என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தார் ஓபன்"

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    கத்தார்:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. இரண்டாவது காலிறுதியில் ரஷிய வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவ், செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக்குடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 4-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் ரஷியாவின் கச்சனாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    கத்தார்:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.

    முதல் அரையிறுதியில் ரஷிய வீரர் கச்சனாவ், ஆஸ்திரேலிய வீரர் அலெக்சி பாப்ரியனுடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6 (14-12), 6-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக், பிரெஞ்சு வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மென்சிக் 6-4, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்றது.
    • நேற்று நடந்த போட்டியில் ரஷியாவின் கச்சனாவ் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    கத்தார்:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

    இதில் ரஷிய வீரர் கச்சனாவ், செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக்குடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6 (14-12), 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • கோகோ காப்- மார்டா ஒலேஹிவ்னா கோஸ்ட்யுக் ஆகியோர் மோதினர்.
    • முதல் செட்டை மார்டா எளிதாக வென்றார்.

    கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் உக்ரைன் வீராங்கனையான மார்டா கோஸ்ட்யுக் ஆகியோர் மோதினர்.

    இதில் முதல் செட்டை மார்டா எளிதாக வென்றார். இதனையடுத்து 2-வது செட் பரபரப்பாக சென்றது. இதிலும் மார்டோ 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் 2-6, 5-7 என்ற கணக்கில் கோகோ காப் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-7 (1-7) என இழந்த ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 7-6 (7-1) 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவாகியா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் எலினா ரிபாகினா, இகா ஸ்வியாடெக்குடன் மோத உள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 6-ம் இடம் பிடித்தவரும், அமெரிக்க வீராங்கனையுமான ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் 4-6 என முதல் செட்டை இழந்த அலெக்சாண்ட்ரோவா அடுத்த இரு செட்களை 6-1, 6-1 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 7-5 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் செட்டை 3-6 என இழந்தார்.
    • 2-வது செட்டை 1-6 விரைவில் இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

    கத்தார் ஓபன் டென்னிஸ் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி போட்டியில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக், தரநிலை பெறாத லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார்.

    இதில் ஸ்வியாடெக் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓஸ்டாபென்கோ அபாரமாக விளையாடினார். அவரது ஆட்டத்திற்கு ஸ்வியாடெக்கால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இதனால் 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஓஸ்டாபென்கோ இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    4 முறை ஏஸ் வரை சென்ற நிலையில் கேம்-ஐ வென்றார் ஓஸ்டாபென்கோ. ஆனால் ஸ்வியாடெக் ஒரேயொரு முறைதான் ஏஸ் வரை சென்ற நிலையில் கேம்-ஐ வென்றார். 10-ல் ஐந்து முறை பிரேக் பாயிண்ட்ஸ் பெற்றார் ஓஸ்டாபென்கோ. அதேவேளையில் ஸ்வியாடெக் 3-ல் ஒருமுறைதான் பிரோக் பாயிண்ட் பெற்றார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அமெண்டா வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமெண்டா அனிசிமோவா, ரஷிய வீராங்கனை எகடெரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் அனிசிமோவா அதிரடியாக ஆடி 6-3, 6-3 என எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, லாத்வியாவின் ஒஸ்டாபென்கோ உடன் மோத உள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரனி ஜோடி, சீனாவின் ஜியாங் ஜின்யு-தைவானின் வூ பாங் ஜோடியுடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-5, 7-6 (12-10) என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அமண்டா சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிஸ்மோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிஸ்மோவா 6-4, 6-3 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, ஸ்பெயினின் டேனியல் மெரிடா-கத்தாரின் முபாரக் அல்-ஹராசி ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    ×