என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூசத் திருவிழா"

    • கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர்.
    • 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாள் முதல் 6-ம் நாள் வரை காலையில் தங்க பல்லக்கில் சுவாமி வீதிஉலா வந்தார். 6-ம் நாளான 24-ந்தேதி வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. 7-ம் நாளான 25-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் பழனி நகரமே விழாக்கோலம் பூண் டு காணப்பட்டது. குறிப்பாக தேவகோட்டை பகுதியில் இருந்து நகரத்தார் ஒருங்கிணைந்து பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக பாத யாத்திரையாக பழனிக்கு வருகின்றனர்.

    அதன்படி கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர். 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

    தொடர் விடுமுறை காரணமாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மலைக்கோவில் என எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூச திருவிழாவில் இன்றிரவு தெப்பதேரோட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் கொடியிறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.

    • எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
    • பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சேலம், எடப்பாடி, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதராஜகுல காவடிக்குழுவைச் சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தருவார்கள்.

    தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர் வருகை தரும் அவர்கள் மலைக்கோவிலில் தங்கி இருந்து தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். இவர்களில் அன்னதானக்குழு, பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் உள்ளனர்.

    இதில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழுவினர் சுவாமி தரிசனம் செய்வதற்கு 1 நாள் முன்னதாகவே பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.


    இதே போல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் மானூர் வழியாக அவர்கள் பழனி சண்முக நதி பகுதிக்கு வருகை தர உள்ளனர். அப்போது சண்முக நதியில் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுடன் பழனி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.

    அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.

    பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரிச்சம்பழம், 1 டன் கற்கண்டு, 200 லிட்டர் தேன், 200 லிட்டர் நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவைகளை கொண்டு ராட்சத அண்டாக்களில் கலந்து சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நிறைவடைந்த பின்னர் பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அதனை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்து பின்னர் பக்தர்கள் அனைவரும் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்து செல்வார்கள். மலைக்கோவிலில் மலர்களால் கோலமிடும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனி மலைக்கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகப்பெருமானுக்கும் உகந்த வழிபாட்டு நாளாகும்.
    • உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாளும் இதுவே.

    பவுர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. தை மாத பவுர்ணமியான தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என்கிற இந்த ஆறு மாத காலத்தை 'உத்திராயன புண்ணிய காலம் என்று கூறுவார்கள். இந்த புண்ணிய காலத்தில் வருகிற முதல் பவுர்ணமி, தை மாத பவுர்ணமி ஆகும்.

    இதனால் நம் விருப்ப தெய்வங்களின் நேரடிப் பார்வை நம் மீது படும் யோகம் உண்டாகி, நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். நல் வாய்ப்புகள் எளிதாகக் கிட்டும்.


    தை அமாவாசை போல தை பவுர்ணமி விரதத்திற்கும் அதிகமான பலன்கள் உண்டு. பவுர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில் நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.

    அப்படிப்பட்ட சக்தி மிகுந்த நாளில், நாம் வழிபாடு செய்வது தீய சக்திகளி டம் இருந்து நம்மைக் காக்கும். பவுர்ணமி நன்னாளில் வழிபாடு செய்தால் வாழ்வில் இதுவரை அடைந்த துன்பங்கள் அனைத்தும் விலகும்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமியும் ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் தை மாதம் வரும் பவுர்ணமி, பூச நட்சத்திரத்துடன் இணைந்து, 'தைப்பூசம்' என்று வழிபடப்படுகிறது.

    இந்த தைப்பூசமானது, சிவபெருமானுக்கு மட்டுமின்றி, முருகப்பெருமானுக்கும் உகந்த வழிபாட்டு நாளாகும். சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள், தைப்பூசமாகும்.

    உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாளும் இதுவே. தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரிய வர். அவர் அறிவுக் கடவுள்' என்று போற்றப்படுகிறார்.

    எனவே பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி அமையும் நாளான தைப்பூசத்தன்று, புண்ணிய திருத்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் அறிவாற்றல் பெருகும். மனக்குழப்பம் அகலும் என்பது ஐதீகம்.

    தை மாத பவுர்ணமியில் விரதம் இருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி சூரிய பகவானை வழிபட வேண்டும். அப்போது வெல்லம் கலந்த பாயசம் செய்து, அதை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும்.


    தை மாதம் வரும் பவுர்ணமியில் திருவிடைமருதூர் திருக்கோவிலில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனுக்கு காவடி எடுக்கப்படும். திருச்சேரை சாரநாதப் பெருமாள் கோவிலில், தைப்பூசம் அன்று காவிரிக்கு இறைவன் காட்சி தந்த நாளாகக் கருதி, தேர் திருவிழா நடத்தப்படுகிறது.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், ஒரு தை மாதவெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரம் அன்றுதான் இறை ஒளியுடன் கலந்தார். எனவே வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத் தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலாரை வழிபடுவார்கள்.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருநாளையொட்டி முதல் நாளில் சந்திரசேகர சுவாமி தெப்போற்சவமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலர் தெப்போற்சவமும் நடைபெறும்.

    சிதம்பரத்திற்கு திருப்பணிகள் செய்த இரணியவர்மன் என்ற மன்னன், நேருக்கு நேராக நடராஜரின் தரிசனத் தைக் கண்ட நாள் தை மாத பவுர்ணமி ஆகும்.

    இந்த நாளில் சமயபுரம் மாரியம்மன், வட திருக்காவிரிக்கு எழுந்தருளி, அண்ணனாகிய அரங்கநாதரிடம் இருந்து பட்டாடை, பரிவட்டம் மற்றும் சீர்வரிசைகளைப் பெற்றுத் திரும்பும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும்.

    ×