என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்மபூஷன்"

    • மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
    • சசீந்திரன் முத்துவேல், செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

    மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.

    தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.

    அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • 7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு ஒப்புதல்.

    2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    அதன்படி, இந்தாண்டில் பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரகுமாருக்கு மற்றும் தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 30 வருட கலைத்துறை சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது.
    • இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது.

    தமிழின் முன்னணி நடிகர்களாக வளம் வரும் அஜித் மற்றும் விஜயை ரசிகர்கள் போட்டியாளர்களாக பார்க்கின்றனர். ஆனால் இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி விஜய் அரசியலில் நுழைந்துள்ளார்.

    அதேநேரம் ரேஸிங்கில் அஜித் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருவரும் தத்தமது பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.

    மேலும் அஜித்தின் 30 வருட கலைத்துறை சேவையை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்தது. இந்நிலையில் அரசியலில் விஜய் களமாடி வரும் நிலையில் அவரின் செயல்பாடுகளை எக்ஸ்ரே கண்கள் கொண்டு பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் அஜித் ரேஸில் மூன்றாம் இடம் பிடித்ததற்கோ, அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கோ விஜய் வாழ்த்து சொல்லவில்லை என ஒரு கூட்டம் சர்ச்சையை கிளப்பியது.

    இருவரின் பாதைகள் பிரிந்தாலும் அவர்களை மீண்டும் போட்டியாளர்கள் தராசில் வைத்து இந்த கருத்துக்கள் பரவின. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    சுரேஷ் சந்திரா கூறுகையில், அஜித் சார் ரேஸில் வெற்றி பெற்றதும் விஜய் சாரிடம் இருந்துதான் முதல் வாழ்த்து வந்தது. அதேபோல சாருக்கு விருது அறிவிக்கப்பட்டதும், விஜய் சாரிடமிருந்து வாழ்த்து வந்தது. இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது. விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பதில் துளியும் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×