என் மலர்
நீங்கள் தேடியது "தேர்வு ரத்து"
- எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
- தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 17ம் தேதி மற்றும் 18ம் தேதி நடைபெற்ற காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
60 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்து சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் வெளியான நிலையில் உ.பி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
- 10-ம் வகுப்புக்கான ஆங்கில தேர்வு நேற்றும், 12-ம் வகுப்புக்கு இன்றும் நடைபெறுவதாக இருந்தது.
- 10-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளுக்கு பதிலாக, 12-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் பார்சலை ஆசிரியர்கள் தவறுதலாக திறந்து விட்டனர்.
தர்மசாலா:
இமாச்சல பிரதேசத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. இதில் 10-ம் வகுப்புக்கான ஆங்கில தேர்வு நேற்றும், 12-ம் வகுப்புக்கு இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.
இதில் சம்பா மாவட்டத்தின் சொவாரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளுக்கு பதிலாக, 12-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் பார்சலை ஆசிரியர்கள் தவறுதலாக திறந்து விட்டனர்.
இதனால் 12-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே இன்றைய 12-ம் வகுப்பு ஆங்கில தேர்வை ரத்து செய்து மாநில அரசு அறிவித்து உள்ளது.