என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி எய்ம்ஸ்"
- லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு (76 வயது) திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரின் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
எனவே பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு லாலு பிரசாத் யாதவ் புறப்பட்டுச் சென்றார். இரவு ஏழு மணிக்கு டெல்லிக்கு விமானம் மூலம் லாலு புறப்பட்டார்.
- கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
73 வயதான ஜகதீப் தன்கர் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 நாள் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை முன்னேற்றம் கொண்டுள்ளதால் இன்று (மார்ச் 12) மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு துணைத் தலைவரின் உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வந்தோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்த பிறகு, எய்ம்ஸ் மருத்துவக் குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அரை நாள் விடுமுறை அறிவித்தது.
- மருத்துவமனையின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
புதுடெல்லி:
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளன.
இதற்கிடையே, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாளை மதியம் 2.30 மணிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, நாளை அறிவிக்கப்பட்டிருந்த அரைநாள் விடுப்பை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்பப் பெற்றது. மருத்துவமனை நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவித்துள்ளது.
இதேபோல், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அரைநாள் மூடப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் நடைபெறும் என மருத்துவமனை தரப்பில் கோர்ட்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லை என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
- டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது.
- உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் பணியாற்றி வரும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில டாக்டர்களின் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரு மாநிலங்களின் புதிய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடர்பாக பேசினார். அப்போது, இந்த மருத்துவக்கல்லூரிகளின் தரத்தை குறைக்கமாட்டோம் என உறுதிபட தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது. ஆனால் 1980-களில்தான் அரு ஒரு பிராண்டாக உருவெடுத்தது. அந்தவகையில் எந்தொரு நிறுவனமும் முழு அளவில் வளர்ச்சியடையவும், இயங்கவும் 20 ஆண்டுகள் எடுக்கும்.
அதேநேரம் எய்ம்ஸ் தரத்தை குறைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அந்த பிராண்ட் பெயரை பாதுகாப்போம். மேலும் ஆசிரியர் தேர்வில் எந்தவித சமரசமும் செய்யமாட்டோம்.
பீகாரின் தர்பங்காவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான பூமி பூஜை விரைவில் நடைபெறும். ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஊழியர் தேர்வுடன் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மருத்துவக்கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான கொள்கை மாற்றங்கள் நடந்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திராக மாற்றப்பட்டு உள்ளன. தற்போது 1.73 லட்சம் மந்திர்கள் உள்ளன. டிஜிட்டல் முறையில் அவற்றின் தர மதிப்பீடு நடைபெறுகிறது.
பிரதம மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.
387 ஆக இருந்த நாட்டின் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 786 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 156 மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு உள்ளன.
இதைப்போல எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 75 ஆயிரத்துக்கு மேல் உயர்த்தவும் திட்டம் உள்ளது.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.
- அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தன்கரை பார்க்க ஜேபி நட்டா விரைத்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான தன்கருக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலியும், உடல் அசைவுகர்யமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தற்போதைக்கு சீராக உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகிறோம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்றுவரும் தன்கரை பார்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா விரைத்துள்ளார்.