள்"
- "டைமிங்" மற்றும் "ஷாட் செலக்ஷன்" ஆகியவற்றில் ஹனிஃப் கை தேர்ந்தவர்
- 1958ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஹனிஃப் சாதனை புரிந்தார்
"லிட்டில் மாஸ்டர்."
கிரிக்கெட் விளையாட்டில் இந்த பட்டத்தை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar); அதற்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar).
1971லிருந்து 1987 வரை கவாஸ்கர் இந்தியாவிற்காக 125 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள், 34 சென்சுரிகள், 50க்கும் மேல் சராசரி ரன் குவிப்பு என பெரிய சாதனைகளை புரிந்ததால், சுனில் கவாஸ்கர் "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்படுவது பொருத்தம்தான். டெஸ்ட் விளையாட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் அந்தஸ்தை பெற்றவரும் கவாஸ்கர்தான்.
பவுன்சர்களுக்கு சாதகமான விக்கெட்டுகளில், ஹெல்மெட் அணியாமல், உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சிறப்பாக விளையாடியது அவரது சாதனைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
ஆனால், முதல் முதலாக "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்பட்ட சிறப்பான வீரர், கவாஸ்கர் அல்ல.

பாகிஸ்தான் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன், ஹனிஃப் மொகம்மது (Hanif Mohammad), அப்பட்டத்திற்கு சொந்தமானவர்.
1952லிருந்து 1969 வரை அந்நாட்டிற்காக 55 டெஸ்ட் மேட்சுகள் விளையாடி, 3915 ரன்கள் குவித்த ஹனிஃப் மொகம்மது, 43.5 எனும் சராசரியில் ரன்களை குவித்தார்.
பேட்டிங் செய்பவர்களுக்கு அவசியமான "டைமிங்" மட்டும் "ஷாட் செலக்ஷன்" ஆகிய இரண்டிலும் ஹனிஃப் கைதேர்ந்தவர்.
டெஸ்ட் மேட்சுகளில் ஆசியாவிலிருந்து முதலில் 300 ரன்கள் அடித்த பெருமை ஹனிஃபிற்கு உண்டு.

1958ல் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 970 நிமிடங்களில் 337 ரன்கள் அடித்து தோல்வியை நோக்கி சென்ற பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை எளிதாக்கினார்.
2016 ஆகஸ்ட் 11 அன்று தனது 81-வது வயதில், நுரையீரல் நோய் சிகிச்சை பலனின்றி காலமானார்.
முதல் லிட்டில் மாஸ்டரான ஹனிஃப் மொகம்மதுவின் சாதனையை பல வருடங்களுக்கு பின், 1997ல் இலங்கையின் சனத் ஜெயசூரியாவும், 2004ல் வீரேந்தர் சேவாக்கும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
- மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
- இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய கிரிக்கெட் வீரர் கள் 2007-ம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது 2-வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றிருப்பது பாராட்டுக்குரியது. இந்திய வீரர்களின் அசாத்திய திறமையாலும், கடின உழைப்பாலும் இந்தி யாவிற்கு வெற்றியும், பெருமையையும் தேடித்தந்தி ருக்கின்றார்கள். இந்திய கிரிக்கெட் வீரார்களின் இந்த சாதனைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
விளையாட்டுத் துறையில் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்கள். வருங்காலங்களிலும் அவர்களின் வெற்றி தொடர வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டுத் துறைக்கு தேவையான அனைத்து ஆக்கபூர்வமான உதவிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது.
- வீரர்களின் மோசமான ஆட்டத்தை தடுக்க சில கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்மையில் மும்பையில் நடந்த பிசிசிஐ மீட்டிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பிசிசிஐ முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய அணியின் எதிர்காலம் குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
மேலும் ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியின் எதிர்கால கேப்டன் குறித்த பேச்சு வார்த்தையும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முக்கிய முடிவுகள் குறித்தும் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த பின்னர் இந்திய அணியின் நிர்வாகம் இந்திய அணியின் மீதும், இந்திய அணியின் வீரர்கள் மீதும் கடுமையான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் தங்களது நிர்வாகத்தின் உரிய அனுமதியின்றி வீரர்கள் தங்களது குடும்பத்தாருடனோ, உறவினர்களுடனோ எவ்வித தொடர்களுக்கும் பயணிக்க கூடாது என்ற முடிவையும் எடுத்திருந்தது.
மேலும் வீரர்களின் மோசமான ஆட்டத்தை தடுக்க தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இனிவரும் எந்த ஒரு தொடரையும் இந்திய வீரர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்தவகையில் இனி இந்திய அணியின் வீரர்கள் விளையாடும் எவ்வித தொடர்களுக்கும் அவர்களுக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பள விகிதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பி.சி.சி.ஐ வீரர்களுக்கு தகுதிக்கேற்ப வருடாந்திர ஒப்பந்த பட்டியலின் படி சம்பளத்தை வழங்கி வருவதால் வீரர்கள் மெத்தனமாக இருப்பதாகவும், அதனை தடுக்க இனி திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவினை எடுத்து இனி பங்களிப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளதாம். இதன் காரணமாக இனிவரும் தொடர்களை இந்திய வீரர்கள் முக்கிய தொடர்களாக எடுத்து கவனமாக விளையாடுவார்கள் என்பதனாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது.
- இதனால் வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது.
சமீபத்தில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிகளைப் பரிசீலித்து வருகிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் சுற்றுப்பயணங்களில் அவர்களுடன் இணைவதைத் தடை செய்வது உள்ளிட்ட மாற்றங்களை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்ணணையாளர் ஹர்சா போக்லே, கிரிக்கெட் வீரர்கள் பிஆர் நிறுவனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிசிசிஐ இந்திய அணிக்காக முன்மொழிவதைப் போல மாற்றங்களைப் படித்தேன். நான் எவ்வளவு நம்ப வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அணியினர் பிஆர் நிறுவனங்களை வைத்திருப்பதைத் தடை செய்யும் ஒரு விதியை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும்.
என போக்லே கூறினார்.
சுப்மன் கில் பிரபலமான பிஆர் நிறுவனமான கார்னர் ஸ்டோன்-ஐ நியமித்துள்ளார். விராட் கோலி, நவம்பர் 2024 இல் Sporting Beyond நிறுவனத்துடன் இணைந்திருந்தார். இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் பிளாக் ஹாட் டேலண்ட் சொல்யூஷன்ஸ் என்ற பிஆர் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறார்.
அதே நேரத்தில் யஷஸ்வி ஜெயஸ்வால் மெராகி ஸ்போர்ட் கவனிப்பில் இருக்கிறார். ரைஸ் வேர்ல்ட் வைடு ரோகித், பும்ரா, திலக் வர்மா, ஷ்ரேயாஸ், சாய் சுதர்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், குர்ணால் பாண்ட்யா போன்ற பல நட்சத்திர வீரர்களை நிர்வகிக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பொது இமேஜ் மற்றும் ஆதரவுகளை நிர்வகிக்க பிஆர் நிறுவனங்களை எவ்வளவு நம்பியிருக்கிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடக்கவுள்ளது.
- இந்தியா- இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தப்போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் இன்று மாலை சென்னை வந்தனர். நாளை முதல் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இந்தப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக பட்ச டிக்கெட் விலை ரூ.15 ஆயிரமாகும். டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் ஆட்டம் நடக்கிறது. கடைசியாக 2018 நவம்பர் 11-ந்தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது. கடைசியாக சேப்பாக்கத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
- வீரர்கள் தங்களது குடும்பத்தினரை ஏதாவது ஒரு போட்டிக்கு மட்டும் அழைத்துச் செல்லலாம்.
- அந்த ஒரு போட்டியோடு அவர்கள் திரும்பி விட வேண்டும்.
மும்பை:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை (19-ந் தேதி) முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது.
முன்னதாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைப்படி 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது மட்டும் 2 வாரங்கள் குடும்பத்தினரை உடன் வைத்துக் கொள்ள வீரர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி 19 நாட்களில் முடிந்து விடுவதால் வீரர்களுடன் குடும்பத்தினர் செல்ல முடியாது என கூறப்பட்டது.
ஆனால் தற்போது துபாய்க்கு சென்றுள்ள இந்திய அணியில் உள்ள சில மூத்த வீரர்கள் தங்களது குடும்பத்தினர் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும் அதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதனை பரீசிலித்த பி.சி.சி.ஐ. நிபந்தனையுடன் இந்திய வீரர்களுக்கு சலுகை வழங்கி உள்ளது.
அதன்படி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை ஏதாவது ஒரு போட்டிக்கு மட்டும் அழைத்துச் செல்லலாம் என்றும் அந்த ஒரு போட்டியோடு அவர்கள் திரும்பி விட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. அதுமட்டும் இன்றி குடும்ப உறுப்பினர்கள் எந்த போட்டிக்கு முன்பாக வர இருக்கிறார்கள் என்பதை முறையாக தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே அங்கு செல்ல வேண்டும் என்றும் அப்படி உரிய அனுமதியுடன் சென்றால் ஒருநாள் வீரர்களுடன் இருக்க குடும்பத்தாருக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.