search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக் சர்மா"

    • இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன் (ஒருநாள்) ஆகியோர் இடம் பெறவில்லை.
    • சாம்சன் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

    இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20-யும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

    இதற்கான டி20 அணியையும் ஒருநாள் அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவும் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் தேர்வுக்கு லோக் சபா எம்.பி.யும் கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் சுவாரசியமான அணி தேர்வு. சாம்சன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    அதேபோல அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே தொடரில் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தவர். அவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த வீரர்களின் வெற்றி, தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. எப்படியும் அணிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

    இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய டி20 அணி:

    சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.

    இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • ருதுராஜ், குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
    • சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த தொடரில் முக்கிய வீரர்களாக கருதப்படும் ஜடேஜா, குல்தீப் யாதவ், ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன்(ஒருநாள் தொடரில்) ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ், ஜடேஜா உலகக் கோப்பையில் விளையாடினர். அதனால் அவருக்கு ஓய்வு கொடுப்பதற்காக கூட அவர்கள் அணியில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ், சாம்சன் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அபிஷேக் சர்மா ஒரு சதம் விளாசினார். ருதுராஜ் 3 போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதம் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார். இதை தவிர சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை.

    இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை வருவார் செல்வார் என்பது போலவே இருக்கும். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியில் இடம்பெறுவார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறமாட்டார். அப்படி அணியில் இடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதற்கு அடுத்த தொடரில் அவர் இடம் பெறமாட்டார். இப்படி தான் இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை நகர்கிறது. அந்த வகையில் தற்போதும் அவரை கழற்றி விட்டுள்ளனர்.

    நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் இந்திய அணியில் சாம்சன் இடம் பிடித்தார். தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடி சதமும் அடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் அவர் இடம் பெறவில்லை. தற்போதும் அவரும் இடம் பெறாதது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 அணி விவரம் பின்வருமாறு:-

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

    ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 போட்டியில் இவர்கள் இடம் பெற முடியவில்லை.
    • சாய்சுதர்சன் 2-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி இருந்தார்.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை காணப்படுகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது போட்டியில் இந்தியா 100 ரன் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹராரேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியிலும் இந்திய அணி அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த போட்டியில் இந்திய அணி 234 ரன் குவித்து இருந்தது. இந்த போட்டியிலும் வென்று இந்தியா முன்னிலை பெறும் வேட்கையில் உள்ளது.

    சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 11-வது ஆட்ட மாகும். இதுவரை நடந்த 10 போட்டிகளில இந்தியா 7-ல், ஜிம்பாப்வே 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணியுடன் ஜெய்ஸ்வால், சஞ்சுசாம்சன், ஷிவம்துபே ஆகியோர் இணைந்துள்ளனர்.

    வெஸ்ட்இண்டீசில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர்கள் 3 பேரும் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 போட்டியில் இவர்கள் இடம் பெற முடியவில்லை.

    தற்போது அவர்கள் இந்திய அணியில் இணைந்து உள்ளதால் சாய்சுதர்சன், ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் சர்மா ஆகியோர் நாடு திரும்புகிறார்கள். இவர்கள் முதல் 2 போட்டிகளுக்கு மட்டும் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

    இதில் சாய்சுதர்சன் 2-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி இருந்தார். ஆனால் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார்.
    • இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை அபிஷேக் சர்மா தட்டி சென்றார்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைக் குவித்தது.

    அதன்பின் விளையாடிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு அபிஷேக் சர்மா, தனது ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனுமான யுவராஜ் சிங்குடன் வீடியோ கால் வாயிலாக உரையாடினார். அப்போது யுவாராஜ் சிங் அபிஷேக் சர்மாவிடம், "உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் அதற்கு தகுதியானவர். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். இன்னும் பல வர உள்ளன" என்று பாராட்டியுள்ளார்.

    இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் அவர் தனது இரண்டாவது போட்டியிலேயே சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைந்த இன்னிங்சில் சதமடித்த வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.

    • ஒரு இளம் வீரராக அன்றைய நாள் உங்களுக்கானதாக அமைந்தால் அன்று நீங்கள் நன்றாக செயல்பட வேண்டும்.
    • நீ எதிரணியை அடிக்க வேண்டும் என்று ருதுராஜ் என்னிடம் சொன்னார்.

    ஹராரே:

    இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன், ரிங்கு சிங் 48 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் ஒருவேளை பந்து என்னுடைய இடத்தில் இருந்தால் அது முதல் பந்தாக இருந்தாலும் நான் அதை அடித்து நொறுக்கிச் செல்வேன் என அபிஷேக் சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது என்னுடைய சிறந்த செயல்பாடு என்று நினைக்கிறேன். முதல் போட்டியில் சந்தித்த தோல்வி எங்களுக்கு எளிதல்ல. இன்று என்னுடைய நாளாக உணர்ந்தேன். எனவே அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். டி20 என்பது வேகத்தை பயன்படுத்தி அதை கடைசி வரை எடுத்துச் செல்வது பற்றியதாகும். இந்த நேரத்தில் என் மீது தன்னம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மற்றும் அணி நிர்வாகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    ஒரு இளம் வீரராக அன்றைய நாள் உங்களுக்கானதாக அமைந்தால் அன்று நீங்கள் நன்றாக செயல்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஓவராக எடுத்து விளையாடினோம். நீ எதிரணியை அடிக்க வேண்டும் என்று ருதுராஜ் என்னிடம் சொன்னார். எப்போதும் எனது திறமையை நான் நம்புகிறேன். ஒருவேளை பந்து என்னுடைய இடத்தில் இருந்தால் அது முதல் பந்தாக இருந்தாலும் நான் அதை அடித்து நொறுக்கிச் செல்வேன்.

    என்று கூறினார்.

    • முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 134 ரன்களை எடுத்து தோற்றது.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 234 ரன்களைக் குவித்தது. முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

    ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் வெஸ்லி மதேவரே ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென்னெட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    • முதலில் ஆடிய இந்தியா 234 ரன்களை குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

     அடுத்து கெய்க்வாட்டுடன் ரிங்கு சிங் இணைந்தார். ருத்ராஜ் அரை சதம் கடந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களைக் குவித்துள்ளது. ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார்.

    முதலில் நிதானமாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியில் இறங்கினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார்.

    • அவர் இந்திய அணியின் கதவுகளை சாதாரணமாக தட்டவில்லை. கிட்டத்தட்ட உடைத்து திறந்துள்ளார்.
    • இந்த ஐபிஎல் முழுவதும் அவருடைய பேட்டிங் போல மற்ற இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் தேர்வுக்குழு கதவையும் கிட்டத்தட்ட உடைத்துள்ளதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் இந்திய அணியின் கதவுகளை சாதாரணமாக தட்டவில்லை. கிட்டத்தட்ட உடைத்து திறந்துள்ளார். இந்த ஐபிஎல் முழுவதும் அவருடைய பேட்டிங் போல மற்ற இளம் வீரர்கள் பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

    அந்தளவுக்கு பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர் இன்னும் பந்து வீசவில்லை. அவர் நல்ல ஆல் ரவுண்டர். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அவர் சதத்தை தவற விட்டதற்காக மகிழ்ச்சியுடன் இல்லை. ஆனால் அவர் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இன்னிங்ஸை விளையாடினார். ரஞ்சிக் கோப்பையில் என்னுடைய தலைமையில் தான் அவர் பஞ்சாப் அணியில் அறிமுகமானார்.

    அந்த வகையில் இந்தளவுக்கு வளர்ந்து அவர் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தற்போது இந்திய அணியில் விளையாடுவதற்கான கதவை சுற்றியுள்ளார். ஒருநாள் அவர் இந்திய அணிக்குள் நுழைந்து விடுவார்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

    அதே போல அபிஷேக் சர்மா விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங்கும் சமீபத்தில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Abhishek Sharma will be ready for India in six months Yuvraj Singh
    • ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 வயதான அபிஷேக் சர்மா யார் பந்து வீசினாலும் சிக்சர், பவுண்டரி விளாசுகிறார். டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து பவர்பிளேயில் எதிரணியை பயமுறுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.

    இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்டசத்திர ஆல்ரவுண்டர் யுராவஜ் சிங் கூறுகையில் இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்கு தயாராகிவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

    அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    இந்திய அணியில் தேர்வு ஆவதற்கான நிலையில் உள்ளார். ஆனால், தற்போது அவர் உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பதாக நினைக்கவில்லை. உலகக்கோப்பையை பொருத்தவரையில் நாம் அனுபவமான வீரர்களை எடுக்க வேண்டும். உண்மையிலேயே சில வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். உலகக் கோப்பைக்கப் பிறகு, அவர் இந்தியாவுக்காக விளையாட தயாராக வேண்டும். இதில்தான் அவர் கவனம் செலுத்த வேண்டும். வரும் ஆறு மாதங்கள் அபிஷேக் சர்மாவுக்கு முக்கியமானது.

    அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவருடைய ஸ்டிரைக் ரேட் அபாரம். ஆனால் மிகப்பெரிய ஸ்கோர் இன்னும் வரவில்லை. இதுபோன்ற ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம். சிறந்த ஸ்டிரைக் ரேட் இருந்தபோதிலும், நீங்கள் இந்தியாவுக்கு தகுதியானவராக சில பெரிய ஸ்கோர்கள் தேவை.

    பெரிய ஷாட்டுகள் அடிக்கும் திறன் அவரிடம் உள்ளது. இவர் பெரிய ஷாட் அடிப்பது சிறந்தது. ஆனால், ரொட்டேட் ஸ்டிரைக் செய்வதற்கு சிங்கிள் எடுப்பது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறப்பாக பந்து வீசும் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, மற்ற பந்து வீச்சாளர்களை டார்கெட் செய்வது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

    டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து அவர் அதிக நம்பிக்கை பெற்றுக் கொண்டிருப்பார். தற்போது டிராவிஸ் உலகத்தரம் வாய்ந்த வீரர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்துள்ளார். அவர் மிகப்பெரிய போட்டிக்கான வீரர். சிறந்த தொடக்கத்தை எப்படி மிகப்பெரிய ஸ்கோராக மாற்றுவது என்பதை கற்றுக் கொள்ள அபிஷேக் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இதைத்தான் அவர் டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின
    • தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார்

    ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின.

    தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை உற்சாகப்படுத்தினார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆட்டநாயகன் விருது கொடுத்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது. அதன்படி அபிஷேக் சர்மாவுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.

    இதே போல் கடந்த முறை, ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அபிஷேக் சர்மா 22 பந்தில் 68 ரன்கள் விளாசினார்.
    • 3 பவுண்டரி, 7 சிக்ஸ் விளாசிய அவர், ஐதராபாத் அணிக்காக அதிவே அரைசதத்தை பதிவு செய்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டிளிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான இலக்கை துரத்தியபோது 209 ரன்கள் தேவை என்ற நிலையில் 204 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    நேற்று மும்பை அணிக்கெதிராக 277 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தது. இரண்டு போட்டிகளிலும் 23 வயதேயான இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார். கொல்கத்தா அணிக்கெதிராக 19 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் விளாசினார்.

    நேற்று 22 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார். மேலும் ஐதராபாத் அணிக்காக அதிவேக (18 பந்தில்) அரைசதத்தை பதிவு செய்தார்.

    இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இவர் டிராவிட் ஹெட் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் (22 பந்தில்) குவித்தது குறிப்பிடத்தக்கது.

    தனது அதிரடிக்கு அணி நிர்வாகம் வழங்கியுள்ள சுதந்திரம்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உண்மையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம் என்று நான் உணரவில்லை. வழக்கம்போல் நான் அரைசதம் அடித்ததும் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அவுட்டாகி வெளியே வந்த பின்னர்தான் அதிவேக அரைசதம் என உணர்ந்தேன். அதை நான் ரசித்தேன்.

    இந்த போட்டிக்கு முன்னதாக பேட்ஸ்மேன் அனைவருக்கும் மிகவும் எளிதான தகவல் பரிமாறப்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த தகவல், ஒவ்வொருவரும் களத்திற்கு செல்ல வேண்டும். உங்களுடைய அற்புதத்தை (தங்களுக்குள் இருக்கும் திறமையான ஆட்டம்) வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் அது. உங்களுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருந்து நீங்கள் இதை பெறும்போது, அது மிகப்பெரிய நேர்மறையான தகவலாக இருக்கும். இது உண்மையிலேயே அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஆதரவாக இருக்கும்.

    எனக்கு மிகவும் பிடித்தவரான டிராவிட் ஹெட் உடன் இணைந்து பேட்டிங் செய்தேன். அவருடன் இணைந்து பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்தேன்.

    இவ்வாறு அபிஷேக் சர்மா தெரிவித்தார்.

    ×