search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனந்த் அம்பானி"

    • ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
    • அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    ஆசியாவின் பெரும் பணக்காரர்முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானிக்கு ராதிகா மெர்ச்செண்டுடன் கோலாகலமாக திருமணம் நடந்த முடிந்திருக்கிறது. மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, ஷாருக்கான், சல்மான் கான் என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே கலந்து கொண்டது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

     

    இந்நிலையில் ஆடுகளம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகி முன்னணி பாலிவுட் நடிகையாக வளம் வரும் டாப்ஸி தான் ஏன் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று மனம் திறந்துள்ளார்.

     

    அவர் கூறியதாவது, எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது; திருமணம் என்பது தனிப்பட்ட விசயம் என நினைக்கிறேன்; எனக்கு அல்லது எனது குடும்பத்துக்கும் சிறியதாவது பழக்கமிருந்தால் மட்டுமே நான் பெரும்பாலும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வேன்; அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் கடந்த 12-ந்தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
    • விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தற்போது இந்தியில் 'சர்ஃபிரா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

    அக்ஷய் குமார் நாயகனாக நடித்த இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கடந்த 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தபோது அக்ஷய் குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

    முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் கடந்த 12-ந்தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

    ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்து இருந்த நிலையில் அவரது மகன் திருமணத்தில் அக்ஷய் குமாரால் கலந்துகொள்ள முடியவில்லை.

    இந்நிலையில் கொரோனா பரிசோதனையில் நெகட்டிங் வந்த பின்னர், புதுமண தம்பதிகளுக்கு அன்பான வாழ்த்துகளை தெரிவிக்க அக்ஷய் விழாவில் கலந்து கொண்டார்.

    நேற்று மாலை நடைபெற்ற அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு பிந்தைய விழாவில் அக்ஷய் குமாரும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னாவும் கலந்து கொண்டனர்.

    நேற்று நடந்த விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதில் அக்ஷய் மற்றும் ட்விங்கிள் இருவரும் ஒரே வண்ண உடைகளை அணிந்து அரங்கிற்குள் நுழைவதை காண முடிந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். அப்போது, அம்பானிக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி அசத்தி இருக்கிறார்.

    இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    • தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    திருப்பதி:

    பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

    திருமணத்தில் கலந்து கொள்ள தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. முக்கிய பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி (வயது 26) மற்றும் முகமது ரஃபி ஷேக் (28) ஆகியோர் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

    சந்தேகத்திற்கு இடமாக இருவரும் சுற்றி திரிந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து வெளியே அனுப்பினர்.

    வெளியே சென்ற இருவரும் மீண்டும் யாருக்கும் தெரியாமல் மண்டபத்திற்குள் நுழைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் 2 வாலிபர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
    • அழகான வாட்சுகளை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர் சல்மான்கான்.

    முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

    நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.

    திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட சல்மான் கான் 23 கோடி மதிப்பிலான வாட்ச் கட்டியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    23 கோடி ரூபாய் மதிப்பிலான படேக் பிலிப் அக்வானாட் லூஸ் ரெயின்போ ஹாட் ஜோய்லரி கடிகாரத்தை சல்மான் கான் அணிந்திருந்தார்.

    அழகான வாட்சுகளை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர் சல்மான்கான். அவரிடம் உள்ள பல வாட்சுகளில் இதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்த நிலையில், மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் தன் குடும்பத்தாரை விட்டு பிரியும் போது முகேஷ் அம்பானி கண் கலங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வைரலாகும் வீடியோவில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மெதுவாக நடந்து செல்கின்றனர். அப்போது, ராதிகாவுக்கு மற்றொரு நபர் வெள்ளி விளக்கைக் கொடுக்கிறார். இதை பார்க்கும் முகேஷ் அம்பானி கண் கலங்கி எமோஷனலாக காணப்பட்டார்.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், நான் முகேஷ் அம்பானியை இந்த காரணத்திற்காகவே விரும்புகிறேன். அவர் உணர்ச்சிகளைக் காட்டுகிறார் மற்றும் தனது மருமகளை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடத்துகிறார் என்றார்.

    முன்னதாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தில் ஆனந்த் அம்பானி பேசும் போது, முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

    • பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
    • ஊழியர்களுக்கு வெள்ளி நாணயம் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இதில், பிரதமர் மோடி பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்டை வாழ்த்தினார். அப்போது மணமக்கள் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

    ஏற்கனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயம் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ஆனந்த் அம்பானி திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    க்ஷதனது திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட மாப்பிள்ளை தோழர்களுக்கு சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள வாட்ச்சை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்டுகிறது.

    Audemars Piguet நிறுவனத்தின் Perpetual Calendar வகை லிமிட்டட் எடிஷன் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷாருக்கான், ரன்வீர் உள்பட சிலர் ஒரே மாதிரியான வாட்களை அணிந்து எடுத்த ரீல்ஸ் இணையத்தில் பரவி வருகிறது.

    • ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
    • திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

    முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

    நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.

    திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    திருமண நிகழ்வில் நீட்டா அம்பானியுடன் இணைந்து ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர்.
    • ப்ரூச்சை ஆனந்துக்கு அவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசளித்ததாக கூறப்படுகிறது.

    முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

    நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.

    திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர். இதேபோல கிரிக்கெட் வீரர் டோனி, மனைவி சாக்சி, மகள் ஜிவாவுடன் மஞ்சள்நிர பாரம்பரிய உடையணிந்து வந்து இருந்தார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, நடிகர்கள் அனில் கபூர், சஞ்சய் தத், வெங்கடேஷ், வருண் தவான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஜாக்கி ஜெராப், ராஜ்குமார் ராவ், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான், ஜான்வி கபூர், இயக்குனர் கரன் ஜோகர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி கோடி மதிப்புள்ளான ப்ரூச் அணிந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Panthere De Cartier ப்ரூச் ஆனது 51 சபையர்கள், இரண்டு மரகதங்கள் மற்றும் ஒரு ஓனிக்ஸ் வைரம் ஆகியவற்றை கொண்ட 18K தங்கத்தால் ஆனது.

    இந்த ப்ரூச்சை ஆனந்துக்கு அவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசளித்ததாக கூறப்படுகிறது.

    • திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர்.
    • வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்தக துறையை சேர்ந்த பிரபல தொழில்அதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களின் திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சரத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தநிலையில் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர். வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதற்கிடையே ஆனந்த் அம்பானியின் திருமண செலவு ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை என்ற தகவல் வெளியாகி பொதுமக்களிடையே பேச்சு பொருளாகி உள்ளது.


    இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் நட்சத்திரங்கள் நிறைந்த திருமண கொண்டாட்டத்தில் நைஜீரிய இசைக்கலைஞரும், ராப் பாடகருமான ரேமா பாடல் நிகழ்ச்சிக்கு $3 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் ரூ.25 கோடிக்கு மேல் பெறுகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    நைஜீரிய ராப் பாடகருமான ரேமா, 'காம் டவுன்' பாடலுக்குப் பெயர் பெற்றவர். இவர் திருமணத்தில் 'காம் டவுன்' பாடலை மட்டுமே பாடுவார் என்று கூறப்படுகிறது. ரேமாவைத் தவிர, 'டெஸ்பாசிட்டோ' புகழ் லூயிஸ் ஃபோன்சியும் இந்த நிகழ்வில் நிகழ்ச்சி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலக பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியின் ஆடம்பர திருமணம் அரங்கேறியது.
    • திருமண விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பலர் அசத்தல் நடனமாடினர்.

    உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி (வயது 29). இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை கவனித்து வருகிறார். இவருக்கும் மருந்தக துறையை சேர்ந்த பிரபல தொழில்அதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களின் திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சரத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தநிலையில் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர்.

    மணமகன் ஆனந்த் அம்பானி சிவப்பு, தங்க நிற செர்வானி அணிந்து தந்தை முகேஷ் அம்பானி, தாய் நீடா அம்பானி, அக்காள் இஷா, அவரது கணவர் ஆனந்த் பிரமல், அண்ணன் ஆகாஷ், அவரது மனைவி சோல்கா மேத்தா மற்றும் பிள்ளைகளுடன் வந்தார்.

    மணமகன், மணமகள் மட்டுமின்றி விருந்தினர்களும் கண்ணை கவரும் ஆடம்பர ஆடை அணிந்து திருமணத்துக்கு வந்து இருந்தனர். இரவில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கோலாகலமாக நடந்தது.


    விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர். இதேபோல கிரிக்கெட் வீரர் டோனி, மனைவி சாக்சி, மகள் ஜிவாவுடன் மஞ்சள்நிர பாரம்பரிய உடையணிந்து வந்து இருந்தார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, நடிகர்கள் அனில் கபூர், சஞ்சய் தத், வெங்கடேஷ், வருண் தவான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஜாக்கி ஜெராப், ராஜ்குமார் ராவ், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான், ஜான்வி கபூர், இயக்குனர் கரன் ஜோகர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர், போரிஸ் ஜான்சன், அமெரிக்காவை சேர்ந்த டி.வி. பிரபலம் கிம் கர்தாஷியன், அவது சகோதரி கோலே கர்தாஷியன், ராப் பாடகி ரீமா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு உலக பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியின் ஆடம்பர திருமணம் அரங்கேறியது.

    திருமண விழாவில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பலர் அசத்தல் நடனமாடினர். யாரும் எதிர்பாராத வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடனமாடினார். அவருடன் மணமகன் ஆனந்த் அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்தினர் ஆடினர்.

    இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தையொட்டி மும்பை பி.கே.சி. பகுதி விழா கோலம் பூண்டு உள்ளது. அந்த பகுதியே மின்னொளியில் ஜொலிக்கிறது. வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதையொட்டி பி.கே.சி. பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


    • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
    • ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்தார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தற்போது இந்தியில் 'சர்ஃபிரா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

    அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்த அக்ஷய் குமாருக்கு திடீரென உடல்நல குறைவு செற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். படம் வெளியான அன்று அவரால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை.

    மேலும், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்தார். ஆனால், தற்போது கரோனா பாதிப்பு காரணமாக அக்ஷய் குமாரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×