என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவோதயா பள்ளிகள்"
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.
நெல்லை:
இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலாளர் ராஜா பாண்டியன் தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை திறந்திட வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.
தொடர்ந்து தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அதனை வழங்கி வரும் அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்