search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகம் பாம்பு"

    • வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார்.
    • ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் இறந்துபோன பாம்பிற்கு இளைஞர் ஒருவர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வதோதரா மாவட்டத்தில் வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார். ஒரு அடி நீளமுள்ள ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    அந்த இடத்தில் எவ்வித அசைவும் இல்லாமல் விசமில்லாத பாம்பு ஒன்று இருந்துள்ளது. உடனே பாம்பின் வாயில் வாய் வைத்து தத்வி மூச்சுக்காற்று கொடுத்துள்ளார். முதல் 2 முறை மூச்சுக்காற்று கொடுத்தபோதும் அசைவில்லாமல் இருந்து பாம்பு மூன்றாவது முறை மூச்சுக்காற்று கொடுத்தபின்பு உயிர் பிழைத்துள்ளது.

    உயிர்பிழைத்த பாம்பு பின்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து தத்வி காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பாம்பை செல்லா பிடித்து வந்த போது வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பு படம் எடுத்தது.
    • பொதுவாக இது போன்ற வெள்ளை நிற நாகங்கள் இல்லை.

    கடலூர்:

    கடலூர் பச்சையாங் குப்பம் பகுதியில் ஹார்டு வேர்ஸ் கடை நடத்தி வருபவர் லெனின்.

    இவருடைய கடைக்குள் பாம்பு புகுந்து விட்டதாக வன ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து செல்லா கடைக்கு சென்று பார்த்த போது அது அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு என்பது தெரிய வந்தது.

    அந்த பாம்பை செல்லா பிடித்து வந்த போது வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பு படம் எடுத்தது. இதனை அங்கு இருந்த மக்கள் ரசித்தனர். இந்த நிலையில் இந்த அரியவகை வெள்ளை நிற பாம்பு பாதுகாப்பாக காப்பு காட்டில் விடப்பட்டது.

    பொதுவாக இது போன்ற வெள்ளை நிற நாகங்கள் இல்லை என்றாலும் ஜீன் குறைபாடு காரணமாக ஓரிரு பாம்புகள் இது போன்று வெள்ளை நிறத்தில் இருப்பதாக வன ஆர்வலர் செல்லா தெரிவித்தார்.

    ×